எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூலை.6 - தமிழகத்தில் நடைபெற்ற கூட்டுறவுச் சங்கங்களுக்கான மூன்றாம் நிலைத் தேர்தலில் 1569 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் ம.ரா.மோகன், தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-
மூன்றாம் நிலைத் தேர்தல் தமிழகத்தில் மூன்றாம் நிலையில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், தமிழ்நாடு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகளின் இணையம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையம் உள்ளிட்ட சங்கங்களுக்கும், பால் வளத்துறை ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்), மீன்வளத்துறை இயக்குநரின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம், கைத்தறித் துறை இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் (கோ-ஆப்டெக்ஸ்), தமிழ்நாடு கூட்டுறவு நூற்பாலைகளின் இணையம், தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் நூற்பாலை, ஈரோடு, தமிழ்நாடு பனைவெல்ல வளர்ச்சி வாரியத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குநரின் கீழ்வரும் தமிழ்நாடு மாநில கயிறு விற்பனை கூட்டுறவு இணையம், தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் தொழில் கூட்டுறவு விற்பனை இணையம், தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு ரப்பர் பால் கலந்த கயிறு பொருட்கள் சங்கம், வேளாண்மைத்துறை இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ள 10 வேளாண் பொறியியல் மற்றும் சேவை கூட்டுறவு சங்கங்கள், சர்க்கரைத் துறை இயக்குநரின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையம், பட்டுப்பூச்சி வளர்ப்புத் துறை இயக்குநரின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் இணையம், (டான்சில்க்), வீட்டுவசதி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் உள்ளிட்ட மொத்தம் 83 சங்கங்களுக்கு மூன்றாம் நிலையில் தேர்தல் நடைபெறும் என கடந்த 13.06.2013 அன்று கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கான தேர்தல் அட்டவணையும் அன்றே ஆணையத்தால் வெளியிடப்பட்டிருந்தது. ஒரு சங்கத்தில் கலைத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மீதம் உள்ள 82 சங்கங்களில் வேட்பு மனுத்தாக்கல் 02.07.2013 அன்று நடைபெற்றது. 03.07.2013 அன்று மாலை 4.00 மணி வரை வேட்பு மனுக்கள் திரும்பப் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டது.
போட்டியின்றி தேர்வு
வேட்பு மனுக்கள் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்ததும் 80 சங்கங்களில் 1569 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 623 பேர் தனி நபர்கள் தொகுதியிலிருந்தும், 946 பேர் சங்க பிரதிநிதிகளுக்கான தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மொத்தம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்- பட்டுள்ள 1569 நிர்வாகக் குழு உறுப்பினர்களில் 295 பேர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டின் கீழும், 456 பேர் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழும், 818 பேர் பொதுப்பிரிவின் கீழும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
போட்டியுள்ள சங்கங்கள்
மூன்றாம் நிலைத் தேர்தலில் 82 சங்கங்களில் 80 சங்கங்களில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனவே மீதமுள்ள 2 சங்கங்களில் மட்டுமே நிர்வாகக் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் நாள்
மூன்றாம் நிலைத் தேர்தலில் 2 சங்கங்களில் 36 நிர்வாகக் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 08.07.2013 அன்று நடைபெறவுள்ளது. இதற்காக 77 பேர் களத்தில் உள்ளனர்.
தலைவர் / துணைத்தலைவர் தேர்தல்
மூன்றாம் நிலைத் தேர்தலில் இடம் பெற்றுள்ள 82 சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூடி தங்களுக்குள் தலைவர் / துணைத்தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர். இதற்கான தேர்தல் வரும் 15.07.2013 அன்று நடைபெறவுள்ளது.
பதவியேற்பு
மூன்றாம் நிலைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 17.07.2013 புதனன்று பதவியேற்க உள்ளார்கள்.
நான்காம் நிலைத் தேர்தல்
நான்காம் நிலையில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், கூட்டுறவு அச்சகங்கள், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட 58 சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு மாநில தேர்தல் ஆணையர் ம.ரா. மோகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-07-2025.
18 Jul 2025 -
திருநின்றவூரில் வரும் 25-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
18 Jul 2025சென்னை : திருநின்றவூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
18 Jul 2025சென்னை : கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடைபெற உளள ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டு விழாவில் அவரது நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.
-
பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருக்கும் கட்சியோடு ஒருபோதும் சேரமாட்டோம் : த.வெ.க. மீண்டும் திட்டவட்டம்
18 Jul 2025சென்னை : மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
-
எதிரிகளை ஓரணியில் நின்று விரட்டியடிக்க உறுதி ஏற்போம் : தமிழ்நாடு நாளில் துணை முதல்வர் பதிவு
18 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்கக் கூட்டத்தின் சதியை, மு.க.ஸ்டாலின் முறியடித்தார் என உதயநிதி தெரிவித்துள்ளார்;
-
விஜய் தலைமையில் நாளை த.வெ.க. மாவட்ட செயலாளர்களின் கூட்டம் : மதுரையில் மாநாடு குறித்து ஆலோசனை
18 Jul 2025சென்னை : சென்னையில் நாளை த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: சகோதரர் உள்பட 5 பேர் சி.பி.ஐ. முன்பு நேரில் ஆஜராகி விளக்கம்
18 Jul 2025சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 29) சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் விசாரணை என்ற பெயரில்
-
‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பயங்கரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்புக்கு இந்தியா வரவேற்பு
18 Jul 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை’ பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள அமெரி
-
புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்: புதுச்சேரி முதல்வர் நேரில் வாழ்த்து
18 Jul 2025புதுச்சேரி : புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டுக்கு நேரில் சென்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
வரும் பார்லி. கூட்டத்தொடரில் கல்வி - நிதி உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க குரல் கொடுப்போம் : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்
18 Jul 2025சென்னை : வரும் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், கடந்த 11 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து வரும் பா.ஜ.க.
-
பீகார் மாநிலத்தில் ரூ.7,200 கோடியில் திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
18 Jul 2025மோட்டிஹரி : நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதற்கு பீகார் வளர்ந்த மாநிலமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித
-
தமிழ்நாடு நாள் வரலாற்றில் தனிப்பெரும் நாள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
18 Jul 2025சென்னை : தமிழ்நாடு நாள் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 159 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
18 Jul 2025சென்னை, சென்னை பெருநகர மாநகராட்சி ராயபுரம் பேசின் பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற
-
மதுபானக் கொள்கை முறைகேடு: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மகன் கைது
18 Jul 2025ராய்பூர் : மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகனும், தொழிலதிபருமான சைதன்யா பாகேலை அமலாக்கத் துறை நேற்று கைத
-
பெருந்தலைவர் காமராஜர் விவகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை சந்திப்பு
18 Jul 2025சென்னை : காமராஜர் விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார்.
-
ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா: சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பம்
18 Jul 2025ஓசூர், ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது.
-
இன்டியா கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆம் ஆத்மி கட்சி : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
18 Jul 2025புதுடெல்லி : தேசிய அளவில் இன்டியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக, அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
-
திருவண்ணாமலை கோவிலில் ரூ.100 கட்டண தரிசனம் விரைவில் அமல்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
18 Jul 2025சென்னை, திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவிலில் பிரேக் தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன முறை விரைவில் அமல் படுத்தப்பட உள்ளதாகவும், ரூ.200 கோடியில் பெருந்திட்ட பணிகள் தயார
-
பீகாரில் பருவமழை தீவிரம்: மின்னல் தாக்கி 33 பேர் பலி
18 Jul 2025பாட்னா : பீகாரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மின்னல் தாக்குதல் சம்பவங்களில் 33 பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
அகமதாபாத் விமான விபத்து விவகாரம்: அமெரிக்க இதழின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த விசாரணைக்குழு
18 Jul 2025அகமதாபாத், அகமதாபாத் விமான விபத்துக்கு விமானிதான் காரணம் என்று அமெரிக்க இதழில் அறிக்கையை வெளியிட்டது. அதனை மறுத்துள்ளது விசாரணை குழுவினர்.
-
கூட்ட நெரிசல்: தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு: முதல்வர் சித்தராமையா தகவல்
18 Jul 2025பெங்களூரு, ஆர்.சி.பி.
-
த.வெ.க.வுடன் கூட்டணியா..? தேர்தல் வியூகத்தை வெளியே சொல்ல முடியாது - இ.பி.எஸ்.
18 Jul 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் உடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
-
இன்டியா கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆம் ஆத்மி கட்சி : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
18 Jul 2025புதுடெல்லி : தேசிய அளவில் இன்டியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக, அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 6 மாதத்திற்கு பிறகு வள்ளி குகையில் வழிபாடுக்கு பக்தர்களுக்கு அனுமதி
18 Jul 2025திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள வள்ளி குகையில் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
-
5 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய இன்டெல் திடீர் முடிவு
18 Jul 2025நியூயார்க், அமெரிக்காவின் ஒரேகான் அலுவலகத்தில் மட்டும் 2,392 பேர் பணி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.