எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூலை.5 - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைதானபோது வடமாவட்டங்களில் அரசு சொத்துக்களை சேதப்படுத்திய பா.ம.க.வினர் மீது வரும் 30-ம் தேதி முதல் தீவிர விசாரணை நடைபெறவுள்ளது. மேலும், டாஸ்மாக் கடைகள், சாலை, பாலம் மற்றும் அரசு பேருந்துகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை பாமகவினரிடம் எப்படி வசூலிப்பது என்பது குறித்து அரசு அதிகாரி விளக்கினார்.
மாமல்லபுரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பாமகவின் வன்னியர் சங்க மாநாடு நடைபெற்றது. அப்போது மரக்காணம் பகுதியில் பாமகவினரால் கலவரம் ஏற்பட்டது. இதில் அரசு பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் பாமகவினரால் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு நீதி விசாரணை நடத்த கோரி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நடந்த வன்முறை சம்பவத்தால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு பேருந்துகள், தனியார் வாகனங்கள், காவல்துறை வாகனங்கள், டாஸ்மாக் கடைகள், பாலம், சாலைகளை பாமகவினர் சேதப்படுத்தினர்.
பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய பாமகவினரிடம் நஷ்டஈடு பெறப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி பாமகவினர் மீது சுமார் ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதாக சுமார் ரூ.150 கோடி அளவுக்கு நஷ்டஈடு தரவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வருவாய் நிர்வாகத்துறை அலுவலகம் சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக 87 வழக்குகளில் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து வரும் 30 ஆம் தேதி முதல் அனைத்து வழக்குகள் மீதும் விசாரணை நடத்தி நஷ்டஈடு பெற வருவாய் நிர்வாகத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக ஒருவரிடம் எப்படி நஷ்டஈடு பெறப்படும் என்பது குறித்து வருவாய் நிர்வாக உயர் அதிகாரி கூறியதாவது:-
அரசு பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தால், அந்த கண்ணாடியை உடைத்த நபர் மீது போடப்பட்ட எப்ஐஆரின்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அரசு பேருந்தின் முன் பக்க கண்ணாடியின் மதிப்பு 5 ஆயிரம், அந்த கண்ணாடியை மீண்டும் பொருத்துவதற்கு 700 கூலி என்று கணக்கிட்டு ரூ.5,700 நஷ்ட்டு வழங்க சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று டாஸ்மாக் கடையில் உடைத்த பாட்டில்களின் எண்ணிக்கை, அதன் மதிப்பு கணக்கிட்டப்பட்டு நஷ்ட்டு பெறப்படும். பேருந்துக்கு தீ வைத்த வழக்கில் ஒருவர் குற்றம்சாற்றப்பட்டிருந்தால் லட்சக்கணக்கில் நஷ்டஈடு தர வேண்டும்.
இவர்கள் மீதான குற்றச்சாட்டு வரும் 30 ஆம் தேதி முதல் விசாரணைக்கு வரும்போது அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை குறித்து தெரிவிக்கப்படும். குற்றம்சாற்றப்பட்டவர்கள் இந்த சேதத்துக்கு இவ்வளவு மதிப்பு கிடையாது என்று மறுப்பு கூறுவார்கள். விவாதத்துக்கு பிறகு வருவாய் நிர்வாக ஆணையர் ஒரு தொகையை நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறுவார். அந்த தொகையை கண்டிப்பாக அரசுக்கு செலுத்த வேண்டும். இதில் மேல் முறையீடு செய்ய முடியாது, கண்டிப்பாக அபராத தொகை செலுத்தியே ஆக வேண்டும். இவ்வாறு அதிகாரி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
17 Jul 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதிஷ் அறிவிப்பு
17 Jul 2025பாட்னா, பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
மதுவிலக்கு டி.எஸ்.பி. கார் முன்னறிவிப்பின்றி திரும்ப பெறப்பட்டதா? காவல் துறை விளக்கம்
17 Jul 2025சென்னை, மயிலாடுதுறையில் மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் இன்றி நடந்து சென்றதாக வெளியான செய்திக்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
இந்தியா தாக்கப்பட்டால்... உலகிற்கு வலிமையான செய்தியை கொடுத்திருக்கிறோம்: அமித்ஷா பேச்சு
17 Jul 2025ஜெய்ப்பூர், இந்தியா தாக்கப்பட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என உலகிற்கு ஒரு வலிமையான செய்தியை நாம் கொடுத்திருக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
மதுராந்தகத்தில் 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு
17 Jul 2025சென்னை, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மதுராந்தகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி
-
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
17 Jul 2025கார்கில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
-
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்
17 Jul 2025புதுடெல்லி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
-
ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: ராமதாஸ் உறுதி
17 Jul 2025விழுப்புரம், ''ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
அரியானாவில் 2 முறை நிலநடுக்கம்
17 Jul 2025சண்டிகர், அரியானாவில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ராகுலின் ரேபரேலி பயணம் ரத்து
17 Jul 2025ரேபரேலி, ரேபரேலி பயணத்தை ராகுல்காந்தி ரத்து செய்தார்.
-
ஈராக்; வணிக வளாகத்தில் தீவிபத்து: 60 பேர் உயிரிழப்பு - பலர் படு காயம்
17 Jul 2025பாக்தாத், ஈராக்கில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 60 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.
-
வரிவிதிப்பு முறைகேடு விவகாரம்: ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்புக்குழு: ஐகோர்ட்டு கிளை
17 Jul 2025மதுரை, மதுரை மாநகராட்சி விரி விதிப்பில் முறைகேடு தொடர்பான வழக்கை ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் கனமழைக்கு 124 பேர் பலி
17 Jul 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கனமழைக்கு இதுவரை 124 பேர் உயிரிழந்தனர்.
-
அமெரிக்காவின் அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!
17 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.