எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, ஜூலை.- 7 - சென்னையில் உள்ள தயாநிதி மாறன் வீட்டில் இருந்து சன் டி.வி. வரை நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு முறைகேடான முறையில் போடப்பட்டுள்ளதாக கூறப்படும் பைபர் ஆப்டிகல் கேபிள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லியில் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். தற்போது ஜவுளித் துறை அமைச்சராக இருக்கும் தயாநிதி மாறன், முன்பு தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது தனது வீட்டில் பி.எஸ்.என்.எல். இணைப்புகளை பெருமளவில் முறைகேடாக பயன்படுத்தி வந்ததாகவும், கிட்டத்தட்ட ஒரு ரகசிய எக்சேஞ்சாகவே அது செயல்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. மேலும் நூற்றுக்கணக்கான இணைப்புகளை வாங்கி அதை தனது சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் டி.வி சேனல்களுக்கு முறைகேடாக தயாநிதி மாறன் பயன்படுத்தினார் என்பதும் அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டாகும். இது குறித்து மத்திய அரசிடம் சி.பி.ஐ. யும் தெரிவித்துள்ளது. நேற்று சி.பி.ஐ.யால் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் கூட தயாநிதி மாறன் குற்றவாளி என சந்தேகிக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது தயாநிதி மாறன் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் உள்ள தயாநிதி மாறன் வீட்டில் இருந்து தேனாம்பேட்டையில் இருந்த சன் டி.வி. அலுவலகம் வரை ரகசிய கேபிள்கள் 4 கி.மீ. தூரத்துக்கு செயல்பட்டதாக புதிய குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தயாநிதி மாறன் வீட்டில் இருந்து சன் டி.வி. அலுவலகம் வரை 4 கி.மீ. தூரத்துக்கு இந்த கேபிள் கட்டமைப்பு செயல்பட்டுள்ளது. இதை தனது சகோதரர் கலாநிதியின் சன் டி.வி. சேனல்களுக்காக தயாநிதி மாறன் பயன்படுத்தி உள்ளார் என்று டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது. தனது வீட்டில் ரகசிய எக்ஸ்சேஞ்ச் செயல்படவில்லை என்று தயாநிதி மாறன் மறுத்து கூறி வருகிறார். ஆனால் இந்த கட்டமைப்பு ஏன் அமைக்கப்பட்டது என்பது பற்றி அவர் இதுவரை விளக்கமளிக்கவில்லை என்றும் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
தயாநிதி மாறன் வீட்டில் மொத்தம் 323 தொலைபேசி இணைப்புகள் செயல்பட்டதாகவும், அவை சட்டவிரோதமாக பைபர் ஆப்டிகல் மூலம் சன் டி.வியுடன் இணைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சன் டி.வி. வரை பூமியை தோண்டி இந்த பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து சி.பி.ஐ ஆய்வு நடத்தி வருகிறதாம். இந்த இணைப்பகம் குறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் விளக்கமும் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று டெல்லி சென்றார். திட்டக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் தயாநிதி மாறன் வீட்டில் இருந்து சன் டி.வி. வரை பைபர் ஆப்டிகல் கேபிள் அமைக்கப்பட்டது பற்றி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இந்த விஷயம் குறித்து மீடியாவில்தான் பார்த்தேன். இன்று நான் பிசியாக இருக்கிறேன். எனவே நான் சென்னை திரும்பியதும் அது பற்றி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பதிலளித்தார். சென்னையில் ராணுவ வீரரால் சிறுவன் சுடப்பட்டு பலியானது பற்றி கேட்கப்பட்ட போது, சம்பந்தப்பட்ட நபரை ராணுவத்தினர் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தினார். பின்னர் திட்டக்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
அப்போது தமிழ்நாட்டுக்கு அவர் கோரியதை விட கூடுதலாகவே நிதி ஒதுக்கப்பட்டது. அதாவது, தமிழகத்துக்கு ரூ. 23 ஆயிரத்து 535 கோடி ஒதுக்கப்பட்டது. இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார். கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு நேற்றிரவே அவர் சென்னை திரும்பினார். முன்னதாக, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
ராணுவம் குறித்த அவதூறு பேச்சு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்
15 Jul 2025லக்னோ : ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு லக்னோ கோர்ட் ஜாமின் வழங்கியது.
-
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிப்பு
15 Jul 2025சிவகங்கை : திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிக்கப் பட்டுள்ளது.
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
-
காமராஜர் ஆற்றிய பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்: துணை உதயநிதி ஸ்டாலின்
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் ஆற்றியப்பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
15 Jul 2025சென்னை, அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
செஸ்: வைஷாலி முன்னேற்றம்
15 Jul 2025பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.