முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது: மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியா முழுவதும் பரவியுள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 13.21 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.69 லட்சம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மக்கள் பெருமளவு வெளியே வரத் தொடங்கியதால், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

மகாராஷ்டிராவில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகளால் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இங்கிலாந்தில் இதுபோன்ற நோயாளிகள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

அதேபோல் மகாராஷ்டிராவிலும் கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அரசின் உத்தரவை மீறி மக்கள் வெளியே செல்கின்றனர். மக்கள் அனைவரும் சுகாதார நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து