எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, டிச.- 26 - தமிழக முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் விழாவில் அறிவித்தபடி, கிறிஸ்துவர்கள் ஜெருசலேம் செல்ல நிதி உதவிக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 500 கிறிஸ்துவர்கள் ஜெருசலேம் செல்ல ரூ.1 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இஸ்லாமிய மக்களின் ஹஜ் புனிதயாத்திரைக்கு அரசு உதவி செய்வதைப் போன்று, கிறிஸ்துவ மக்கள் மேற்கொள்ளும் ஜெருசலெம் புனித யாத்திரைக்கும் அரசு உதவி செய்யவேண்டும் என்று கிறிஸ்துவ சமுதாயத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
20.12.2011 அன்று சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா இது குறித்து ஏற்கெனவே தான் அளித்த வாக்குறுதியை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வருவதற்கு அரசு நிதி உதவி அளிக்கும் என்றும், இத்திட்டம் அனைத்து கிறிஸ்துவப் பிரிவினரையும் உள்ளடக்கியதாக அமையும் என்றும், முதற்கட்டமாக 500 கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் சென்று வர ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவித்தார். இத்திட்டம் தொடர்பாக சிறுபான்மையினர் நல ஆணையரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டதில், இஸ்ரேல் ஏர்லைன் நிறுவனத்தினரால் மும்பையிலிருந்து அம்மான் வழியாக இஸ்ரேலுக்கு சென்று வர இரு வழி விமானக் கட்டணங்களாக ரூ.32,640/ அல்லது ரூ.35,524/ வசூலிக்கப்படுகின்றன என்றும், சென்னையிலிருந்து மும்பை சென்று வர தனியார் விமான நிறுவனங்கள் ரூ.12,000/ வரை கட்டணம் வசூலிக்கின்றன என்றும், எனவே சென்னையிலிருந்து ஜெருசலேம் சென்று வர இரு வழி பயணக் கட்டணம் மட்டும் ரூ.45,000/ முதல் ரூ.47,000/ வரை வசூலிக்கிறார்கள் என்றும் சிறுபான்மையினர் நல ஆணையர் தெரிவித்துள்ளார். மேற்சொன்ன குறிப்புகளின் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் செல்வதற்காக பயணி ஒருவருக்கு விமானக் கட்டண உதவித்தொகையாக ஹஜ் புனிதப் பயணத்திற்காக இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு அதனுடைய நிதித் தொகுப்பிலிருந்து வழங்குவது போன்று, தமிழக அரசு தனது நிதியிலிருந்து ரூ.20,000/ முதல் ரூ.24,000/ வரை வழங்கலாம் என்றும், இந்த பயணக் கட்டண உதவித்தொகை ஜெருசலேம் புனிதப் பயணத்தை ஏர் இந்தியா மற்றும் இஸ்ரேல் ஏர் விமான சேவைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு மட்டுமே பொருந்துமாறு செய்யலாம் என்றும், இதற்கென முதற்கட்டமாக 1000 நபர்களுக்கு ரூ.2 கோடி மாநில அரசின் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யலாம் என்றும், சிறுபான்மையினர் நல ஆணையரகத்தின் மூலம் இது குறித்து விளம்பரம் செய்து விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்து குலுக்கல் முறையில் பயணிகளைத் தேர்வு செய்யலாம் என்றும் சிறுபான்மையினர் நல ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். மேலும், இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்கு எதிர்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கான புனிதப் பயணக் குழு ஒன்றினை ஏற்படுத்தலாம் எனவும் பரிந்துரைத்துள்ளார். சிறுபான்மையினர் நல ஆணையரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்தது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவப் பிரிவினரும் இஸ்ரேலில் உள்ள புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வர அரசு நிதி உதவி அளிக்கும் புதிய திட்டம் ஒன்றினைச் செயல்படுத்த அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது. முதற்கட்டமாக 20112012 ஆம் ஆண்டில் 500 கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் சென்று வருவதற்கு பயணிகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு பயணிக்கு ரூ.20,000/ (ரூபாய் இருபதாயிரம் மட்டும்) வீதம் 500 பயணிகளுக்கு நிதியுதவி வழங்க மொத்தம் ரூ.1,00,00,000 (ரூபாய் ஒரு கோடி மட்டும்) அரசு ஒப்பளிப்பு செய்து ஆணையிடுகிறது. ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கு நிதி உதவி வழங்கும் இத்திட்டம் குறித்து விளம்பரம் செய்து விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்து பயணிகளைத் தேர்வு செய்யும் பணியினை மேற்கொள்ளுமாறு சிறுபான்மையினர் நல ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.இது ஒரு புதுப்பணி குறித்த செலவினமாகும். நாளடைவில் இதற்கு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பெறப்படும். சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் கிடைக்கும் வரையில் எதிர்பாராச் செலவு நிதியிலிருந்து இச்செலவினம் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : தமிழக அரசு பெருமிதம்
11 May 2025சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிட
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை
11 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
-
போரால் ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம்: திருமாவளவன்
11 May 2025சென்னை: போர் என்பது ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம் தரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 May 2025ஊட்டி : 5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
தமிழ்நாட்டில் வரும் 14, 15ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 May 2025சென்னை : தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை மத்திய அரசு உறுதி
11 May 2025புது டில்லி: பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
11 May 2025லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
அன்னையர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
11 May 2025சென்னை: நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 May 2025சென்னை : நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
-
சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு
11 May 2025சென்னை : ஒத்திவைக்கப்பட்டுள்ள சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
11 May 2025புதுடெல்லி : தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
-
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை
11 May 2025சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
11 May 2025சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமருக்கு கார்கே, ராகுல் மீண்டும் கடிதம்
11 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகி
-
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது: இந்திய விமானப்படை அறிவிப்பு
11 May 2025புதுடெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், செயல்பாடுகள் இன்னும் நடந்து வருவதாகவும், ஊகங்களை தவிர்க்குமாறும்
-
பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் இந்தியாவின் பதிலடி கடுமையாக இருக்கும் பிரதமர் நரேந்திரமோடி எச்சரிக்கை
11 May 2025புதுடில்லி: பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், பதிலடி நிச்சயம் கடுமையாக இருக்கும் என அமெரிக்க துணை அதிபர் வான்சிடம், பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியாகி உ
-
அன்னையர் நாள்: த.வெ.க.தலைவர் விஜய் வாழ்த்து
11 May 2025சென்னை : அன்னையர் நாளையொட்டி தவெக தலைவர் விஜய் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
-
வழக்கம் போல செயல்படுகிறது: டெல்லி சர்வதேச விமான நிலையம் அறிவிப்பு
11 May 2025புதுடெல்லி: டெல்லி சர்வதேச விமானநிலையம் வழக்கம் போல இயல்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் முதலிடம்: தமிழக அரசு தகவல்
11 May 2025சென்னை: பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
மதுரையில் கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு: எதிர்சேவையில் திரண்ட பக்தர்கள் இன்று காலை வைகை ஆற்றில் இறங்குகிறார்
11 May 2025மதுரை: மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க கள்ளழகர் கோயிலிருந்து புறப்பட்ட கள்ளழகருக்கு மதுரை மூன்று மாவடியில் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி த
-
இந்தியா, பாக். போர் நிறுத்தம்: புதிய போப் லியோ வரவேற்பு
11 May 2025வாடிகன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு போப் லியோ வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
-
மும்பை: ஜூன் 9 வரை பட்டாசு வெடிக்க தடை
11 May 2025மும்பை : ராக்கெட் உள்பட எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம்: ட்ரம்ப் அறிவிப்பு
11 May 2025வாஷிங்டன்: காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.