எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கோவில்பட்டி அருகே தோல் நோய்களை போக்கும் அருள்மிகு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி சமேத ஸ்ரீ சங்கரேஸ்வரி அம்மாள் திருக்கோயில் ஸ்தல வரலாறை இங்கே காண்போம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள வீரவாஞ்சி நகரில் புற்றுக்கோயிலுடன் அமைந்துள்ளது அருள்மிகு சங்கரேஸ்வரி அம்பாள் சமேத சங்கரகலிங்க சுவாமி திருக்கோயில். இந்தக் கோயிலில் வழங்கப்படும் புற்று மண் பிரசாதம் அனைத்து விதமான தோல் நோய்களையும் தீர்ப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கின்றனர்.
பல வருடங்களுக்கு முன்பு இப்போது கோயில் அமைந்திருக்கும் இடத்திருக்கும் இடத்தில் வீடு கட்டுவதற்காகச் செடி கொடிகளை அப்புறப்படுத்திய போது ஒரு வேப்ப மரத்தின் அடியில் நல்ல பாம்பு படமெடுத்து நிற்க, அதற்கு மேலும் பணிகளைத் தொடராமல் அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டார்களாம். அதன் பிறகு அந்த வேப்ப மரத்தின் அடியில் ஒரு புற்று வளரத் தொடங்கி உள்ளது. அதே நேரம் அந்தப் பகுதியில் இருந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தோல் அலர்ஜி ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டனர்.
இந்த நிலையில் அந்த ஊரைச் சோடந்த ஒரு பெண்ணின் கனவில் தோன்றிய அம்மன், வேப்ப மரத்தின் அடியில் வளர்ந்திருக்கும் புற்றின் மண்ணை எடுத்துப் பூசினால் தோல் நோய்கள் குணமாகும் என்று அருள் வாக்கு கூறினாளாம். அதன்படியே, அலர்ஜியால் பாதிக்கப்பட்ட மக்கள் அம்மனை பிரார்த்தனை செய்து புற்று மண்ணை எடுத்து பூசிக்கொண்டதும், அவர்களின் தோல் நோய் குணமானது.
அதைத் தொடர்ந்து ஊர் மக்கள் அப்பகுதியில் வெப்பத்தை தணிப்பதற்காக நிறைய வேப்ப மரங்களை நடடு வளர்த்தார்கள். அத்துடன், இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் புற்றின் அருகில் விளக்கேற்றி பூஜை செய்து வந்தனர்.
இப்படி, தங்களுக்குக் காட்சி தந்த பாம்மை, சிவன் அம்சமாகவும் வேப்ப மரத்தைப் பார்வதியின் அம்சமாகவும் கருதி வழிபட்டவர்கள், நாளடைவில் வேப்ப மரத்தடி புற்று அம்மனுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, புற்றின் அருகிலேயே கோயில் கட்டி, அருள்மிகு சங்கரேஸ்வரி அம்மன் - அருள்மிகு சங்கரலிங்க சுவாமியை பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினார்கள். கிழக்கு நோக்கியபடி தனித்தனிச் சன்னதிகளில் அருள் பாலித்து வருகின்றனர் சுவாமியும் அம்பாளும்.
மேலும், வள்ளி - தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண முருகப் பெருமான், கன்னி மூலையில் அருளும் ஸ்ரீ கோடி சக்தி விநாயகர், ஸ்ரீ துர்கை, ஸ்ரீ தட்சிணா மூர்த்தி, ஸ்ரீகால பைரவர் ஆகியோரையும் இந்தக் கோயிலில் தரிசிக்கலாம். மட்டுமின்றி, நாகர் சிலைகளுடன் சப்த கன்னியரும் இங்கே காட்சி தருகின்றனர்.
மரத்தடியில் உள்ள புற்றுக்கு ஆரம்பத்தில் இருந்தே பால் ஊற்றி வருவதால், இங்குள்ள வேம்ப மரத்தைப் பாலாலேயே வளர்ந்த மரம் என்று சிறப்பித்துச் சொல்கிறார்கள் உள்ளுர் பக்தர்கள். சுங்கரன் கோவிலைப் போலவே இந்தக் கோயிலிலும் ஆடித் தபசு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடித் தபசு திருவிழாவின் 11-ம் நாளன்று ஸ்ரீசங்கரலிங்க சுவாமியும், ஸ்ரீசங்கரேஸ்வரி அம்மனும் ஒருசேர ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
இந்த வைபவத்தில் கலந்து கொண்டு அம்பாளையும், சுவாமியையும் தரிசித்து வழிபட்டுச் சென்றால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்தத் தினத்தில் குழந்தை பாக்கியத்துக்காக இங்கு நடைபெறும் பிரார்த்தனை விசேஷமானது. தாம்பாளத் தட்டு ஒன்றில் மஞ்சள் பொடி, குங்குமம், மஞ்சள் வண்ணப் பட்டு வஸ்திரம், பசும்பால், முட்டை, பழம், வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றை வைத்து தம்பதியரின் பெயரைச் சங்கல்பம் செய்து, அம்பாளிடம் வைத்து பூஜை செய்கின்றனர். பிறகு மஞ்சள் நிற பட்டுத் துணியில் எலுமிச்சைப் பழத்தை வைத்து முடிந்து, அம்பாள் இடையில் கட்டி, பூமாலை சாத்தி அர்ச்சனை செய்து தம்பதியரிடமே திரும்பக் கொடுப்பார்கள்.
தம்பதியர் புற்று சந்நிதிக்குச் சென்று, புற்றின் அருகில் உள்ள ஐந்து தலை ராகுவின் மேல் மஞ்சள் பொடியும் ஒற்றைத்தலை கேதுவின் மேல் குங்குமமும் தூவி, புற்றில் பசும்பால் ஊற்றி வழிபட வேண்டும். பிறகு, அம்பாள் சந்நிதியில் கொடுக்கப்பட்ட பட்டுத்துணியில் எழுமிச்சைப் பழத்தை வைத்து முடிந்து, அம்பாள் அடையில் கட்டி, பூமாலை சாத்தி அர்ச்சனை செய்து தம்பதியரிடமே திரும்பக் கொடுப்பார்கள்.
தம்பதியர் புற்று சந்நிதிக்குச் சென்று, புற்றின் அருகில் உள்ள ஐந்து தலை ராகுவின் மேல் மஞ்சள் பொடியும் ஒற்றைத் தலை கேதுவின் மீது குங்குமமும் தூவி, புற்றில் பசும்பால் ஊற்றி வழிபட வேண்டும். பிறகு, அம்பாள் சந்தியில் கொடுக்கப்பட்ட எலுமிச்சை பழம் முடிந்த பட்டுத் துணியை மனைவி எடுத்து கணவரிடம் கொடுக்க, அவர் அதை வேப்ப மரத்தில் தொட்டில் போல் கட்ட வேண்டும். தொடர்ந்து, இருவருமாகச் சேர்ந்து அந்தத் தொட்டிலை மூன்று முறை ஆட்டி விட்டு, புற்றை மூன்று முறை வலம் வந்து வழிபட வேண்டும். இதனால், மரத்தில் தொட்டில் ஆடுவது போலவே விரைவில் வீட்டிலும் தொட்டில் ஆடும் என்று பக்தர்கள் நம்பிக்கையாகக் கூறுகின்றனர்.
ஆடித் தபசு நாளில் மட்டுமின்றி, சனிக்கிழமை தவிர மற்ற நாள்களிலும் இந்த பிரார்த்தனை செய்யப்படுகிறது. ஆனால், வஸ்திரத்தின் நிறம் மாறுபடும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாள்களில் சிவப்பு வண்ணத்திலும், புதனன்று பச்சை, வியாழக் கிழமை மஞ்சள், வெள்ளிக் கிழமை சந்தக நிறம் என்று அந்தந்த கிழமைக்குரிய நிறத்தில் வஸ்திரம் கட்ட வேண்டும் என்பது ஐதீகம்.
அம்பாள் குழந்தை வரம் அருள்பவள் உன்றால், அவளின் செல்வப் பிள்ளையான முருகப்பெருமானோ கல்யாண வரம் அருளும் மூர்த்தியாகத் திகழ்கிறார். செவ்வாய்க் கிழமையில் முருகப் பெருமானுக்குச் சந்தன நிற வேஷ்டி வள்ளிக்குப் பச்சை நிறப் புடவை, தெய்வானைக்குச் சிவப்பு நிறப் புடவை சாத்தி, மூவருக்கும் செவ்வரளி மாலை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், உடைத்த துவரம்பருப்பை ஒரு வாழை இலையில் பரப்பி, அதன் மேல் தேங்னாய் மூடிகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து ஏழு வாரங்கள் இங்கு வந்த வழிபட்டு, நிறைவாக ஏழு சுமங்கலிகளுக்கு வெற்றிலைப் பாக்குடன் மஞசள், குங்குமம் போன்ற மங்கலப் பொருள்களைக் கொடுத்து அவர்களது ஆசியைப் பெற வேண்டும். நிறைந்த பக்தியோடு இந்த வழிபாட்டை செய்தால் விரைவில் மணமாலை தோள்சேரும். அதேபோல், அவரவர் ஜன்ம நட்சத்திரத்தன்று சங்கரலிங்க சுவாமிக்கு மயில்கண் வேஷ்டி அணிவித்து, நெய் தீபம் ஏற்றி, வில்வார்ச்சனை செய்து வழிபட்டால் காரியத் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-07-2025.
04 Jul 2025 -
டிரினிடாட் - டொபாகோ பிரதமருக்கு கும்பமேளா புனிதநீரை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி
04 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ரா
-
பரந்தூர் விமான நிலையம்: முதல்வருக்கு விஜய் கடிதம்
04 Jul 2025சென்னை : பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அப்பகுதி மக்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த
-
அரசு ஊழியர்களுக்கு அக். 1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
04 Jul 2025சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.25 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.25.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டால
-
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியா
-
கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்
04 Jul 2025சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
04 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
04 Jul 2025சென்னை, ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
திருப்பூர் மாவட்டம் புதுப்பெண் தற்கொலை வழக்கில் மாமியார் கைது
04 Jul 2025திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
தி.மு.க., பா.ஜ.க.வுடன் என்றைக்கும் த.வெ.க. கூட்டணி இல்லை: விஜய்
04 Jul 2025சென்னை, தி.மு.க., பா.ஜ.க.வுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் த.வெ.க.
-
நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
04 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்: பனையூர் கூட்டத்தில் 20 தீர்மானங்கள்
04 Jul 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
04 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
-
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
04 Jul 2025நீலகிரி : அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
-
ஆபரேஷன் சிந்தூரின் போது 3 எதிரிகளை எதிர் கொண்டோம்: ராணுவ துணை தலைமை தளபதி
04 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரின் போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர்.
-
அஜித்குமார் கொலை வழக்கு: நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் சாட்சியம்
04 Jul 2025சிவகங்கை : உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் அஜித்குமார் உடலை எடுத்துச் சென்றனர் என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
-
திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா: சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜை
04 Jul 2025திருச்செந்தூர் : கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
-
இமாச்சல்லில் மேகவெடிப்பு: 69 பேர் பலி; ரூ.700 கோடி சேதம்
04 Jul 2025சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அ.தி.மு.க. மறியல் போராட்டம்
04 Jul 2025புதுச்சேரி : சுற்றுலா சொகுசு கப்பல் வருகையை எதிர்த்து அ.தி.மு.க. மறியல் போராட்டம் நடத்தியது.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காசாவில் 15 பேர் பலி
04 Jul 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
04 Jul 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
திபெத் விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
04 Jul 2025பெய்ஜிங் : திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
அஜித்குமார் கொலை வழக்கு: த.வெ.க. கோரிக்கையை நிராகரித்தது ஐகோர்ட்
04 Jul 2025சென்னை : மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையில் கொல்லப்பட்டதைக் கண்டித்து த.வெ.க.