எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,ஏப்.24 - தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைக்கான பொதுத் தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதம் எதிர்பாராத அளவு உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. அரசால் பல இன்னல்களை அனுபவித்த மக்கள் வெகுண்டெழுந்ததன் விளைவே இந்த ஓட்டு பதிவு சதவீத அதிகரிப்புக்கு காரணம் என்றே தோன்றுகிறது. ஆனால் மாறாக, தி.மு.க. தரப்பில் தங்கள் ஆட்சிக் காலத்தின் போது வழங்கிய இலவச பொருட்களால்தான் மக்கள் அதிக எண்ணிக்கையில் ஓட்டு அளித்துள்ளதாக கனவில் உலா வருகின்றனர்.
கடந்த 13 ம் தேதி நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் சென்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் கூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக சில வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நேரம் கூடுதலாக்கப்பட்டது. அது மட்டுமல்லாது, இதுநாள் வரை வாக்களிக்காதவர்களும், புதிய வாக்காளர்களும் ஆர்வமுடன் வாக்களிக்க சென்றதால் தமிழகத்தின் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஒரு புதிய எழுச்சியை மக்களிடம் காண முடிந்தது. கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பட்ட துயரங்களுக்கு தீர்வு காண்பதற்காக மக்கள் எழுச்சி அடைந்துள்ளனர் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கருத்து தெரிவித்திருந்தார். மக்களின் இந்த உத்வேக எழுச்சியே ஓட்டுப் பதிவு சதவீத அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.
இதுவரை தமிழக தேர்தல்களில் மக்கள் மிகுந்த தெளிவான முடிவுகளையே எடுத்து வந்துள்ளனர். அதிகளவு ஓட்டுப் பதிவு சதவீதத்தினால் கடந்த 1967 ல் தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அன்றைய நிலையில் காங்கிரசின் ஆட்சிக்கு எதிராக மக்கள் வீறுகொண்டு எழுந்ததே இதற்கு காரணம். அதே நேரம் கழுத்தில் குண்டடிபட்டு கட்டுடன் எம்.ஜி.ஆர். அமர்ந்திருப்பது போன்ற போஸ்டர்களும் ஒரு காரணமாகும். அதைத் தொடர்ந்து 1977 ல் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது கருணாநிதியின் ஆட்சிக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்ததின் பலனாக அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆரை மக்கள் வெற்றியடைய செய்தனர். இதையடுத்து வந்த தேர்தல்களிலும் எம்.ஜி.ஆருக்கு வெற்றிக் கனியை தொடர்ந்து வாரிக் கொடுத்தனர் தமிழக மக்கள்.
இதையடுத்து 1991 தேர்தலின் போது கருணாநிதியின் ஆட்சிக்கு எதிராக வீசிய அலையில் அ.தி.மு.க 163 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இந்த காலக்கட்டங்களில் பல சிறப்பான திட்டங்களை கொண்டு வந்த ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பற்றி பல்வேறு அவதூறு செய்திகளை பரப்பிய தி.மு.க.வினரை நம்பி 1996 ல் தமிழக மக்கள் வாக்களித்து அக்கட்சியை வெற்றி பெற செய்தனர்.
அதையடுத்து வந்த அ.தி.மு.க ஆட்சியில் அனைத்து வகையிலும் நிம்மதியாக மக்கள் இருந்தனர். ஆனால் 2006 - 11 தி.மு.க. ஆட்சியில் ஒட்டு மொத்த தமிழகமே பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறது. குறிப்பாக, மின்வெட்டால் பல தொழில்கள் நசிவடைந்ததும், தொழிலாளர்கள் வேலையிழந்ததும், தேர்வு நேரத்தில் மாணவ, மாணவியர்கள் படிக்க முடியாமல் அவதிக்குள்ளானதும், அனைத்து பொருட்களின் விலை உயர்வால் வருவாய்க்குள் குடும்பம் நடத்த முடியாமல் பெண்கள் தவிப்புக்குள்ளானதும், கொலை, கொள்ளையால் மக்கள் அச்சத்தில் பாதிக்கப்பட்டுள்ளதும் என பல்வேறு துயரங்களை அனுபவித்து வந்தனர் மக்கள்.
இந்த நிலையில் கடந்த 13 ம் தேதி தமிழக சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வாக்குப் பதிவில் அதிக ஓட்டு சதவீதமும் தங்களுக்கே சாதகமாக இருக்கும் என்று தி.மு.க.வினர் பகல் கனவு கண்டு வருகின்றனர். தமிழக தேர்தல் வரலாற்றில் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி, அடுத்து வரும் தேர்தலில் தோல்வியை தழுவியே சென்றுள்ளனர். 1991 ல் அ.தி.மு.க.வும், 1996 ல் தி.மு.க.வும், 2001 ல் அ.தி.மு.க.வும், 2006 ல் தி.மு.க.வும் ஆட்சியை பிடித்துள்ளன. அந்த முறையில் தற்போது 2011 ல் அ.தி.மு.க ஆட்சி என்பது உறுதியான ஒன்றாகி விட்டது.
மேலும் தங்களது தேர்தல் அறிக்கையை கதாநாயகி என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருந்தாலும், நடந்து முடிந்த தேர்தலில் கதாநாயகனாக விளங்கியது என்னவோ தேர்தல் கமிஷன்தான். தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகளால் தி.மு.க.வினரின் தில்லுமுல்லு வேலைகள் தவிடுபொடியாகிப் போனது. மேலும் தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் மக்களிடம் எழுந்த இந்த மவுனப் புரட்சி ஆகியவையே வாக்கு பதிவு சதவீத உயர்வுக்கு காரணமாக அமைந்ததால் இந்த தேர்தல் முடிவு தி.மு.கவுக்கு சாதகமாக இருக்காது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.