எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருமங்கலம் : ஆன்-லைன் மூலம் தி.மு.க உறுப்பினராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இணைந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள உறுப்பினர் அடையாள அட்டை வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஒன்றரை கோடி தொண்டர்களுடன் முன்னணியில் உள்ள அ.தி.மு.க ஒவ்வொரு கிராமங்களிலும் நகரங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தி சார்பு அணிகளுக்கும், அ.தி.மு.க.வுக்கும் புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல் தங்களது பங்கிற்கும் பல்வேறு யுக்திகள் மூலம் உறுப்பினர்களை சேர்த்து வருகின்றன.
இந்நிலையில் தனியார் வியூக நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் தி.மு.க ஆன்-லைன் முறையில் உறுப்பினர்களை சேர்த்திடும் பணிகளை துவங்கியுள்ளது.
அதற்காக இணைதள முகவரியை வெளியிட்டுள்ள தி.மு.க மேலிடம் அதில் தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு ஓ.டி.பி. எனும் குறியீட்டினை அனுப்பி அதில் ஆவணங்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு இணையம் வழியாக உறுப்பினர் அடையாள அட்டையினை வழங்கி வருகிறது. இதன் மூலம் தினந்தோறும் பலர் தி.மு.க.வில் உறுப்பினராகி வருகின்றனர் என அக்கட்சியின் மேலிடம் கூறி வருகிறது.
இந்நிலையில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அமெரிக்க அதிபராக உள்ள டொனால்டு டிரம்ப் ஆன்-லைன் மூலம் தி.மு.க உறுப்பினராக இணைந்திருப்பதாகவும், அதற்கு சான்றாக அமெரிக்க அதிபரின் படம் கொண்ட இணையவழி தி.மு.க உறுப்பினர் அடையாள அட்டை வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அடையாள அட்டையில் டொனால்டு டிரம்ப், தகப்பனார் பெயர் ப்ரெட்டிரம்ப், வயது74, உறுப்பினராக சேர்ந்த நாள்; 19.09.2020 என்றும் அவர் சென்னை மாவட்டம் எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் இருப்பதாகவும், அவரது உறுப்பினர் அட்டைஎண். DMKOMCH 0161464069 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆன்-லைன் முறையில் தி.மு.க.வில் இணைந்திருப்பதாக வெளியான இணையவழி அடையாள அட்டை பெரும் வைரலாகி தமிழகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் எதிர்பார்த்த அளவிற்கு இணையவழி உறுப்பினர் சேர்க்கை பலனளிக்காமல் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருவதால் தி.மு.க மேலிடம் அப்செட் ஆகியுள்ளது.
சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த அடையாள அட்டை பதிவுகள் மூலமாக ஆன்-லைன் முறையில் ஏராளமானேர் போலியாக தி.மு.க உறுப்பினராக சேர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே இந்த பதிவிற்கு பதிலளித்து வரும் வலைத்தள பயனாளர்கள் என்னதான் அமெரிக்க அதிபராக இருந்தாலும் உதயநிதி ஒப்புதல் இல்லாமல் பதவி கிடைக்காது.
அடுத்த தி.மு.க செயற்குழு கூட்டத்திற்கு அமெரிக்க அதிபரை எதிர்பார்த்து காத்திருக்கிறோம், போலி உறுப்பினர் அடையாள அட்டை வெளியான நிகழ்வு குறித்து சி.ஐ.ஏ விசாரணை நடத்திட வேண்டும் என கலாய்த்து வருகின்றனர். இது போன்ற காமெடி கலாட்டா நிகழ்வுகளால் தி.மு.க ஐ.டி.விங் நிர்வாகிகளும்,கட்சித் தொண்டர்களும் கலங்கி நிற்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாக்., போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!
17 Sep 2025அபுதாபி: இந்திய வீரர்கள் - பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் பாகிஸ்தானின் அனைத்துப் போட்டிகளில் இருந்து நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் நீக்கப்பட்டுள்ளதாகத்
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.