எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜூன்15 - பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றபின்பு முதன்முதலாக நேற்றுமுன்தினம் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார். டெல்லியில் முதல்வர் ஜெயலலிதாவை டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், வலது கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா உள்பட பல முக்கிய பிரமுகர்கள் சந்தித்து பேசினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் ஜெயலலிதா சந்தித்து பேசினார். அப்போது தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவி கோரும் மனுவை பிரதமரிடம் ஜெயலலிதா கொடுத்தார். அதை மன்மோகன் சிங் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்புக்கு பின்னர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தது என்றார். பின்னர் நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் அளித்தார்.
அதன் விபரம் வருமாறு:-
பிரதமர் மன்மோகன் சிங்குடன் சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பிரதமரிடம் தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்த விபரம் அடங்கிய மனு ஒன்றையும் கொடுத்தேன். முதலில் தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையை போக்க வேண்டும். இதற்கு மத்திய தொகுப்பில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு உடனடியாக கொடுக்க வேண்டும். வரும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கூடுதலாக 10 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து நான் முதல்வராகிய சிறிது காலத்திற்குள் தமிழகத்தில் பழுதடைந்திருந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் பழுதுபார்க்கப்பட்டு மின்சார உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு உடனடியாக 1000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய தொகுப்பில் இருந்து உடனடியாக வழங்க வேண்டும். அது குறித்து தீவிர பரிசீலனை செய்வதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்தார். தமிழக கடல் பகுதியில் உள்ள கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் நடைபெற்ற போரில் சிங்கள ராணுவத்தினரால் பெரும் துயரத்திற்கு ஆளாகி அனாதையாக்கப்பட்டுள்ள தமிழர்களின் தற்போதைய உண்மையான வாழ்வு நிலை எப்படி இருக்கிறது என்பதை கண்டறிய தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் குழு தமிழர்கள் பகுதிக்கு சென்றுவர மத்திய அரசு அனுமதி பெற்றுத்தர வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை நீதிமன்றம் மீது மக்களிடத்தில் நம்பிக்கை ஏற்படும்படி உள்ளது. தயாநிதி மாறன் ராஜினாமா செய்யாவிட்டால் அவரை பதவியில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் நீக்க வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு மத்திய அரசு விரைவில் தீர்வுகண்டு அணையில் கூடுதல் தண்ணீரை பெருக்க வழிவகை செய்து கொடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைக்கு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும். சேதுசமுத்திர திட்டத்தில் அ.தி.மு.க. அரசின் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. முதலில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கையே பின்பற்றப்படும். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசுடன் சுமூகமான உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறோம். மத்திய அரசுடன் மோதல் போக்கை நாங்கள் விரும்பவில்லை. மாநிலங்களுக்கிடையே உள்ள நதிநீர் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு விரைவாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாக தாமதத்தை தவிர்க்கவே ஜார்ஜ் கோட்டையில் தலைமை செயலகம் மாற்றப்பட்டுள்ளது. செயல்படுகிற அரசு புதிய தலைமை செயலகத்தில் இயங்க முடியாது. தி.மு.க. செய்த சாதனையெல்லாம் நாட்டின் பணத்தை கொள்ளையடித்ததுதான். கடந்த ஆட்சியில் தி.மு.க.வினர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தனர். தான் செய்த தவறுகளுக்கான விலையை தி.மு.க. இப்போது கொடுத்துக்கொண்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இன்னும் தி.மு.க. நீடிப்பதால் தாம் சோனியா காந்தியை சந்திப்பது உசிதமாக இருக்காது என்று நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க.வை நீக்கிவிட்டு அ.தி.மு.க.வின் ஆதரவை கேட்டால் அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என்று ஜெயலலிதா சூசகமாக தெரிவித்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. இருக்கிறது. மேலும் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசிலும் தி.மு.க. இருக்கிறது. இந்தமாதிரியான சூழ்நிலையில் நான் சோனியா காந்தியை சந்திப்பது சரியாக இருக்காது என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறினார். என்னுடைய ஆதரவை யாராவது விரும்பினால் அவர்கள் என்னிடம் நேராக கேட்க வேண்டும். அவர்கள் சார்பாக நீங்கள் (நிருபர்கள்) கேட்கக்கூடாது என்றார். காங்கிரஸ் பலவீனமாக இருப்பதால் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தயங்குகிறீர்களா? என்று ஒரு நிருபர் கேட்டதற்கு ஜெயலலிதா மேற்கண்டவாறு பதில் அளித்தார். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றதையொட்டி ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அதனால் காங்கிரஸ் -அ.தி.மு.க. இடையே கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
அன்னா ஹசாரே போராட்டம் குறித்து கேட்டதற்கு, ஜனநாயகத்தில் ஊழலை எதிர்த்து போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்றார்.
உங்கள் (ஜெயலலிதா) டெல்லி வருகை காரணமாக தி.மு.க. அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு ஜெயலலிதா நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்டார். இது குறித்து நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. தி.மு.க. கவலை அடைந்திருப்பதாக நீங்கள்( நிருபர்கள்) கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். அணிமாற்றம் குறித்து முன்கூட்டியே கருத்து கூற இயலாது என்றும் ஜெயலலிதா கூறினார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வழக்குகள் எதுவும் என்னாலோ அல்லது எனது கட்சியாலோ தொடரப்படவில்லை. அவை அனைத்தையும் செய்தது மத்திய அரசுதான். எனவே இதில் பழிவாங்கும் செயல் என்ற பேச்சுக்கே இடமில்லை. தி.மு.க.வுக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் தொடர நான் எந்த நிர்பந்தமும் செய்யவில்லை. தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசுதான் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. அனைத்து மட்டங்களிலும் ஊழல், மோசமான நிர்வாகம், ஆட்சியின் அனைத்து பிரிவுகளிலும் ஒரே குடும்பத்தின் ஆதிக்கம், கருத்து சுதந்திரம் பறிப்பு போன்ற பல பிரச்சினைகளால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். ஹிட்லர் ஆட்சியில் இருந்ததுபோல், உகாண்டாவின் இடி அமீன் ஆட்சியில் இருந்தது போல் மக்கள் உணர்ந்தனர் என்றும் ஜெயலலிதா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 3 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்? மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
04 May 2024புதுடெல்லி:தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்?
-
ரிங்கு சிங்கிற்கு கங்குலி ஆறுதல்
04 May 2024டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. 10, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவது எப்பொழுது? - தேர்வு வாரியம் அறிவிப்பு
04 May 2024சென்னை : நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ.
-
நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது
04 May 2024புதுடெல்லி:நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்ம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-05-2024
05 May 2024 -
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.