எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி, சித்திரை வந்து விட்டாலே வெயில் மண்டையை பிளக்கும். அப்படித்தான் இந்த ஆண்டும் பங்குனி ஆரம்பத்திலேயே வெயில் வெளுத்துக் கட்டுகிறது. காலை 10 மணிக்கே வெயிலின் உக்கிரத்தை மக்களால் தாங்க முடியவில்லை. சென்னை போன்ற நகரங்களில் அனல் காற்று வீசுவதால் மக்கள் தவிக்கிறார்கள். மதுரை, வேலூர் உள்ளிட்ட நகரங்களிலும் அதே நிலைதான் நீடிக்கிறது.
தமிழகத்தில் வெயிலால் அனல் பறக்கிறது என்றால் கர்நாடக மாநிலத்திலோ தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் அனல் பறக்கிறது. இம்மாநிலத்தில் அடுத்த மாதம் 5 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டபடியால் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இம்மாநிலத்தில் நடக்கவிருக்கும் தேர்தலில் பலமுனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சி, தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலுவின் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற கட்சிகள் தேர்தல் களத்தில் குதிக்கவிருக்கின்றன. 1992 ம் ஆண்டில் இருந்து இதுவரை 9 பேர் கர்நாடக முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர்.
இவர்களில் இப்போதைய முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் நீங்கலாக 8 பேர் இதற்கு முன்பு முதல்வர் பதவி வகித்துள்ளனர். இவர்களில் ஜே.எச். பாட்டீல் காலமாகி விட்டார். மற்ற 7 முன்னாள் முதல்வர்களும் தேர்தல் களத்தில் இயங்கி வருகிறார்கள். இவர்களில் சிலர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். மற்றவர்கள் பிரச்சார களத்தில் குதித்துள்ளனர்.
மத சார்பற்ற ஜனதாதளம் சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியும் தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டனர். குமாரசாமி ராமநகரம் தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. சதானந்த கவுடா, பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இதே போல இப்போதைய முதல்வரும் ஜெகதீஷ் ஷெட்டரும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பா.ஜ.க. சின்னமான தாமரைக்கு ஓட்டு வேட்டையாடி வருகிறார்.
கர்நாடக ஜனதா கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தேர்தலில் போட்டியிடுவதுடன் தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதிலும் முனைப்பு காட்டி வருகிறார். பா.ஜ.க வேட்பாளர்களை வீழ்த்த வேண்டும் என்பதே இவரது குறிக்கோளாக உள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும், முன்னாள் முதல்வருமான வீரப்ப மொய்லி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இதே போல் முன்னாள் முதல்வர்கள் எஸ்.எம். கிருஷ்ணாவும், தரம்சிங்கும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
முன்னாள் முதல்வர்களில் மிகவும் வயதானவர் யார் என்றால் அவர்தான் எஸ்.எம். கிருஷ்ணா. அவருக்கு தற்போது 81 வயதாகிறது. முன்னாள் முதல்வர்களில் இளையவர் என்றால் அவர்தான் குமாரசாமி. அவருக்கு 54 வயதாகிறது. வயதானவரான எஸ்.எம். கிருஷ்ணாவும் மற்றும் இளையவரான குமாரசாமியும் தேர்தல் களத்தில் குதிக்கவிருக்கிறார்கள். இப்படி பல முன்னாள் முதல்வர்கள் இந்த தேர்தல் பிரச்சாரக் களத்தில் குதித்திருப்பதால் அம்மாநிலத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம் நடக்கிறது.
கர்நாடக சட்டசபைக்கு 224 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இப்போது அங்கு பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக இருந்து வருகிறார். மீண்டும் நாங்களே ஆட்சியைப் பிடிப்போம் என்று இவர் மார்தட்டுகிறார். ஆனால் எடியூரப்பாவோ பா.ஜ.க வை ஆட்சிக்கு வர விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார். இருப்பினும் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. 3 இடத்துக்கு தள்ளப்பட்டது. காங்கிரஸ் முதலிடத்தையும், மதசார்பற்ற ஜனதா தளம் 2 வது இடத்தையும் பிடித்தன. ஆனால் எடியூரப்பா கட்சி படுதோல்வி அடைந்தது. எனவே சட்டமன்ற தேர்தலிலும் அவரது கட்சிக்கு இதே கதிதான் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, இம்மாநிலத்தில் நடக்கவிருக்கும் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக குஜராத் முதல்வர் மோடி வரவிருக்கிறாராம். அவருக்குப் போட்டியாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், சோனியாவின் மகனுமான ராகுல் பிரச்சாரத்திற்கு வருகிறார். இவர்கள் இருவரும் வந்த பிறகு இம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடையும். அப்போது மேலும் அனல் பறக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர்: த.வெ.க. நிர்வாகி அருண் ராஜ் பேட்டி
21 Dec 2025கோவை, விஜய் இப்போது நடிகர் அல்ல என்றும் நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும் த.வெ.க.
-
நீலகிரி மாவட்டத்தில் இன்று உறைபனி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னனை வானிலை ஆய்வு மையம், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று உறைபனி ஏற
-
தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 Dec 2025நெல்லை, தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
நெல்லை மாவட்டத்தில் 15 புதிய பேருந்துகளின் சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டத்திற்கு 15 புதிய பேருந்து போக்குவரத்து சேவையை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-12-2025.
21 Dec 2025 -
பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் விரைவில் அறிவிப்பார்: செந்தில்பாலாஜி தகவல்
21 Dec 2025கோவை, பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. சார்பில் இன்று விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி
21 Dec 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் இன்று (திங்கள்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறத
-
தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்
21 Dec 2025புதுச்சேரி, தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போதுவரை தொடர்கிறோம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. கூட்டணியில் தொடர காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்
21 Dec 2025மதுரை, பதவி ஆசை இல்லாததே தி.மு.க. கூட்டணியில் தொடரக் காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் விளக்கமளித்தாா்.
-
செவிலியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
21 Dec 2025சென்னை, செவிலியர்களின் சில கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
பூமியின் சுழற்சியிலிருந்து மின்சாரம் தயாரித்த அமெரிக்க விஞ்ஞானிகள்..!
21 Dec 2025நியூயார்க், பூமியின் சுழற்சி, காந்தப்புலத்தைப் பயன்படுத்தி எரிபொருள் இன்றி மின்சாரம் தயாரிக்கும் சிறிய கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
-
தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி
21 Dec 2025கேப் டவுன், தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியான நிலையில், 10 பேர் படுகாயமடைந்தனர்.
-
உக்ரைன் போர் முடிவுக்கு வருமா...? அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை
21 Dec 2025வாஷிங்டன், உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 396வது நாளாக போர் நீடித்த நிலையில், போரை நிறுத்த அமெரிக்கா - ரஷ்யா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
நெல்லைக்கு 3 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
21 Dec 2025நெல்லை, ரூ.16 கோடி செலவில், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய மகளிர் தங்கும் விடுதி உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு 3 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளி
-
கிழக்கு சீன கடல் பகுதியில் உலகின் மிகப்பெரிய தங்கப்படிமம் கண்டுபிடிப்பு
21 Dec 2025பெய்ஜிங், கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கடியிலான தங்க படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது.
-
கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
21 Dec 2025நெல்லை, தமிழக நாகரிகத்தின் தொன்மை குறித்து கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
அரியானாவில் நிலநடுக்கம்
21 Dec 2025சண்டிகர், அரியானாவில் உள்ள ரோஹ்தக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
வரலாற்றை படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
21 Dec 2025நெல்லை, வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகத்திற்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
சட்டசபை தேர்தலை முன்னிட்டு டிச. 29-ல் பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்
21 Dec 2025சென்னை, வரும் டிச. 29-ல் நடைபெறவுள்ள பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்துக்கு அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
-
மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு காந்தியின் பெயர் சூட்டினார் மம்தா
21 Dec 2025கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் அம்மாநில முதல்வர் மம்தா பானார்ஜி சூட்டியுள்ளார்.
-
2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பல்வேறு திட்டங்கள் மத்திய நிதி அமைச்சர் அறிவிப்பு
21 Dec 2025பெங்களூரு, 2047ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான துணைத் திட்டங்களை வகுக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித
-
17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: போராட்டத்துக்கு இம்ரான்கான் அழைப்பு
21 Dec 2025லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
-
ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட பொதுமக்களுக்கு வரும் 23-ம் தேத முதல் அனுமதி
21 Dec 2025நெல்லை, பொருநை அருங்காட்சியகத்தை டிச.23 முதல் பொதுமக்கள் பாா்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



