தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, செப்.8 - டெல்லி ஐகோர்ட்டு நுழை வாயில் அருகே நேற்று பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 11 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள். எப்போதும் பரபரப்பாக காணப்படும் டெல்லி ஐகோர்ட்டு பகுதியில் நேற்று காலை வழக்கமான பணிகள் துவங்குவதற்கு முன்பாக வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் ஐகோர்ட்டில் நுழைவதற்கான அனுமதிச் சீட்டுக்களை பெற்று 5-வது நுழைவாயில் வழியாக உள்ளே சென்று கொண்டிருந்தனர். நேற்று காலை 10.15 மணிக்கு 5-வது நுழைவாயில் அருகே பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
அதிக சக்திவாய்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 11 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 80 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் தீ அணைப்பு படையினர், போலீஸ் படையினர், மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். குண்டு வெடித்த பகுதியில் மனிதர்களின் கை, கால்கள் உள்ளிட்ட உடல் உறுப்புக்கள் சிதறி கிடந்தன. ஒரே ரத்தக் காடாக அந்த இடம் காட்சி அளித்தது. படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்பு படையினர் உடனுக்குடன் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் டெல்லி போலீஸ் கமிஷனர் அந்த இடத்திற்கு விரைந்து வந்து அந்த இடத்தை பார்வையிட்டார். ஐகோர்ட்டில் நேற்று பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. குண்டு வெடித்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது.
இது தீவிரவாதிகள் நடத்திய சம்பவம்தான் என்பதை மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் உறுதி செய்தார்.
இந்த சம்பவம் நடந்த பகுதியில் தேசிய பாதுகாப்பு படை, தேசிய உளவுத்துறை மற்றும் தடயவியல் துறையை சேர்ந்த அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்ப நாய்களைக் கொண்டு வேறு இடங்களில் ஏதேனும் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றனவா? என்பது குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர். பலியானவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களில் பெரும்பாலோர் ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்குகளில் தொடர்புடைய வர்கள்தான் அதிகமாக உள்ளனர் என்று கூறப்படுகிறது.
குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெல்லி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆங்காங்கே வாகன சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் அறிவித்துள்ளார்.
குண்டு வெடித்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதாக மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்றுள்ள அப்சல்குருவை விடுதலை செய்யாவிட்டால் இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும் என்று அந்த தீவிரவாத குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெடிகுண்டு சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் டெல்லி லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மருத்துவமனை, அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மருத்துவ மனை ( எய்ம்ஸ்) ஆகியவற்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் சிலரது நிலைமை அபாய கட்டத்தில் இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
குண்டு வெடிப்பு நடந்த இடம் ஐகோர்ட்டில் நுழைவதற்கான அனுமதிச்சீட்டுகளை வரிசையில் நின்று பெறுவதற்கான இடம் என்பதால் அங்கு அவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த அனுமதிச்சீட்டு வழங்கும் வரவேற்பு அறை அருகே வைக்கப்பட்டிருந்த ஒரு சூட்கேசில்தான் வெடி குண்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் சம்பவ இடத்தை யாரும் நெருங்காதபடி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 25 ம் தேதி இதே ஐகோர்ட்டுக்கு வெளியே ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. ஆனால் அந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு இப்போது இரண்டாவதாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
குண்டு வெடித்தபோது மக்கள் இடையே பெரும் பீதியும் பதட்டமும் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். குண்டு வெடித்த பகுதியில் கரும் புகை சூழ்ந்திருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். ரத்த வெள்ளத்தில் பலர் துடித்துக்கொண்டிருந்ததை தங்களால் பார்க்க முடிந்தது என்றும் அவர்கள் கூறினர். படுகாயம் அடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்க்க அவர்களது உறவினர்கள் அந்த மருத்துவ மனைகளின் முன்பு கூட்டமாக கூடி கதறி அழுது கொண்டிருந்தனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
KFC Style பிரைடு சிக்கன்![]() 3 days 18 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 12 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 3 days ago |
-
ஆப்ரிக்க ராட்சத நத்தையால் நடுங்கும் அமெரிக்க நகரம் : மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை
05 Jul 2022புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடா நகரில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
புதிய உத்வேகத்துடன் தமிழக உயர்கல்வித்துறை: பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
05 Jul 2022கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித் துறை துள்ளி எழுந்திருக்கிறது.
-
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு கோஷம்: அவையை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்சே
05 Jul 2022கொழும்பு : இலங்கை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கோ ஹோம் கோத்த என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீரென அவையை விட்டு வெளியேறினார்.
-
விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் ரபேல் நடால்
05 Jul 2022லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
-
அனைவருக்கும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் : டெல்லி மாநாட்டில் அமைச்சர் சக்கரபாணி பேச்சு
05 Jul 2022சென்னை : நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
-
விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர்: அரையிறுதிக்கு தகுதி பெற்றது : சானியா - மேட் பேவிக் ஜோடி
05 Jul 2022லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
-
இதுவரை 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம்: அக்னி வீரர்களில் பெண்கள் மட்டும் 20 சதவீதம் பேர் இருப்பர்: கடற்படை
05 Jul 2022புதுடெல்லி : முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20சதவீதம் பேர் பெண்கள் இருக்கக்கூடும் என்று இந்திய இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
-
இங்கி.க்கு எதிராக தாமதமான பந்துவீச்சு: இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம்
05 Jul 2022பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.சி.சி.
-
கடைசி டெஸ்டில் இனவெறி ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட இந்திய ரசிகர்கள் விசாரிக்க இங்கி. கிரிக்கெட் வாரியம் உத்தரவு
05 Jul 2022பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்
-
வாய்ப்பைத் தவறவிட்ட இந்திய அணி: ரவி சாஸ்திரி விமர்சனம்
05 Jul 2022பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
-
இடைக்கால தடையை நீக்க மறுப்பு: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் ஏன் இந்த அவசரம்? - -தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
05 Jul 2022மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
-
12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சருக்கு ஓ.பி.எஸ். கடிதம்
05 Jul 2022சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை
-
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வருகிறது வார்டு கமிட்டி, ஏரியா சபை : வழிமுறைகள் வெளியீடு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
-
டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கம்
05 Jul 2022இஸ்லாமாபாத் : டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம் : சிவ, சிவா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
05 Jul 2022கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
-
புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் அனுமதி
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
சென்னையில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : இயக்குனர் வீரராகவ ராவ் தகவல்
05 Jul 2022சென்னை : சென்னை, கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
-
தமிழகத்தில் 98 சதவீத ரேசன் பொருட்கள் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் : உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் ரேசன் பொருட்கள் 98 சதவீதம் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்படுவதாக டெல்லியில் நடைபெற்ற உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு மாநாட்டில் உணவுத்
-
நீதி போதனை வகுப்புகள் அறிமுகம்: தமிழகத்தில் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளை குறைப்பு : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : ஜெயக்குமார் பேட்டி
05 Jul 2022சென்னை : கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.
-
அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி
05 Jul 2022வாஷிங்டன் : அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி 13 பேர் மாயம்: தேடும் பணி தீவிரம்
05 Jul 2022ரோம் : இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி மாயமான 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
வெள்ளப் பெருக்கு: குற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை : ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீராடினர்
05 Jul 2022தென்காசி : வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயினருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், நேற்று பழைய குற்றால அரு
-
போரினால் சிதைந்த உக்ரைனை மறுசீரமைக்க 750 பில்லியன் டாலர்கள் தேவை: ஜெலென்ஸ்கி
05 Jul 2022கீவ் : போரினால் சிதைந்த நாட்டை மீண்டும் மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
கடந்த 18 மாதங்களில் மட்டும் 11 சதங்கள் விளாசிய ஜோ ரூட்
05 Jul 2022பார்மிங்காம் : இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் பிரபல பேட்டர் ஜோ ரூட் சதமடித்து அசத்தியுள்ளார்.