முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்சிங்கிடம் விசாரணை: டெல்லி போலீஸ் முடிவு

புதன்கிழமை, 20 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூலை.20  - பாராளுமன்றத்தில் வாக்களிக்க ரூ ஒரு கோடி பணம் தரப்பட்டதாக எழுந்த வழக்கில் மாநிலங்களவை உறுப்பினரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அமர்சிங்கிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து கருத்து கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி போலீஸ் தரப்பில் இருந்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினரை விசாரணை செய்ய வேண்டுமானால் அவை தலைவரின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். எனவே மத்திய உள்துறையிடம் ஆலோசனை கேட்டு டெல்லி போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. இவ்வழக்கில் அமர்சிங்கின் உதவியாளர் சக்சேனா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இப்போது அமர்சிங்கும் காவல்துறையினரின் வலையில் சிக்குவாரா என்று டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago