முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பக்தர்கள் வழிபட பத்ரிநாத் கோயில் மீண்டும் திறப்பு

திங்கட்கிழமை, 9 மே 2011      ஆன்மிகம்
Image Unavailable

டேராடூன்,மே.10 - பக்தர்கள் வழிபட வசதியாக பத்ரிநாத் கோயில் 6 மாதங்களுக்கு பின்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இமயமலையில் அமர்நாத் சிவன் குகைக்கோயில், கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய கீர்த்தி வாய்ந்த இந்து கோயில்கள் உள்ளன. இந்த கோயில்கள் அனைத்தும் இமயமலைப்பகுதியில் இருக்கின்றன. இங்கு வருடந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருவார்கள். அமர்நாத் சிவன்கோயிலுக்கு செல்பவர்களின் பெயர்கள் பதிவு செய்யும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. அதனையடுத்து கேதர்நாத் கோயில் திறக்கப்பட்டது. இந்த கோயில் திறக்கப்பட்டு இரண்டு நாட்களில் பத்ரிநாத் கோயில் நேற்று திறக்கப்பட்டது. நேற்று காலை சரியாக 5.35 மணிக்கு வேதங்களும் ஸ்லோகங்களும் முழங்க தலைமை பூசாரி ரவால் கேசவ நம்பூதிரி கடவுள் விஷ்ணு சிலையை சிரம் தாழ்த்தி தூக்கிக்கொண்டு கற்பகிரகத்திற்குள் கொண்டு சென்று வைத்தார். கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 133 மீட்டர் தூரத்தில் இந்த கோயில் உள்ளது. கோயில் நடை திறப்பு விழாவில் மாநில முக்கிய அமைச்சர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago