எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பரங்குன்றம்,ஏப்.24 - தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைக்கான பொதுத் தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதம் எதிர்பாராத அளவு உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. அரசால் பல இன்னல்களை அனுபவித்த மக்கள் வெகுண்டெழுந்ததன் விளைவே இந்த ஓட்டு பதிவு சதவீத அதிகரிப்புக்கு காரணம் என்றே தோன்றுகிறது. ஆனால் மாறாக, தி.மு.க. தரப்பில் தங்கள் ஆட்சிக் காலத்தின் போது வழங்கிய இலவச பொருட்களால்தான் மக்கள் அதிக எண்ணிக்கையில் ஓட்டு அளித்துள்ளதாக கனவில் உலா வருகின்றனர்.
கடந்த 13 ம் தேதி நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் சென்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் கூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக சில வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நேரம் கூடுதலாக்கப்பட்டது. அது மட்டுமல்லாது, இதுநாள் வரை வாக்களிக்காதவர்களும், புதிய வாக்காளர்களும் ஆர்வமுடன் வாக்களிக்க சென்றதால் தமிழகத்தின் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஒரு புதிய எழுச்சியை மக்களிடம் காண முடிந்தது. கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பட்ட துயரங்களுக்கு தீர்வு காண்பதற்காக மக்கள் எழுச்சி அடைந்துள்ளனர் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கருத்து தெரிவித்திருந்தார். மக்களின் இந்த உத்வேக எழுச்சியே ஓட்டுப் பதிவு சதவீத அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.
இதுவரை தமிழக தேர்தல்களில் மக்கள் மிகுந்த தெளிவான முடிவுகளையே எடுத்து வந்துள்ளனர். அதிகளவு ஓட்டுப் பதிவு சதவீதத்தினால் கடந்த 1967 ல் தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அன்றைய நிலையில் காங்கிரசின் ஆட்சிக்கு எதிராக மக்கள் வீறுகொண்டு எழுந்ததே இதற்கு காரணம். அதே நேரம் கழுத்தில் குண்டடிபட்டு கட்டுடன் எம்.ஜி.ஆர். அமர்ந்திருப்பது போன்ற போஸ்டர்களும் ஒரு காரணமாகும். அதைத் தொடர்ந்து 1977 ல் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது கருணாநிதியின் ஆட்சிக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்ததின் பலனாக அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆரை மக்கள் வெற்றியடைய செய்தனர். இதையடுத்து வந்த தேர்தல்களிலும் எம்.ஜி.ஆருக்கு வெற்றிக் கனியை தொடர்ந்து வாரிக் கொடுத்தனர் தமிழக மக்கள்.
இதையடுத்து 1991 தேர்தலின் போது கருணாநிதியின் ஆட்சிக்கு எதிராக வீசிய அலையில் அ.தி.மு.க 163 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இந்த காலக்கட்டங்களில் பல சிறப்பான திட்டங்களை கொண்டு வந்த ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பற்றி பல்வேறு அவதூறு செய்திகளை பரப்பிய தி.மு.க.வினரை நம்பி 1996 ல் தமிழக மக்கள் வாக்களித்து அக்கட்சியை வெற்றி பெற செய்தனர்.
அதையடுத்து வந்த அ.தி.மு.க ஆட்சியில் அனைத்து வகையிலும் நிம்மதியாக மக்கள் இருந்தனர். ஆனால் 2006 - 11 தி.மு.க. ஆட்சியில் ஒட்டு மொத்த தமிழகமே பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறது. குறிப்பாக, மின்வெட்டால் பல தொழில்கள் நசிவடைந்ததும், தொழிலாளர்கள் வேலையிழந்ததும், தேர்வு நேரத்தில் மாணவ, மாணவியர்கள் படிக்க முடியாமல் அவதிக்குள்ளானதும், அனைத்து பொருட்களின் விலை உயர்வால் வருவாய்க்குள் குடும்பம் நடத்த முடியாமல் பெண்கள் தவிப்புக்குள்ளானதும், கொலை, கொள்ளையால் மக்கள் அச்சத்தில் பாதிக்கப்பட்டுள்ளதும் என பல்வேறு துயரங்களை அனுபவித்து வந்தனர் மக்கள்.
இந்த நிலையில் கடந்த 13 ம் தேதி தமிழக சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வாக்குப் பதிவில் அதிக ஓட்டு சதவீதமும் தங்களுக்கே சாதகமாக இருக்கும் என்று தி.மு.க.வினர் பகல் கனவு கண்டு வருகின்றனர். தமிழக தேர்தல் வரலாற்றில் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி, அடுத்து வரும் தேர்தலில் தோல்வியை தழுவியே சென்றுள்ளனர். 1991 ல் அ.தி.மு.க.வும், 1996 ல் தி.மு.க.வும், 2001 ல் அ.தி.மு.க.வும், 2006 ல் தி.மு.க.வும் ஆட்சியை பிடித்துள்ளன. அந்த முறையில் தற்போது 2011 ல் அ.தி.மு.க ஆட்சி என்பது உறுதியான ஒன்றாகி விட்டது.
மேலும் தங்களது தேர்தல் அறிக்கையை கதாநாயகி என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருந்தாலும், நடந்து முடிந்த தேர்தலில் கதாநாயகனாக விளங்கியது என்னவோ தேர்தல் கமிஷன்தான். தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகளால் தி.மு.க.வினரின் தில்லுமுல்லு வேலைகள் தவிடுபொடியாகிப் போனது. மேலும் தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் மக்களிடம் எழுந்த இந்த மவுனப் புரட்சி ஆகியவையே வாக்கு பதிவு சதவீத உயர்வுக்கு காரணமாக அமைந்ததால் இந்த தேர்தல் முடிவு தி.மு.கவுக்கு சாதகமாக இருக்காது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு
21 Oct 2025சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025 -
வட தமிழகத்தை நோக்கி நகர்கிறது புயல் சின்னம் : 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
21 Oct 2025சென்னை, வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக தீவிரமாகும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், புயல் சின்னம் வட தமிழகத்தை நோக்கி நகர்வதாக தெரிவ
-
விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
21 Oct 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ந
-
தங்கம் விலை சற்று சரிவு
21 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று மாலை (அக். 21) சவரனுக்கு ரூ.1,440 குறைந்து விற்பனையானது. காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.
-
மழை வெள்ள முன்னேற்பாடு பணிகள்: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
21 Oct 2025சென்னை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
21 Oct 2025புதுடெல்லி : வட கிழக்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட 10 மாவட்டங
-
நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
21 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை
21 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம்
21 Oct 2025புதுடெல்லி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
-
நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
21 Oct 2025புதுடெல்லி, நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம் என நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
ஊட்டி மலை ரயில் ரத்து
21 Oct 2025மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்துசெய்யப்பட்டது. இதனால் சற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு
21 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
நடப்பு ஆண்டில் 7-வது முறையாக நிரம்பியது: மேட்டூர் அணையில் இருந்து 34 அயிரம் கன அடி நீர் திறப்பு
21 Oct 2025மேட்டூர் : காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, நடப்பாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
21 Oct 2025மதுரை, மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
-
போர்க்கால அடிப்படையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
21 Oct 2025சென்னை, போர்க்கால அடிப்படையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க.
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 8 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
21 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதல்
-
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் தகவல்
21 Oct 2025சென்னை : தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
பரூக் அப்துல்லா பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
21 Oct 2025சென்னை : காஷ்மீரின் உரிமைகளுக்காக போராடி வரும் பரூக் அப்துல்லா பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
காவலர் வீரவணக்க நாள்: முதல் முறையாக காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
21 Oct 2025சென்னை, காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்: டெல்லியில் 15 மடங்கு அதிகரித்த காற்று மாசு
21 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மக்கள் 'பட்டாசு தீபாவளி'யை கொண்டாடியதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் நிர்
-
சபரிமலையில் தங்கம் மாயம்: ஐகோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்
21 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் தங்கம் மாயம் ஆனதை தொடர்ந்து ஐகோர்ட்டில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு 10 பேர் மது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
-
சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 151 மெ.டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
21 Oct 2025சென்னை : சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
-
எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு
21 Oct 2025வாஷிங்டன், எச்-1 பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
வைகை அணையில் உபரி நீர் வெளியேற்றம்: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை : ஆற்றுக்குள் இறங்க, குளிக்க தடை
21 Oct 2025ஆண்டிபட்டி : வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.