எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா, ஜூலை.- 23 - மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெற இருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடும் என்றும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாது என்றும் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியும் அங்கம் வகிக்கிறது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தர மாட்டேன் என்று கூறிய மம்தா பானர்ஜி பின்னர் ஆதரவு அளிப்பதாக கூறியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திரிணமுல் காங்கிரஸ் தொடர்ந்து இருக்கிறது என்பதை இதன் மூலம் மம்தா உறுதி செய்தார். இந்த நிலையில் கொல்கத்தாவில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். தனது பலத்தை பறை சாற்றும் வகையில் இந்த பேரணிக்கு மம்தா ஏற்பாடு செய்திருந்தார். இந்த பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தனது கட்சி தொடர்ந்து அங்கம் வகிக்கும் என்றார். டெல்லியில் உள்ள கூட்டணி அப்படியே டெல்லியில் இருக்கிறது. எங்களது கட்சிக்கு காங்கிரஸ் கட்சி போதுமான மரியாதையை கொடுத்துக்கொண்டிருக்கும் வரை இந்த கூட்டணி தொடரும். ஆனால் மேற்கு வங்காளத்தில் நடைபெற இருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் என்றும் அவர் கூறினார். எங்களது மேற்கு வங்க அரசாங்கத்துடன் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காக டெல்லியில் கூட்டணியை வைத்துக்கொள்வோம். ஆனால் இங்கு பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்துக்கொள்ள மாட்டோம் என்றும் அவர் கூறினார். பஞ்சாயத்து தேர்தலில் யாருடைய கருணையும் எங்களுக்கு தேவையில்லை. இந்த பஞ்சாயத்து தேர்தல் ஒரு பலப்பரீட்சை மைதானம் என்றும் அவர் கூறினார். எங்களது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் எங்களது கட்சியின் 28 எம்.பி.க்களும் 188 எம்.எல்.ஏ.க்களும் பிரதமர் அலுவலகத்திற்கு போய் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் மம்தா கூறினார். பஞ்சாயத்து தேர்தலில் தனித்து போட்டி என்ற திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் முடிவை பாரதீய ஜனதா கட்சி வரவேற்றுள்ளது. இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்று பா.ஜ.க செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


