எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்காசி, திடீர் வெள்ளப்பெருக்கால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், வெள்ளப் பெருக்கை முன்கூட்டியே கண்காணிக்கவும் நவீன சென்சார் கருவிகளை பொருத்த வனத்துறை உதவியுடன் குற்றால அருவியின் மேல் பகுதியில் அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தென்காசி குற்றால அருவிகளில் தீடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இது போன்று திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நவீன சென்சார் கருவிகளை மலைப் பகுதிகளில் பொருத்தி, வெள்ளம் வருவதை முன்கூட்டியே கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் நவீன சென்சார் கருவிகளை அனைத்து அருவிகளின் மேல் பகுதியில் பொருத்த தென்காசி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குழுவினர் நேற்று குற்றாலம் சென்றனர்.
அவர்கள் மலைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு எந்தெந்த இடங்களில் இந்த கருவிகளை பொறுத்தலாம் என்பது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். வனத்துறை குழுவினர் உதவியுடன் அருவியின் மேல் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026


