எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரிஸ்டல் : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதேபோல் மேலும், சில ஆட்டங்கள் மழையால் ரத்தாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தலா ஒரு புள்ளி...
இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 13-வது நாளான நேற்று பிரிஸ்டலில் நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்-இலங்கை அணிகள் மோதுவதாக இருந்தது. மழையின் காரணமாக டாஸ் போடுவதில் தாமதமானது. இந்நிலையில், பிரிஸ்டலில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி கைவிடப்பட்டது. இதனையடுத்து, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் நடக்கவிருந்த தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஆட்டமும் மழையின் காரணமாக கைவிடப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சில ஆட்டங்கள்...
மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. இதுவரை 15 ஆட்டங்கள் முடிந்துள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் மிகவும் முக்கியமான தொடரில் மழையால் போட்டி பாதிக்கப்படுவது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. 2 ஆட்டங்கள் இதுவரை மழையால் கைவிடப்பட்டுள்ளது.
பாதிப்பை...
கடந்த 7-ம் தேதி பாகிஸ்தான் - இலங்கை அணிகள் பிரிஸ்டோல் மைதானத்தில் மோத வேண்டிய ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் மழையால் ரத்து செய்யப்பட்டது. தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் சவுத்தாம்ப்டனில் நேற்று முன்தினம் மோதிய ஆட்டம் 8 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது. மழையால் ஆட்டம் ரத்து செய்யப்படும்போது இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படுகிறது. முன்னணி அணிகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் பாதிப்பு...
தென்ஆப்பிரிக்க அணி ஏற்கனவே 3 ஆட்டத்தில் தோற்றுவிட்டது. வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்று 2 புள்ளியை பெறும் ஆர்வத்தில் இருந்தது. மழையால் 1 புள்ளி மட்டுமே கிடைத்தது. இது அந்த அணியை பாதித்து இருந்தது. இதேபோல் பலவீனமான தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது வெற்றி பெறும் வேட்கையில் வெஸ்ட்இண்டீஸ் இருந்தது. 1 புள்ளி மட்டுமே கிடைத்ததால் அந்த அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கிடையே இங்கிலாந்தில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மேலும் சில ஆட்டங்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
70 சதவீத வாய்ப்பு...
நேற்று பிரிஸ்டோல் மைதானத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பபட்டது. 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இந்த ஆட்டமும் கைவிடப்பட்டது. இதேபோல ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் சவுத்தாம்ப்டனில் மோத உள்ள ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட இருக்கிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் வருகிற 13-ந்தேதி நாட்டிங்காமில் மோதுகின்றன. இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட 70 சதவீத வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்தின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்
12 Sep 2025புதுடெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.
-
பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில்15 - வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு: ஜனாதிபதி முர்மு பதவிப் பிராமணம் செய்து வைத்தார்
12 Sep 2025புதுடெல்லி, துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையடுத்து நேற்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் நாட்
-
ராமர் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன்: நேபாள முன்னாள் பிரதமர்
12 Sep 2025காத்மாண்டு : ராமரின் பிறப்பிடம் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன் என்று நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.
-
ஆசிய கோப்பை 4-வது லீக் போட்டி: ஹாங்காங்கை வீழ்த்திய வங்கதேசம்
12 Sep 2025துபாய் : வங்காளதேச அணி 17.4 ஓவர்களில் இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
8 அணிகள் பங்கேற்பு...
-
திருச்சியில் இன்று முதல் பிரச்சாரத்தை துவங்குகிறார் த.வெ.க. தலைவர் விஜய் மக்களை சந்திக்கிறேன் என்று அறிக்கை
12 Sep 2025சென்னை, திருச்சியில் இன்று மக்களை சந்திக்கிறேன் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தின் உள்ள பல்வேறு கோவில் கும்பாபிஷேகம் விழா
12 Sep 2025வேதாரண்யம், தமிழகத்தின் உள்ள பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 77 வயது மூதாட்டி
12 Sep 2025பாலக்காடு : பிளஸ்-2 தேர்வில் 77 வயது மூதாட்டி தேர்ச்சி பெற்றார்.
-
கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: அண்ணாமலை அறிவிப்பு
12 Sep 2025சென்னை : கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
ராணுவத்தில் இந்தியர்களைசேர்க்க வேண்டாம்: ரஷ்யாவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்
12 Sep 2025புதுடெல்லி, ரஷிய ராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பதை நிறுத்துங்கள் என்று வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
கவின் படுகொலை இந்தியாவுக்கு அவமானம்: பிருந்தா காரத் கருத்து
12 Sep 2025நெல்லை, கவின் ஆணவ படுகொலை இந்தியாவிற்கே அவமானம் என்று மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.
-
வாக்காளர் பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
12 Sep 2025சென்னை, வாக்காளர் பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல்களை ஒப்பிடும் பணியை செப்.26க்கு
-
பிரதமருக்கு குங்குமம் அனுப்ப போவதாக உத்தவ் சிவசேனா அறிவிப்பு
12 Sep 2025மும்பை, பிரதமருக்கு குங்குமம் அனுப்ப போவதாக உத்தவ் சிவசேனா அறிவித்துள்ளது.
-
டெல்லியில் 5 பயங்கரவாதிகள் கைது
12 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தீட்டிய சதி திட்டமும் முறியடிக்கப்பட்டது.
-
உழவர்கள் நலன் காக்க ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ துவக்கம்: அமைச்சர் தகவல்
12 Sep 2025சென்னை : தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியினை மேலும் அதிகரித்து, முந்திரி சாகுபடி செய்யும் உழவர்கள், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின
-
தாமதத்தை முற்றிலும் தவிர்க்க பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பெறும் புதிய வசதி : விரைவில் அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம்
12 Sep 2025சென்னை : தாமதத்தை முற்றிலும் தவிர்க்க பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் புதிய வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
-
நேபாளத்தில் கலவரம்: ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய மந்திரியின் குடும்பம்
12 Sep 2025காத்மாண்டு : நேபாளத்தில் நடந்த கலவரத்தின்போது மந்திரியின் குடும்பம் ஹெலிகாப்டரில் கயிறு மூலம் தப்பியது.
-
செல்போனில் பேசிக்கொண்டே பஸ்சை இயக்கிய டிரைவர்: பயணிகள் அச்சம்
12 Sep 2025நெல்லை : செல்போனில் பேசிக்கொண்டே அரசு பஸ்சை டிரைவர் இயக்கியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
-
விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க கூட்டுறவுத்துறைக்கு - நபார்டு வங்கி விடுவிப்பு
12 Sep 2025சென்னை : விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க கூட்டுறவுத்துறைக்கு ரூ.3,700 கோடியை நபார்டு வங்கி விடுவித்துள்ளது.
-
கோயம்பேடு-அசோக்நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தம்
12 Sep 2025சென்னை : கோயம்பேடு-அசோக்நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.
-
தமிழ்நாடு அரசு சார்பில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா - நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோர் பங்கேற்பு
12 Sep 2025சென்னை : தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவ
-
அனல்மின் நிலைய கட்டுமான பணி மின்சார வாரிய தலைவர் ஆய்வு
12 Sep 2025சென்னை, எண்ணூரில் புதிதாக கட்டப்படும் அனல்மின் நிலையத்தை மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
-
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி : வானிலை ஆய்வு மையம் தகவல்
12 Sep 2025சென்னை : வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நிர்மலா சீதாராமன் திருப்பதி வருகை
12 Sep 2025திருமலை : மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
டெல்லி, மும்பை உயர்நீதிமன்றத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
12 Sep 2025புதுடெல்லி : டெல்லி, மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
-
2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
12 Sep 2025சண்டிகர், சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.