எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சுதந்திர தினத்தையொட்டி வரும் 15-ம் தேதி 448 திருக்கோவில்களில் சிறப்பு வழிபாடும் வேட்டி சேலைகளும் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்திய சுதந்திரத் திருநாள் அன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பு திட்டத்தின்படி நிதி வசதி மிக்க திருக்கோயில்களில் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் 448 திருக்கோயில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெறும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ளும் சேவார்த்திகளுக்கு திருக்கோயில்களில் காணிக்கையாகப் பெறப்பட்டு உபரியாக உள்ள பருத்தி வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட உள்ளன. மாவட்டங்களில் உள்ள திருக்கோயில்களில் மாவட்ட ஆட்சியர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.
மேலும் சென்னை பெருநகரப் பகுதிகளில் நடைபெறும் இச்சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிகளில் பேரவைத் தலைவர், முதலமைச்சர் , துணை முதலமைச்சர் , அமைச்சர்கள் மற்றும் பேரவைத் துணைத் தலைவர் ஆகியோர் பங்கேற்கும் விவரம் கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்படுகிறது.
சுதந்திர தின விழா 15.08.2019 சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து திருக்கோயில்களில் பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் விவரம்
1. தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை-19. பேரவைத் தலைவர் .தனபால்
2. சக்தி விநாயகர் திருக்கோயில், பி.டி.ராஜன் சாலை, கே.கே.நகர், சென்னை - 78 முதலமைச்சர் .எடப்பாடி கே.பழனிசாமி
3. மருந்தீசுவரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை- 41 துணை முதலமைச்சர் .ஓ.பன்னீர் செல்வம்
4. பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை - 5 வனத்துறை அமைச்சர் .திண்டுக்கல் சி.சீனிவாசன்
5. அனந்தபத்மநாப சுவாமி திருக்கோயில், அடையாறு, சென்னை - 20 பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்
6. முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை-4 கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ
7. காளிகாம்பாள் உடனுறை அருள்மிகு கமடேஸ்வரர் திருக்கோயில், தம்புசெட்டித் தெரு, சென்னை-1. மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணி
8. கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600 004. நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் . எஸ்.பி. வேலுமணி
9. சித்தி புத்தி விநாயகர்(ம) சுந்தரேஸ்வரர் திருக்கோயில், இராயப்பேட்டை, சென்னை-14. மீன்வளம் மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் .ஜெயக்குமார்
10. பாம்பன் சுவாமி திருக்கோயில், திருவான்மியூர், சென்னை - 41 . சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்.சி.வி.சண்முகம்
11. ஏகாம்பரேசுவரர் திருக்கோயில், தங்கசாலைத் தெரு, சென்னை-3. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
12. தண்டீஸ்வரர் திருக்கோயில், வேளச்சேரி, சென்னை-42. சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா
13. மாதவப் பெருமாள் திருக்கோயில் மயிலாப்பூர், சென்னை-4. தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்
14. சௌமிய தாமோதரப்பெருமாள் திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை-49. சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்
15. பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், எல்டாம்ஸ் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை-18. உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்ஆர்.காமராஜ்
16. மகாலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர், சென்னை-90 கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
17. பாதாளபொன்னியம்மன் திருக்கோயில், கீழ்ப்பாக்கம், சென்னை-10. கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
18. கந்தசாமி (எ) முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், பூங்கா நகர், சென்னை-3. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்
19. ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், சிந்தாதரிப்பேட்டை, சென்னை வேளாண்மைத் துறை அமைச்சர் .துரைக்கண்ணு 20. கச்சாலீசுவரர் திருக்கோயில், அரண்மனைக்காரன் தெரு, சென்னை செய்தித் துறை அமைச்சர் .கடம்பூர் ராஜூ
21. வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி , சென்னை-26. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் .ஆர்.பி.உதயகுமார்
22. அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில், நுங்கம்பாக்கம், சென்னை- 34 சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டிஎன்.நடராஜன்
23. சென்னமல்லீஸ்வரர் மற்றும் சென்னகேசவப் பெருமாள் திருக்கோயில், தேவராஜ முதலி தெரு, சென்னை-3 வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் .கே.சி.வீரமணி
24. குறுங்காலீஸ்வரர் திருக்கோயில், கோயம்பேடு, சென்னை- 107 போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
25. தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு, சென்னை பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் .கே.டி.ராஜேந்திர பாலாஜி
26. செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் திருக்கோயில் மேற்கு தாம்பரம், சென்னை-45. ஊரகத் தொழில்துறை அமைச்சர்.பெஞ்சமின்
27. காரணீஸ்வரர் திருக்கோயில், சைதாப்பேட்டை, சென்னை-15. ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி
28. திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, சென்னை-50. தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பாண்பாட்டுத் துறை அமைச்சர் .கே.பாண்டிய ராஜன்
29. ஏகாம்பரரேஸ்வரர் திருக்கோயில், அமைந்தகரை, சென்னை-29. கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர்.ஜி.பாஸ்கரன்
30. காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு. இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேவூர் .எஸ்.இராமசந்திரன்
31. அருணாச்சலேசுவரர் திருக்கோயில், பள்ளியப்பன் தெரு, சென்னை-79 பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி
32. பரசுராம லிங்கேஸ்வரர் திருக்கோயில், அயன்புரம், சென்னை-23. பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன்
33. திருவட்டீஸ்வரர் திருக்கோயில் திருவட்டீஸ்வரன் பேட்டை, சென்னை-5. அரசு தலைமை கொறடா எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சஞ்சு சாம்சனை வாங்க பேச்சுவார்த்தை
08 Nov 2025ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசனில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.
-
தொகுதிவாரியாக நேர்காணல்: கிருஷ்ணகிரி தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
08 Nov 2025கிருஷ்ணகிரி : ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதிகளில் வெற்றி பெறவில்லையென்றால் தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவி பறிபோகும் என கிருஷ்ணகிரி தி.மு.க.
-
59-வது பிறந்தநாள்: சீமானுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
08 Nov 2025சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
தென் ஆப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான போட்டியில் காயம்: வரும் 14-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு திரும்புவாரா ரிஷப் பண்ட்?
08 Nov 2025பெங்களூரு : பெங்களூருவில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ரிஷப் பண்ட் காயமட
-
செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டு திருத்த புதிய வசதி
08 Nov 2025டெல்லி : செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டை திருத்த புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.
-
தருமபுரியில் இன்று பா.ம.க.வின் மக்கள் உரிமை மீட்புப்பயண நிறைவு விழா
08 Nov 2025தருமபுரி : தருமபுரியில் பா.ம.க.வின் மக்கள் உரிமை மீட்புப் பயண நிறைவு விழா இன்று நடக்கிறது.
-
ஆந்திரா-கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
08 Nov 2025சேலம் : ஆந்திரா - கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
சாதி, மத மோதலை உருவாக்குகிறது: காங்கிரஸ் மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
08 Nov 2025சசராம் : மக்களிடையே சாதி, மத மோதலை உருவாக்குகிறது என்று காங்கிரஸ் கட்சி மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டியுள்ளார்.
-
பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்ததால் சர்ச்சை
08 Nov 2025பாட்னா : பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்தது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-11-2025.
08 Nov 2025 -
உல்லாசத்திற்கு இடையூறு; கணவரை கொன்ற மனைவி
08 Nov 2025மீரட் : உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனை ஏவி கழுத்தை நெரித்து கொன்ற மனைவியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: சிறுவனின் தாக்குதலில் பெண் உயிரிழப்பு
08 Nov 2025இட்டாநகர் : பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சிறுவனின் கொடூர தாக்குதலில் 40 வயது பெண் உயிரிழந்தார்.
-
சீமானுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
08 Nov 2025சென்னை : சீமானின் கொள்கையில் பிடிவாதம் வியத்தலுக்குரியவை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
மகளிர் உலக கோப்பை இறுதிப்போட்டி: நேரலையில் 18.5 கோடி பேர் கண்டுகளித்து புதிய சாதனை
08 Nov 2025மும்பை : இந்தியாவில் மகளிர் உலககோப்பை போட்டியில் அதிக அளவிலான பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தான் ரகசிய அணு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது : இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு
08 Nov 2025புதுடெல்லி : பாகிஸ்தானின் ரகசிய அணு ஆயுத நடவடிக்கை குறித்து இந்தியா குற்றச்சாட்டியுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் 3-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை
08 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து நேற்று 3-வது நாளாக ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
கடைசி டி-20 போட்டி மழையால் ரத்து: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா
08 Nov 2025பிரிஸ்பேன் : கடைசி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
-
கால்மேகி புயலால் கடும் பாதிப்பு: பிலிப்பைன்ஸில் பலி 188 ஆனது
08 Nov 2025மணிலா : பிலிப்பைன்ஸில் கால்மேகி புயல் ஏற்பட்டது இதில் 188 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
6 நாட்கள் அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
08 Nov 2025டெல்லி : அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா ஜனாதிபதி திரெளபதி முர்மு புறப்பட்டு சென்றார்.
-
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்பு : ஐ.சி.சி. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Nov 2025துபாய் : 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்க உள்ளதாக ஐ.சி.சி. அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
-
உத்தரபிரதேச மாநிலத்தில் விபரீதம்: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் திடீர் தற்கொலை
08 Nov 2025லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
கரூர் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது த.வெ.க.
08 Nov 2025கரூர் : கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ.யிடம் ஆதாரங்களை த.வெ.க. ஒப்படைத்தது.
-
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் : 484 முகாம்கள் நடத்தப்பட்டு 7,57,168 பேர் பயன்: அமைச்சர்
08 Nov 2025சென்னை, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: 484 முகாம்கள் நடத்தப்பட்டதில் 7 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய எண்ணெய் தடையில் இருந்து ஹங்கேரிக்கு விலக்கு: ட்ரம்ப் அறிவிப்பு
08 Nov 2025வாஷிங்டன், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையில் இருந்து ஹங்கேரிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விலக்கு அளித்துள்ளார்.
-
மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்: இஸ்லாமியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்தது ஐகோர்ட் மதுரை கிளை
08 Nov 2025மதுரை : மத்திய அரசுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.


