எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எந்த சூழலிலும் அ.தி.மு.க.தொண்டர்கள் தி.மு.க.விற்கு விலை போகமாட்டார்கள் என்று மதுரையில் நடந்த உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.
மதுரை பனகல் சாலையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆலோசனைகளை வழங்கி பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேசியதாவது:-
புரட்சித்தலைவர், அம்மா ஆகியோரின் வழியில் கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின் பெயரில் உள்ளாட்சித்தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றிபெற வேண்டும். கழகத்தின் கொள்கைகளை கடைபிடிக்கின்ற வீரர்களுக்கு போட்டியில் வாய்ப்புகளை பெற்றுத்தரவேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் மதுரை மாநகருக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை வழங்கி அம்மா அரசு சாதனை படைத்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் முதலமைச்சராக இருந்த எடப்பாடியார், துணை முதல்வராக இருந்த ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் மதுரை மாநகர் மக்களுக்காக ஐந்தாயிரம்கோடி ரூபாய் செலவில் திட்டங்களை வழங்கி மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளார்கள். இந்த திட்டங்களை எல்லாம் மக்களிடம் எடுத்துசொல்லி வாக்குகள் கேட்க வேண்டும். தி.மு.க.வின் தில்லுமுல்லை முறியடிக்க வேண்டும். தி.மு.க.அரசு கடந்த 9 மாதங்களாக மக்களுக்கு எந்த புதிய திட்டத்தையும் தரவில்லை. மதுரையில் அம்மா அரசு கொண்டு வந்த திட்டங்களைத்தான் தி.மு.க.அரசு தற்போது திறந்து வைத்துள்ளது. உள்ளாட்சித்தேர்தலை கருத்தில் கொண்டு தான் முதல்வர் ஸ்டாலின் ரூ. 500 கோடிக்கான திட்டங்களை அறிவித்தார். அறிவித்த திட்டங்கள் பெரும்பாலானவை அம்மா அரசு ஒதுக்கிய நிதியில் கொண்டு வந்த திட்டங்கள் தான். உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு கேட்டு மக்களை சந்திக்கவும் 10 நாட்கள் தான் இருக்கிறது. ஆனால் மறைமுக தேர்தலுக்கு 10 நாட்கள் அவகாசம் இருக்கிறது. இதில் இருந்தே தெரிகிறது தி.மு.க.வின் சதி திட்டம். தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை விலைகொடுத்து வாங்கலாம் என்று தி.மு.க.அரசு நினைக்கிறது. இதனை மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. என்னவிலை கொடுத்தாலும் அ.தி.மு.க.தொண்டர்கள் தி.மு.க.விற்கு விலை போகமாட்டார்கள். மதுரை மாநகராட்சி அ.தி.மு.க.தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும். அதற்கு நாம் அனைவரும் ஒன்று பட்டு உழைக்க வேண்டும். எடப்பாடியார், ஒ.பி.எஸ். கரங்களை வலுப்படுக்கின்ற வகையில் மதுரை மாவட்டம் என்றென்றும் அ.தி.மு.க.கோட்டை என்று நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மாநில எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட பொருளாளர் அண்ணாத்துரை, மாநில மாணவரணி இணை செயலாளர் பா.குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப்பிரிவு செயலாளர் மாணிக்கம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சக்திவிநாயகர் பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் எஸ்.டி.ஜெயபாலன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் சோலைராஜா, பகுதி செயலாளர்கள் பைக்காரா கருப்பசாமி, ஜோசப் தனுஷ்லாஸ், கே.ஜெயவேல், முத்துவேல், ஏ.வி.எஸ்.பிரிட்டோ, கறிக்கடை முத்துகிருஷ்ணன், கே.வி.கே.கண்ணன், தளபதி மாரியப்பன், பாஸ்கரன், ஞானசேகரன், மற்றும் முன்னாள் மேயர் கு.திரவியம், இளைஞரணி ரபீக், இலக்கிய அணி ஆர்.கே.ரமேஷ், வக்கீல் அசோகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
பா.ம.க. மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயர், படம் புறக்கணிப்பு
17 Jul 2025சென்னை: பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பா.ம.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
த.வெ.க.வின் மாநாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் மதுரை காவல்துறை எழுப்பியது
17 Jul 2025மதுரை: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு குறித்து சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
-
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jul 2025சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 18) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர்,
-
வங்கதேசத்தில் மோதல்: 4 பேர் பலி
17 Jul 2025டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
17 Jul 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது.
-
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
17 Jul 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
தலைமைத் தேர்தல் ஆணையருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
17 Jul 2025புதுடில்லி: டில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர்.
-
வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
17 Jul 2025சென்னை: வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதிஷ் அறிவிப்பு
17 Jul 2025பாட்னா, பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
-
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
17 Jul 2025கார்கில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
-
இந்தியா தாக்கப்பட்டால்... உலகிற்கு வலிமையான செய்தியை கொடுத்திருக்கிறோம்: அமித்ஷா பேச்சு
17 Jul 2025ஜெய்ப்பூர், இந்தியா தாக்கப்பட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என உலகிற்கு ஒரு வலிமையான செய்தியை நாம் கொடுத்திருக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
அடுத்த 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் அனில் கும்ப்ளே வலியுறுத்தல்
17 Jul 2025சென்னை: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய பவுலர் பும்ரா விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ள
-
பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முயற்சி: கைப் குற்றச்சாட்டு
17 Jul 2025லண்டன்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைப் குற்றம்சாட்டியுள்ளார்.
-
மதுவிலக்கு டி.எஸ்.பி. கார் முன்னறிவிப்பின்றி திரும்ப பெறப்பட்டதா? காவல் துறை விளக்கம்
17 Jul 2025சென்னை, மயிலாடுதுறையில் மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் இன்றி நடந்து சென்றதாக வெளியான செய்திக்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.