முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் ரவுடிகள் மோதலில் ஒருவர் வெட்டிக் கொலை

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, டிச. 6  - தேவர் ஜெயந்தி குண்டு வீச்சுக்கு பழிக்குப் பழியாக மதுரையில் நேற்று கோர்ட்டுக்கு சென்று திரும்பிய போது, ரவுடி பெட்ரோல் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். 

மதுரையில் கடந்த ஆண்டு அக்டோபர் 30_ம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிலைமான், புளியங்குளம் பகுதிகளைச் சேர்ந்தோர் ஒரு காரில் பசும்பொன் சென்றனர். 

அங்கு தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு மதுரை திரும்பிய போது சிந்தாமணி அருகே கார் மீது மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசியது. 

இதில் காரில் வந்த 20 பேர் உடல் கருகினர். சிகிட்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் 7 பேர் பரிதாபமாக இறந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக அனுப்பானடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 10_க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். 

கைதானவர்கள் கடந்த வாரம் நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி உள்ளனர். இவர்களில் அனுப்பானடியைச் சேர்ந்த முத்துவிஜயன், விக்னேஷ், சோனையா, அழகர், மோகன், மணிகண்டன், சந்திர சேகரன், கார்த்திக், நாகராஜ் , முத்துக் கருப்பன் ஆகியோர் தினமும் மதுரை 6_வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கையெழுத்து போட்டு வந்தனர். 

இவர்கள் கையெழுத்து போட காரில் செல்லும் போது காருக்கு முன்பாகவும், பின்பாகவும் தலா 2 மோட்டார் சைக்கிளில் அவர்களது ஆதரவாளர்கள் செல்வது வழக்கம். 

நேற்று காலையும் கோர்ட்டில் கையெழுத்து போட சோனையா, உள்பட ஜாமீனில் வந்தவர்கள் சென்றனர். 

அவர்களுக்கு பாதுகாப்பாக மோட்டார் சைக்கிள்களிலும் காரிலும், பலர் சென்றனர். கோர்ட்டில் கையெழுத்து போட்டு விட்டு நேற்று பகல் 11 மணி அளவில் தெப்பக்குளம் வழியாக அனுப்பானடி சாலையில் அவர்கள் சென்று கொண்டு இருந்தனர். 

அப்போது அங்கு 3 ஆட்டோ மற்றும் காரில் வந்த ஒரு கும்பல் அவர்களை திடீரென வழிமறித்தது. அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது. 

இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் தீப்பிடித்து எரிய தொடங்கின. அதில் வந்தவர்களும் உடல் கருகினர். 

இதனைக் கண்டு கோர்ட்டில் கையெழுத்து போட்டு வந்தவர்கள் காரில் இருந்து வேகமாக இறங்கி தப்பி ஓட முயன்றனர். 

ஆனால் மர்ம கும்பல் அவர்களை வழிமறித்து அரிவாள் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. 

இந்த சம்பவத்தில் முத்துவிஜயன் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டார். மற்றவர்கள் அரிவாள் வெட்டு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சில் தீக்காயம் அடைந்து சாலையில் விழுந்தனர். 

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மாநகர போலீஸ் துணைக் கமிஷனர் சம ந்த் ரோகன் ராஜேந்திரா மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் கொலைக் கும்பல் தப்பி ஓடி விட்டது. 

போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த சோனையா உள்பட 4 பேரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சோனையாவின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. 

பட்டப்பகலில் பழிக்கு பழியாக நடைபெற்ற இந்த சம்பவம் மதுரை மாநகரில் பதட்டத் தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து புளியங்குளம், சிலைமான் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 

இதே போல் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ள அரசு ஆஸ்பத்திரியிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 

அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் போலீஸ் துணை கமிஷனர் சமந்த் ரோகன் ராஜேந்திரா விரைந்து சென்றார். 

அவரிடம் ஒரு அமைப்பினர் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு விரைவில் குற்றவாளிகள் பிடிக்கப்படுவார்கள் என அவர்களிடம் துணை கமிஷனர் சமந்த் ரோகன் ராஜேந்திரா உறுதி அளித்தார். 

_________________________________________________________

 

5மோகன்1

மதுரையில் நேற்று நடந்த பயங்கரம் 

ரவுடிகள் மோதலில் ஒருவர் வெட்டிக் கொலை 

பழிக்குப்பழியாக நடந்த சம்பவம் 

மதுரை, டிச. 6 _ 

தேவர் ஜெயந்தி குண்டு வீச்சுக்கு பழிக்குப் பழியாக மதுரையில் நேற்று கோர்ட்டுக்கு சென்று திரும்பிய போது, ரவுடி பெட்ரோல் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். 

மதுரையில் கடந்த ஆண்டு அக்டோபர் 30_ம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிலைமான், புளியங்குளம் பகுதிகளைச் சேர்ந்தோர் ஒரு காரில் பசும்பொன் சென்றனர். 

அங்கு தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு மதுரை திரும்பிய போது சிந்தாமணி அருகே கார் மீது மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசியது. 

இதில் காரில் வந்த 20 பேர் உடல் கருகினர். சிகிட்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் 7 பேர் பரிதாபமாக இறந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக அனுப்பானடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 10_க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். 

கைதானவர்கள் கடந்த வாரம் நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி உள்ளனர். இவர்களில் அனுப்பானடியைச் சேர்ந்த முத்துவிஜயன், விக்னேஷ், சோனையா, அழகர், மோகன், மணிகண்டன், சந்திர சேகரன், கார்த்திக், நாகராஜ் , முத்துக் கருப்பன் ஆகியோர் தினமும் மதுரை 6_வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கையெழுத்து போட்டு வந்தனர். 

இவர்கள் கையெழுத்து போட காரில் செல்லும் போது காருக்கு முன்பாகவும், பின்பாகவும் தலா 2 மோட்டார் சைக்கிளில் அவர்களது ஆதரவாளர்கள் செல்வது வழக்கம். 

நேற்று காலையும் கோர்ட்டில் கையெழுத்து போட சோனையா, உள்பட ஜாமீனில் வந்தவர்கள் சென்றனர். 

அவர்களுக்கு பாதுகாப்பாக மோட்டார் சைக்கிள்களிலும் காரிலும், பலர் சென்றனர். கோர்ட்டில் கையெழுத்து போட்டு விட்டு நேற்று பகல் 11 மணி அளவில் தெப்பக்குளம் வழியாக அனுப்பானடி சாலையில் அவர்கள் சென்று கொண்டு இருந்தனர். 

அப்போது அங்கு 3 ஆட்டோ மற்றும் காரில் வந்த ஒரு கும்பல் அவர்களை திடீரென வழிமறித்தது. அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது. 

இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் தீப்பிடித்து எரிய தொடங்கின. அதில் வந்தவர்களும் உடல் கருகினர். 

இதனைக் கண்டு கோர்ட்டில் கையெழுத்து போட்டு வந்தவர்கள் காரில் இருந்து வேகமாக இறங்கி தப்பி ஓட முயன்றனர். 

ஆனால் மர்ம கும்பல் அவர்களை வழிமறித்து அரிவாள் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. 

இந்த சம்பவத்தில் முத்துவிஜயன் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டார். மற்றவர்கள் அரிவாள் வெட்டு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சில் தீக்காயம் அடைந்து சாலையில் விழுந்தனர். 

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மாநகர போலீஸ் துணைக் கமிஷனர் சம ந்த் ரோகன் ராஜேந்திரா மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் கொலைக் கும்பல் தப்பி ஓடி விட்டது. 

போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த சோனையா உள்பட 4 பேரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சோனையாவின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. 

பட்டப்பகலில் பழிக்கு பழியாக நடைபெற்ற இந்த சம்பவம் மதுரை மாநகரில் பதட்டத் தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து புளியங்குளம், சிலைமான் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 

இதே போல் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ள அரசு ஆஸ்பத்திரியிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 

அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் போலீஸ் துணை கமிஷனர் சமந்த் ரோகன் ராஜேந்திரா விரைந்து சென்றார். 

அவரிடம் ஒரு அமைப்பினர் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு விரைவில் குற்றவாளிகள் பிடிக்கப்படுவார்கள் என அவர்களிடம் துணை கமிஷனர் சமந்த் ரோகன் ராஜேந்திரா உறுதி அளித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago