எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜூலை.- 7 - சென்னையில் உள்ள தயாநிதி மாறன் வீட்டில் இருந்து சன் டி.வி. வரை நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு முறைகேடான முறையில் போடப்பட்டுள்ளதாக கூறப்படும் பைபர் ஆப்டிகல் கேபிள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லியில் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். தற்போது ஜவுளித் துறை அமைச்சராக இருக்கும் தயாநிதி மாறன், முன்பு தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது தனது வீட்டில் பி.எஸ்.என்.எல். இணைப்புகளை பெருமளவில் முறைகேடாக பயன்படுத்தி வந்ததாகவும், கிட்டத்தட்ட ஒரு ரகசிய எக்சேஞ்சாகவே அது செயல்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. மேலும் நூற்றுக்கணக்கான இணைப்புகளை வாங்கி அதை தனது சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் டி.வி சேனல்களுக்கு முறைகேடாக தயாநிதி மாறன் பயன்படுத்தினார் என்பதும் அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டாகும். இது குறித்து மத்திய அரசிடம் சி.பி.ஐ. யும் தெரிவித்துள்ளது. நேற்று சி.பி.ஐ.யால் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் கூட தயாநிதி மாறன் குற்றவாளி என சந்தேகிக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது தயாநிதி மாறன் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் உள்ள தயாநிதி மாறன் வீட்டில் இருந்து தேனாம்பேட்டையில் இருந்த சன் டி.வி. அலுவலகம் வரை ரகசிய கேபிள்கள் 4 கி.மீ. தூரத்துக்கு செயல்பட்டதாக புதிய குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தயாநிதி மாறன் வீட்டில் இருந்து சன் டி.வி. அலுவலகம் வரை 4 கி.மீ. தூரத்துக்கு இந்த கேபிள் கட்டமைப்பு செயல்பட்டுள்ளது. இதை தனது சகோதரர் கலாநிதியின் சன் டி.வி. சேனல்களுக்காக தயாநிதி மாறன் பயன்படுத்தி உள்ளார் என்று டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது. தனது வீட்டில் ரகசிய எக்ஸ்சேஞ்ச் செயல்படவில்லை என்று தயாநிதி மாறன் மறுத்து கூறி வருகிறார். ஆனால் இந்த கட்டமைப்பு ஏன் அமைக்கப்பட்டது என்பது பற்றி அவர் இதுவரை விளக்கமளிக்கவில்லை என்றும் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
தயாநிதி மாறன் வீட்டில் மொத்தம் 323 தொலைபேசி இணைப்புகள் செயல்பட்டதாகவும், அவை சட்டவிரோதமாக பைபர் ஆப்டிகல் மூலம் சன் டி.வியுடன் இணைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சன் டி.வி. வரை பூமியை தோண்டி இந்த பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து சி.பி.ஐ ஆய்வு நடத்தி வருகிறதாம். இந்த இணைப்பகம் குறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் விளக்கமும் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று டெல்லி சென்றார். திட்டக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் தயாநிதி மாறன் வீட்டில் இருந்து சன் டி.வி. வரை பைபர் ஆப்டிகல் கேபிள் அமைக்கப்பட்டது பற்றி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இந்த விஷயம் குறித்து மீடியாவில்தான் பார்த்தேன். இன்று நான் பிசியாக இருக்கிறேன். எனவே நான் சென்னை திரும்பியதும் அது பற்றி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பதிலளித்தார். சென்னையில் ராணுவ வீரரால் சிறுவன் சுடப்பட்டு பலியானது பற்றி கேட்கப்பட்ட போது, சம்பந்தப்பட்ட நபரை ராணுவத்தினர் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தினார். பின்னர் திட்டக்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
அப்போது தமிழ்நாட்டுக்கு அவர் கோரியதை விட கூடுதலாகவே நிதி ஒதுக்கப்பட்டது. அதாவது, தமிழகத்துக்கு ரூ. 23 ஆயிரத்து 535 கோடி ஒதுக்கப்பட்டது. இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார். கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு நேற்றிரவே அவர் சென்னை திரும்பினார். முன்னதாக, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர்: த.வெ.க. நிர்வாகி அருண் ராஜ் பேட்டி
21 Dec 2025கோவை, விஜய் இப்போது நடிகர் அல்ல என்றும் நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும் த.வெ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-12-2025.
21 Dec 2025 -
தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 Dec 2025நெல்லை, தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
செவிலியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
21 Dec 2025சென்னை, செவிலியர்களின் சில கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
உக்ரைன் போர் முடிவுக்கு வருமா...? அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை
21 Dec 2025வாஷிங்டன், உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 396வது நாளாக போர் நீடித்த நிலையில், போரை நிறுத்த அமெரிக்கா - ரஷ்யா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்
21 Dec 2025புதுச்சேரி, தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போதுவரை தொடர்கிறோம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
பூமியின் சுழற்சியிலிருந்து மின்சாரம் தயாரித்த அமெரிக்க விஞ்ஞானிகள்..!
21 Dec 2025நியூயார்க், பூமியின் சுழற்சி, காந்தப்புலத்தைப் பயன்படுத்தி எரிபொருள் இன்றி மின்சாரம் தயாரிக்கும் சிறிய கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
-
தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி
21 Dec 2025கேப் டவுன், தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியான நிலையில், 10 பேர் படுகாயமடைந்தனர்.
-
அரியானாவில் நிலநடுக்கம்
21 Dec 2025சண்டிகர், அரியானாவில் உள்ள ரோஹ்தக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
கிழக்கு சீன கடல் பகுதியில் உலகின் மிகப்பெரிய தங்கப்படிமம் கண்டுபிடிப்பு
21 Dec 2025பெய்ஜிங், கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கடியிலான தங்க படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது.
-
நெல்லைக்கு 3 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
21 Dec 2025நெல்லை, ரூ.16 கோடி செலவில், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய மகளிர் தங்கும் விடுதி உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு 3 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளி
-
நெல்லை மாவட்டத்தில் 15 புதிய பேருந்துகளின் சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டத்திற்கு 15 புதிய பேருந்து போக்குவரத்து சேவையை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
21 Dec 2025நெல்லை, தமிழக நாகரிகத்தின் தொன்மை குறித்து கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
தி.மு.க. கூட்டணியில் தொடர காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்
21 Dec 2025மதுரை, பதவி ஆசை இல்லாததே தி.மு.க. கூட்டணியில் தொடரக் காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் விளக்கமளித்தாா்.
-
வரலாற்றை படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
21 Dec 2025நெல்லை, வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகத்திற்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் விரைவில் அறிவிப்பார்: செந்தில்பாலாஜி தகவல்
21 Dec 2025கோவை, பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. சார்பில் இன்று விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி
21 Dec 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் இன்று (திங்கள்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறத
-
ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: போராட்டத்துக்கு இம்ரான்கான் அழைப்பு
21 Dec 2025லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
-
மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு காந்தியின் பெயர் சூட்டினார் மம்தா
21 Dec 2025கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் அம்மாநில முதல்வர் மம்தா பானார்ஜி சூட்டியுள்ளார்.
-
நீலகிரி மாவட்டத்தில் இன்று உறைபனி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னனை வானிலை ஆய்வு மையம், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று உறைபனி ஏற
-
இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பு: நாடு முழுவதும் டிச. 26 முதல் ரயில் கட்டணம் உயருகிறது
21 Dec 2025புதுடெல்லி, நாடு முழுவதும் வரும் டிசம்பர் 26ம் தேதி முதல் ரயில் கட்டணத்தை மாற்றி அமைத்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
உலகின் முதல் பெரும் பணக்காரர்: 700 பி. டாலர் மதிப்புடன் எலான் மஸ்க் முதலிடம்
21 Dec 2025நியூயார்க், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 700 பில்லியன் டாலரைத் தாண்டியது.
-
வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை: அரசியல் தலைவர் வீட்டுக்கு தீவைப்பு
21 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில் அவரது 7 வயது மகள் உயிரிழந்து உள்ளார்.



