எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 17-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் வீரர்களில் 32 பேருக்கு போட்டித்தரவரிசை வழங்கப்படுவது வழக்கம். இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிச்சுக்கு (செர்பியா) முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.
போட்டித்தரநிலையில் 2-வது இடத்தை டேனில் மெட்விடேவும் (ரஷியா), 3-வது இடத்தை அலெக்சாண்டர் ஸ்வெரேவும் (ஜெர்மனி) பெற்றுள்ளனர். முன்னாள் சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-வது இடத்தில் இருக்கிறார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டிக்கு முதலிடமும், அரினா சபலென்காவுக்கு (பெலாரஸ்) 2-வது இடமும், கார்பின் முகுருஜாவுக்கு (ஸ்பெயின்) 3-வது இடமும் அளிக்கப்பட்டுள்ளது.
பல சாதனைகளை முறியடிப்பார்: ரபாடாவுக்கு 'நிதினி' புகழாரம்
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ரபாடா. இந்தியாவுக்கு எதிராக நேற்று தொடங்கிய 3-வது டெஸ்ட் போட்டியில் அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அவர் 73 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். மயங்க் அகர்வால், ரகானே, பும்ரா, கேப்டன் விராட் கோலி ஆகியோரது விக்கெட்டை அவர் கைப்பற்றினார். இந்த தொடரில் ரபாடா இதுவரை 17 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்துள்ளார்.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் அனைத்து சாதனைகளையும் ரபாடா முறியடிப்பார் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீரர் நிதினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது., ரபாடா வலிமையான பந்து வீச்சாளர். மிகவும் வேகமாக பந்துகளை வீசும் உடல் தகுதியை பெற்றுள்ளார். எல்லாவிதமான பந்துகளையும் வீசி தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். தென் ஆப்பிரிக்காவின் அனைத்து சாதனைகளையும் ரபாடா முறியடிப்பார். அவர் தற்போது 50 டெஸ்டில் 230 விக்கெட்டை தொட்டுள்ளார். 100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது, அவரால் 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டை கைப்பற்ற முடியும். இவ்வாறு நிதினி கூறியுள்ளார்.
ஜோகோவிச் பற்றி தரக்குறைவாக பேசிய செய்தி வாசிப்பாளர்கள்
ஜோகோவிச் மெல்போர்ன் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் முன்னணி செய்தியானது. அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டு அவரது செய்தியை ஒளிப்பரப்பு செய்தனர். ஆஸ்திரேலியாவின் செவன் நியூஸ் சேனல் செய்தியாளர்கள் மைக் அம்ரோர்- ரெபேக்கா மாடர்ன் ஆகியோர் செய்தி வாசிக்க தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது மைக் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக என நினைத்து, ஜோகோவிச் குறித்து தரக்குறைவாக பேசினர்.
அவர் பொய் சொல்கிறார், மோசமான நபர். பொய் சொல்லி தப்பிக்க பார்க்கிறார் என திட்டி தீர்த்தனர். ஆனால் மைக் ஆன்-இல் இருந்ததால் அவர்கள் பேச்சு நேரடியாக ஒளிப்பரப்பானது. தரக்குறைவான பேச்சு வெளிப்படையாக ஒளிப்பரப்பு ஆனது குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படுவதாக தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜோகோவிச் விசாவை மீண்டும் ரத்து செய்ய ஆஸி. அரசு முயற்சி
தடுப்பூசி செலுத்தாத ஜோகோவிச்சுக்கு ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க மருத்துவ ரீதியிலான விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இதை ஜோகோவிச் ஆஸ்திரேலியா சென்றவுடன் தெரிவித்தார். ஆனால் இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியா தனது முடிவை மாற்றிகொண்டது. சட்டம் அனைவருக்கும் சமம் என்று கூறி அவரது விசாவை ரத்து செய்தது. ஆஸ்திரேலியா வந்த அவர் மெல்போர்ன் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். ஆஸ்திரேலிய குடியேற்ற துறையின் தடுப்பு காவல் மையமாக செயல்படும் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டார்.
இதற்கிடையே ஆஸ்திரேலிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜோகோவிச் மெல்போர்ன் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். ஜோகோவிச்சின் விசா ரத்து நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய கோர்ட்டு தடை விதித்தது. ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் இருப்பதற்கு கோர்ட்டு அனுமதி அளித்தாலும் அவரை மீண்டும் நாடு கடத்துவதற்கான முயற்சிகளை ஆஸ்திரேலியா அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அவரது விசாவை மீண்டும் ரத்து செய்ய ஆஸ்திரேலிய குடியுரிமை துறை மந்திரி தனது தனிப்பட்ட அதிகாரத்தை உபயோகிப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக அரசு தரப்பு வக்கீல் தெரிவித்துள்ளார்.
கேப்டன் கோலிக்கு பேட்டிங் பயிற்சியாளர் ரத்தோர் புகழாரம்
இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் அளித்த பேட்டியில், விராட் கோலிபேட்டிங் செய்யும் விதத்தில் ஒருபோதும் கவலை இல்லை, அவர் நன்றாக பேட்டிங் செய்தார். ஒரு பேட்டிங் பயிற்சியாளராக, அவர் நன்றாக பேட்டிங் செய்யவில்லை என்று நான் ஒருபோதும் கவலைப்படவில்லை. அவர் வலை பயிற்சி மற்றும் களத்தில் மிகவும் சிறப்பாக இருந்தார்.
நல்ல மாற்றம் என்னவென்றால், அவர் மிகவும் ஒழுக்கமாக இருந்தார். நான் அதை ஒப்புக்கொள்கிறேன், அவர் மிகவும் அழகாகவும் திடமாகவும் இருந்தார். ஒரு அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார், கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால், இது பெரிய ஸ்கோராக இருந்திருக்கலாம். இன்று அவர் சில கவர் டிரைவ்களை விளையாடினார், அவர் சரியான பந்துகளைத் தேர்ந்தெடுத்தார். இங்கு விளையாடுவது சவாலான சூழ்நிலை, ரன்களை எடுப்பது எளிதானது அல்ல, ஆனால் இன்றும் நாங்கள் சமமாக இருக்கிறோம். குறைந்தபட்சம் 50-60 ரன் அதிகமாக எடுத்திருக்க வேண்டும், அதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சற்று குறைந்த தங்கம் விலை
12 Nov 2025சென்னை : தங்கம் விலை நேற்று சற்று குறைந்துள்ளது.
-
செவாலியர் விருது அறிவிக்கப்பட்ட தோட்டா தரணிக்கு முதல்வர் வாழ்த்து
12 Nov 2025சென்னை : செவாலியர் விருது அறிவிக்கப்பட்ட தோடா தரணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இங்கு திறமையானவர்கள் இல்லை: ஹெச் -1பி நடைமுறையில் பின்வாங்கிய அதிபர் ட்ரம்ப்
12 Nov 2025வாஷிங்டன் : வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்காவில் திறமையானவர் இல்லை என்றும், அதனால் ஹெச் -1பி விசா
-
ஐ.சி.சி. பேட்டர்கள் தரவரிசை: டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள்
12 Nov 2025துபாய் : ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலின் புதிய பட்டியலில் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
-
கனடா அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
12 Nov 2025ஒண்டாரியா : கனடா அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-11-2025.
12 Nov 2025 -
அசாமில் நிலநடுக்கம்
12 Nov 2025திஸ்பூர் : அசாமில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பூடான் பயணம் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
12 Nov 2025புதுடெல்லி : பூடான் மன்னருடனான சந்திப்பு மிகவும் அற்புதமானது என்று பிரதமர் மோடி சமூக வலைத்தள பதிவில் பதிவிடடுள்ளார்.
-
அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
12 Nov 2025சென்னை : தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நிலவில் கால் பதிக்க தயாராகும் சீனா
12 Nov 2025பெய்ஜிங் : 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பு: மேலும் ஒரு டாக்டர் கைது
12 Nov 2025புதுடெல்லி : டெல்லியில் கார் குண்டு வெடிப்பில் மேலும் ஒரு டாக்டர் கைது செய்யப்பட்டார்.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு : தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை
12 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை, 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.
-
பீகார் தேர்தலில் அதிகளவில் வாக்களித்த பெண்கள்: பா.ஜ.
12 Nov 2025பாட்னா : பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்தது ஒரு வரலாற்று மாற்றம் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
-
தோட்டா தரணிக்கு இ.பி.எஸ். வாழ்த்து
12 Nov 2025சென்னை : செவாலியர் விருது அறிவிக்கப்பட்ட கவிஞர் தோட்டா தரணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மாலியில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Nov 2025சென்னை : மாலியில் சிக்கிய தமிழர்களை மீட்க தூதரகம் வாயிலாக முன்னெடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த மத்திய அரசுக்கு இ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
ராயபுரத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
12 Nov 2025சென்னை : சென்னை துறைமுகம் மற்றும் ராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர்
-
டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் அறிவிப்பு
12 Nov 2025சென்னை : டிசம்பர் 16-ந் தேதி முதல் டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
-
எகிப்து: விபத்தில் 2 பேர் பலி
12 Nov 2025கெய்ரோ, எகிப்து: சுற்றுலா பஸ் மீது லாரி மோதி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 39 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: ஜிம்பாப்வே உள்ளிட்ட மேலும் 3 அணிகளை சேர்க்கிறது ஐ.சி.சி.
12 Nov 2025துபாய் : துபாயில் சமீபத்தில் நடந்த ஐ.சி.சி.
-
டிச. 17-ல் சிறை நிரப்பு போராட்டம்: அன்புமணி
12 Nov 2025சென்னை : டிசம்பர் 17-ல் சிறை நிரப்பு போராட்டம் நடைபெறும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரம்: தி.மு.க. அரசு மீது விஜய் மறைமுகமாக விமர்சனம்
12 Nov 2025சென்னை : சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை?
-
இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பு சம்பவம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம்
12 Nov 2025புதுடெல்லி : இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது இந்திய ஆதரவுக்குழு தான் என்று பாகிஸ்தான் குற்றச்சாட்டியுள்ள நிலையில், கட்டுக் கதைகளை சுமத்துவது பாகிஸ்தானின் தந்தி
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: காயமடைந்தவர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்
12 Nov 2025புது டெல்லி, டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர்.
-
தமிழ்நாட்டில் இதுவரை 78 சதவீத எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் : தேர்தல் ஆணையம் தகவல்
12 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் 5 கோடி(78%) எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் நிலச்சரிவால் இடிந்தது
12 Nov 2025பெய்ஜிங் : சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் நிலச்சரிவால் இடிந்து விழும் நிலையில் உள்ளது.


