எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, செப்.8 - டெல்லி ஐகோர்ட்டு நுழை வாயில் அருகே நேற்று பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 11 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள். எப்போதும் பரபரப்பாக காணப்படும் டெல்லி ஐகோர்ட்டு பகுதியில் நேற்று காலை வழக்கமான பணிகள் துவங்குவதற்கு முன்பாக வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் ஐகோர்ட்டில் நுழைவதற்கான அனுமதிச் சீட்டுக்களை பெற்று 5-வது நுழைவாயில் வழியாக உள்ளே சென்று கொண்டிருந்தனர். நேற்று காலை 10.15 மணிக்கு 5-வது நுழைவாயில் அருகே பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
அதிக சக்திவாய்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 11 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 80 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் தீ அணைப்பு படையினர், போலீஸ் படையினர், மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். குண்டு வெடித்த பகுதியில் மனிதர்களின் கை, கால்கள் உள்ளிட்ட உடல் உறுப்புக்கள் சிதறி கிடந்தன. ஒரே ரத்தக் காடாக அந்த இடம் காட்சி அளித்தது. படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்பு படையினர் உடனுக்குடன் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் டெல்லி போலீஸ் கமிஷனர் அந்த இடத்திற்கு விரைந்து வந்து அந்த இடத்தை பார்வையிட்டார். ஐகோர்ட்டில் நேற்று பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. குண்டு வெடித்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது.
இது தீவிரவாதிகள் நடத்திய சம்பவம்தான் என்பதை மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் உறுதி செய்தார்.
இந்த சம்பவம் நடந்த பகுதியில் தேசிய பாதுகாப்பு படை, தேசிய உளவுத்துறை மற்றும் தடயவியல் துறையை சேர்ந்த அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்ப நாய்களைக் கொண்டு வேறு இடங்களில் ஏதேனும் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றனவா? என்பது குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர். பலியானவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களில் பெரும்பாலோர் ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்குகளில் தொடர்புடைய வர்கள்தான் அதிகமாக உள்ளனர் என்று கூறப்படுகிறது.
குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெல்லி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆங்காங்கே வாகன சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் அறிவித்துள்ளார்.
குண்டு வெடித்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதாக மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்றுள்ள அப்சல்குருவை விடுதலை செய்யாவிட்டால் இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும் என்று அந்த தீவிரவாத குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெடிகுண்டு சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் டெல்லி லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மருத்துவமனை, அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மருத்துவ மனை ( எய்ம்ஸ்) ஆகியவற்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் சிலரது நிலைமை அபாய கட்டத்தில் இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
குண்டு வெடிப்பு நடந்த இடம் ஐகோர்ட்டில் நுழைவதற்கான அனுமதிச்சீட்டுகளை வரிசையில் நின்று பெறுவதற்கான இடம் என்பதால் அங்கு அவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த அனுமதிச்சீட்டு வழங்கும் வரவேற்பு அறை அருகே வைக்கப்பட்டிருந்த ஒரு சூட்கேசில்தான் வெடி குண்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் சம்பவ இடத்தை யாரும் நெருங்காதபடி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 25 ம் தேதி இதே ஐகோர்ட்டுக்கு வெளியே ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. ஆனால் அந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு இப்போது இரண்டாவதாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
குண்டு வெடித்தபோது மக்கள் இடையே பெரும் பீதியும் பதட்டமும் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். குண்டு வெடித்த பகுதியில் கரும் புகை சூழ்ந்திருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். ரத்த வெள்ளத்தில் பலர் துடித்துக்கொண்டிருந்ததை தங்களால் பார்க்க முடிந்தது என்றும் அவர்கள் கூறினர். படுகாயம் அடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்க்க அவர்களது உறவினர்கள் அந்த மருத்துவ மனைகளின் முன்பு கூட்டமாக கூடி கதறி அழுது கொண்டிருந்தனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல்நலக்குறைவால் காலமானார்
14 Jul 2025பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
-
40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
14 Jul 2025சென்னை, டி.எஸ்.பி., உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
கோவா, அரியானா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
14 Jul 2025புதுடெல்லி, கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
அமர்நாத்தில் பனி லிங்கத்தை 2 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
14 Jul 2025ஸ்ரீநகர், அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு : கூடுதல் தலைமை செயலாளர் உறுதி
14 Jul 2025சென்னை : ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்
-
பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி
14 Jul 2025பழனி : பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்தார் சிங்கப்பூர் மந்திரி சண்முகம்.
-
அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Jul 2025திருச்சி : 'அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்' என தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
-
சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
14 Jul 2025புதுடெல்லி : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
மாயக்கூத்து திரை விமர்சனம்
14 Jul 2025எழுத்தாளர் நாகராஜன் கண்ணன், ஒரு கதை எழுதுகிறார்.
-
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் : லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
14 Jul 2025மதுரை : முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி
-
தமிழக எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடக்கோரி த.வெ.க. மனு
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர்
-
விமான விபத்துக்கு பராமரிப்பு பிரச்சினைகள் காரணமில்லை : ஏர் இந்தியா சி.இ.ஓ. தகவல்
14 Jul 2025புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சி.இ.ஓ.
-
சூர்யா சேதுபதிக்கு இயக்குநர் அனல் அரசு புகழாரம்
14 Jul 2025சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை 4 அன்று திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
-
ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கு: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு
14 Jul 2025திருப்பத்தூர் : ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
நடிகை சரோஜாதேவி மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
14 Jul 2025சென்னை, நடிகை சரோஜாதேவி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;
-
கைமேரா இசை வெளியீட்டு விழா
14 Jul 2025மாணிக் ஜெய். என் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.
-
நான் துரோகியா? - மல்லை சத்யா ஆவேசம்
14 Jul 2025சென்னை : ம.தி.மு.க.விற்கு நான் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் நான் துரோகி அல்ல என்று மல்லை சத்யா கூறினார்.
-
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். மீண்டும் திட்டவட்டம்
14 Jul 2025சேலம், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஆய்வுக்கு பயந்து விருதுநகரில் 200-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடல்
14 Jul 2025விருதுநகர் : விருதுநகரில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
-
புதின் அழகாக பேசுகிறார்; ஆனால் குண்டுகளையும் வீசி விடுகிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்கு
14 Jul 2025வாஷிங்டன், புதின் அழகாக பேசுகிறார் . ஆனால் அனைவர் மீதும் குண்டுகளை போடுகிறார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
14 Jul 2025காபுல் : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
உள்ளே செல்ல அனுமதி மறுப்பு: தியாகிகள் கல்லறைக்கு சுவர் ஏறி சென்று முதல்வர் உமர் அஞ்சலி
14 Jul 2025ஸ்ரீநகர் : தியாகிகளின் கல்லறைக்குச் செல்ல முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சுவர் ஏறி குறித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை; தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
14 Jul 2025புதுடெல்லி : பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
நடத்தை விதிகளை மீறல்: சிராஜுக்கு ஐ.சி.சி.அபராதம்
14 Jul 2025லார்ட்ஸ் : 2-வது இன்னிங்சின் போது பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ், ஆக்ரோஷமாக கொண்டாடினார். டக்கெட் முகத்திற்கு முன்பு வந்து முறைத்தப்படி சென்றார்.
-
பயணத்தை தொடங்கியது டிராகன்: சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்
14 Jul 2025நியூயார்க், சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேருடன் பூமியை நோக்கி தனது பயணத்தை டிராகன் விண்கலம் தொடங்கியது. இன்று மாலை அவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர் .