எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜன. 26 - சென்னையை அடுத்துள்ள பெருங்குடி ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கிக்கு போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக் கண்ணன், இணை கமிஷனர் சண்முக ராஜேஷ்வரன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். வங்கி கேஷியர் ஆனந்தனை துப்பாக்கி முனையில் மிரட்டிய கொள்ளையர்கள், வாடிக்கையாளர்கள் 22 பேரை அறையில்ட்டி வைத்தனர். பின்னர் ரூ.18 லட்சம் பணத்தை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பிச் சென்றனர். சென்னை போலீசுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த கொள்ளை சம்பவத்தில் வட மாநில கொள்ளையர்கள் 4 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது. கொள்ளையர்களை பிடிக்க 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதுவரை 150 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் கொள்ளை தொடர்பாக எந்தவித துப்பும் துலங்காமல் உள்ளது.
கொள்ளையர்களில் 2 பேர் கொள்ளையடிப்பதற்கு முன்பு வங்கிக்கு வந்து ஒத்திகை பார்த்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பல நாட்கள் திட்டமிட்டு வடமாநில வாலிபர்கள் இத்துணிகர கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர். வடமாநில வாலிபர்கள் பலர், சென்னையில் தங்கி இருந்து கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுடன் தொழிலாளிகள் போல தங்கியிருந்து கொள்ளையர்கள் பல நாட்கள் நோட்டமிட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கேஷியர் ஆனந்த் மற்றும் வங்கிக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் கூறிய அங்க அடையாளங்களை வைத்து கொள்ளையர்கள் 2 பேரின் கம்ப்யூட்டர் படம் வரையப்பட்டுள்ளது. இதனை வைத்தும் போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். வங்கிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக கட்டாயம் கேமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாங்க் ஆப் பரோடா வங்கியில் கேமிரா பொறுத்தப்படாமல் இருந்துள்ளது. இதுவும் கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இக்கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து அனைத்து வங்கிகளிலும் கட்டாயம் கேமிராக்களை பொருத்த வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கிடையே கொள்ளையர்கள் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். கொள்ளை பற்றி துப்பு துலக்குவதற்காக 24 மணி நேரமும் செயல்படும் செல்போன் எண் ஒன்றையும் போலீசார் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கடந்த 23-ந்தேதி துரைப்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பெருங்குடியில் பரோடா வங்கியில் நடந்த கொள்ளை தொடர்பாக துப்பு துலக்கப்பட்டு வருகிறது. கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்த தகவல்களை 9884203821 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். பொறுப்புள்ள காவல் அதிகாரி தகவலைப் பெற்றுக்கொள்வார். தகவல் அளிக்கும் நபர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். அவர்களின் பெயர், விலாசம் மற்றும் விவரம் ரகசியமாக வைக்கப்படும். பொதுமக்கள் இந்த வங்கி கொள்ளையில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் பற்றிய சிறு விபரங்களை கூட உடனடியாக தொலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 days ago |
-
காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் : டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
30 Jun 2025சென்னை : காவலாளி அஜித் குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
வெறும் இணைப்புதான்; பிணைப்பு இல்லை; அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து திருமாவளவன கருத்து
30 Jun 2025சென்னை : அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
கர்நாடாக துணை முதல்வருடன் வலுவான பிணைப்பு முதல்வர் சித்தராமையா தகவல்
30 Jun 2025பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே.
-
விமான விபத்து விசாரணை: மத்திய அமைச்சர் புதிய தகவல்
30 Jun 2025புதுடெல்லி : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, திட்டமிட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா?
-
அமெரிக்கா: தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
30 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் காட்டுத்தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
எண்ணெய் கப்பலில் தீ விபத்து: 14 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
30 Jun 2025அகமதாபாத், குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்கை புகழ்ந்த ட்ரம்ப்
30 Jun 2025வாஷிங்டன் : எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த மசோதா, செனட்டில் நிறைவேறி உள்ளது. இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, ''எலான் மஸ்க் சிறந்த மனிதர்.
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
30 Jun 2025வாஷிங்டன்: இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
-
பெல்ஜியம் கார் பந்தயம்: அஜித்குமார் அணி முதலிடம்
30 Jun 2025ப்ரூசெல்ஸ் : பெல்ஜியமில் நடந்த ஜிடி3 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
-
சட்டம் - ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது
30 Jun 2025சென்னை, சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
-
பயங்கரவாதி மசூத்அசார் ஆப்கானிஸ்தானில் பதுங்கல்?
30 Jun 2025காபூல், இந்தியாவில் பல பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத்அசார் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி ஆப்கானிஸ்தானி
-
சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்ததில் 11 பேர் பலி
30 Jun 2025கெய்ரோ : சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டதில், தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தான்சானியாவில் பயங்கரம்: 2 பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் கருகி பலி
30 Jun 2025டொடோமா : தான்சானியாவில் இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில், 40 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
-
இமாச்சலில் கனமழைக்கு 3 பேர் பலி
30 Jun 2025சிம்லா, இந்தியா முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்துவருகிறது.
-
மர்ம நபர்களால் மணிப்பூரில் 4 பேர் சுட்டுக்கொலை
30 Jun 2025இம்பால் : மர்ம நபர்களால் மணிப்பூரில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் 120 மின்சார பஸ்கள் சேவை தொடக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
30 Jun 2025சென்னை : சி.சி.டி.வி. கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய 120 மின்சார பஸ்கள் சேவையை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
30 Jun 2025சென்னை, தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
2024-25 நிதியாண்டில் ஜி.எஸ்.டி. ரூ. 22.08 லட்சம் கோடி வசூல்
30 Jun 2025புதுடெல்லி : சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜி.எஸ்.டி.) ஒட்டுமொத்த வசூல் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி ரூ. 22.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
-
யு.பி.ஐ. பணப்பரிமாற்றத்தில் ஜூலை 15 முதல் மாற்றங்கள்
30 Jun 2025புதுடெல்லி : யு.பி.ஐ. பணப்பரிமாற்றத்தில் பல புதிய மாற்றங்கள் ஜூலை 15 முதல் நடைமுறைக்கு வருகின்றன.
-
புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை: இ.பி.எஸ். குற்றச்சாட்டு
30 Jun 2025சென்னை, தி.மு.க., அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.
-
19-வது தேசிய புள்ளியியல் தின விழா: வெற்றி பெற்ற அலுவலர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி பாராட்டு
30 Jun 2025சென்னை, 19 வது தேசிய புள்ளியியல் தின விழாவில் சிறப்பு ஆய்வறிக்கை தயார் செய்யும் போட்டியில் வெற்றி பெற்ற அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டால
-
பீகாரில் விநோதம்: ரூ.100 கோடியில் போடப்பட்ட சாலையின் நடுவே மரங்கள்
30 Jun 2025பீகார் : பீகார் மாநிலத்தில் 100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சாலையில், பெரிய பெரிய மரங்கள் அச்சுறுத்தும் வகையில் கம்பீரமாக மிரட்டும் தோணியில் நிற்பதால், வாகன ஓட்ட
-
கஞ்சா - புகையிலை விற்பனை: திருப்பூரில் துப்பாக்கிகளுடன் பீகாரை சேர்ந்தவர்கள் கைது
30 Jun 2025திருப்பூர், கஞ்சா-புகையிலை விற்பனை செய்த பீகாரை சேர்ந்த இருவர் திருப்பூரில் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டனர்.