எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.5 - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைதானபோது வடமாவட்டங்களில் அரசு சொத்துக்களை சேதப்படுத்திய பா.ம.க.வினர் மீது வரும் 30-ம் தேதி முதல் தீவிர விசாரணை நடைபெறவுள்ளது. மேலும், டாஸ்மாக் கடைகள், சாலை, பாலம் மற்றும் அரசு பேருந்துகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை பாமகவினரிடம் எப்படி வசூலிப்பது என்பது குறித்து அரசு அதிகாரி விளக்கினார்.
மாமல்லபுரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பாமகவின் வன்னியர் சங்க மாநாடு நடைபெற்றது. அப்போது மரக்காணம் பகுதியில் பாமகவினரால் கலவரம் ஏற்பட்டது. இதில் அரசு பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் பாமகவினரால் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு நீதி விசாரணை நடத்த கோரி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நடந்த வன்முறை சம்பவத்தால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு பேருந்துகள், தனியார் வாகனங்கள், காவல்துறை வாகனங்கள், டாஸ்மாக் கடைகள், பாலம், சாலைகளை பாமகவினர் சேதப்படுத்தினர்.
பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய பாமகவினரிடம் நஷ்டஈடு பெறப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி பாமகவினர் மீது சுமார் ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதாக சுமார் ரூ.150 கோடி அளவுக்கு நஷ்டஈடு தரவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வருவாய் நிர்வாகத்துறை அலுவலகம் சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக 87 வழக்குகளில் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து வரும் 30 ஆம் தேதி முதல் அனைத்து வழக்குகள் மீதும் விசாரணை நடத்தி நஷ்டஈடு பெற வருவாய் நிர்வாகத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக ஒருவரிடம் எப்படி நஷ்டஈடு பெறப்படும் என்பது குறித்து வருவாய் நிர்வாக உயர் அதிகாரி கூறியதாவது:-
அரசு பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தால், அந்த கண்ணாடியை உடைத்த நபர் மீது போடப்பட்ட எப்ஐஆரின்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அரசு பேருந்தின் முன் பக்க கண்ணாடியின் மதிப்பு 5 ஆயிரம், அந்த கண்ணாடியை மீண்டும் பொருத்துவதற்கு 700 கூலி என்று கணக்கிட்டு ரூ.5,700 நஷ்ட்டு வழங்க சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று டாஸ்மாக் கடையில் உடைத்த பாட்டில்களின் எண்ணிக்கை, அதன் மதிப்பு கணக்கிட்டப்பட்டு நஷ்ட்டு பெறப்படும். பேருந்துக்கு தீ வைத்த வழக்கில் ஒருவர் குற்றம்சாற்றப்பட்டிருந்தால் லட்சக்கணக்கில் நஷ்டஈடு தர வேண்டும்.
இவர்கள் மீதான குற்றச்சாட்டு வரும் 30 ஆம் தேதி முதல் விசாரணைக்கு வரும்போது அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை குறித்து தெரிவிக்கப்படும். குற்றம்சாற்றப்பட்டவர்கள் இந்த சேதத்துக்கு இவ்வளவு மதிப்பு கிடையாது என்று மறுப்பு கூறுவார்கள். விவாதத்துக்கு பிறகு வருவாய் நிர்வாக ஆணையர் ஒரு தொகையை நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறுவார். அந்த தொகையை கண்டிப்பாக அரசுக்கு செலுத்த வேண்டும். இதில் மேல் முறையீடு செய்ய முடியாது, கண்டிப்பாக அபராத தொகை செலுத்தியே ஆக வேண்டும். இவ்வாறு அதிகாரி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026


