எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், தலை சிறந்த வீரர்களில் ஒருவருமான ரிக்கி பாண்டிங், ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 7 சீசன்களாக பணியாற்றி வந்தார். இவரது தலைமையின் கீழ் டெல்லி அணி சிறப்பாக செயல்பாடுகளை வெளிப்படுத்திய போதிலும், கோப்பையை வெல்ல முடியவில்லை. மேலும் கடந்த 3 சீசன்களாக பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை.
இந்நிலையில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து பாண்டிங்கை நீக்குவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து டெல்லி அணி நிர்வாகம், தனது எக்ஸ் பக்கத்தில், "7 சீசன்களுக்குப் பிறகு, டெல்லி கேப்பிடல்ஸ் ரிக்கி பாண்டிங்கை விட்டு விலக முடிவு செய்துள்ளது. இது ஒரு சிறந்த பயணம், பயிற்சியாளர்! எல்லாவற்றிற்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளது.
____________________________________________________________________________________
காம்பீருக்கு புகழாரம்
அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் செயல்படுபவர் கௌதம் கம்பீர் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் டி20 உலகக் கோப்பைத் தொடருடன் ஓய்வு பெற்றார். இதனையடுத்து, இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள தொடரிலிருந்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.
இந்த நிலையில், அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் செயல்படுபவர் கௌதம் கம்பீர் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: கௌதம் கம்பீரிடமிருந்து நான் கற்றுக் கொண்டது என்னவென்றால், நமக்கு எதிராக விளையாடுபவரைக் காட்டிலும் 100 சதவிகித உழைப்பை கொடுத்து நாம் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதுதான். அணியில் ஆலோசனை நடைபெறும் போதும் மற்றும் தனித்தனியாக வீரர்களிடத்தில் பேசும் போதும் கௌதம் கம்பீர் குறைவாகவே பேசுவார் என்றார்.
____________________________________________________________________________________
கோலிக்கு ஆண்டர்சன் பாராட்டு
இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மட்டும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி ஆண்டர்சன் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியுடன் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார். முதல் மற்றும் 2-வது இடங்கள் முறையே முரளிதரன் (800 விக்கெட்டுகள்), வார்னே (708) உள்ளனர்.
தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய பின்பு பேசிய ஆண்டர்சன், விராட் கோலியை புகழ்ந்தார். "ஆரம்ப காலத்தில் விராட் கோலிக்கு எதிராக விளையாடுவது மிகவும் எளிதாக இருக்கும். ஒவ்வொரு பந்திலும் அவரை வீழ்த்திவிடலாம் என்றே தோன்றும். ஆனால், இப்போது அப்படியெல்லாம் அவரை வீழ்த்த முடியாது. அவருக்கு எதிராக விளையாடும்போது தாழ்வு மனப்பான்மை ஏற்படும்" என்று ஆண்டர்சன் தெரிவித்தார். ஆண்டர்சனுக்கு எதிராக கோலி 36 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். அதில் 7 முறை கோலியின் விக்கெட்டை ஆண்டர்சன் வீழ்த்தியுள்ளார்.
____________________________________________________________________________________
விம்பிள்டன் பரிசுத்தொகை
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி உடன் மோதுகிறார். இந்நிலையில், விம்பிள்டன் தொடரில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் சாம்பியன்களுக்கு தலா ரூ.28 கோடியும், 2-வது இடத்தை பிடிப்போருக்கு தலா ரூ.13 கோடியும் பரிசுத்தொகையாக கிடைக்கும். போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.534 கோடியாகும். இது கடந்த ஆண்டை விட 11.9 சதவீதம் அதிகமாகும். முதல் சுற்றில் வெளியேறும் போட்டியாளர்கள் 63 லட்சம் பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 days ago |
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
31 May 2025சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 1) முதல் ஜூன் 6-ம் தேதி வரை, அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கா
-
தி.மு.க., பொதுக்குழு கூட்டம்; மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்பு
31 May 2025மதுரை : 2 நாட்கள் பயணமாக மதுரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
இந்தியா 'ஏ' - இங்கி., லயன்ஸ் முதல் டெஸ்ட்: கருண் நாயர் இரட்டை சதம்
31 May 2025கேன்டர்பரி : இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் இரட்டை சதம் விளாசினார்.
-
இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 50 சதவீதம் வரி : அதிபர் ட்ரம்ப் புதிய அறிவிப்பு
31 May 2025நியூயார்க் : அமெரிக்காவில் இரும்பு இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த போகிறோம் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அனுமதி
31 May 2025சென்னை : தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
-
மதுரையில் இன்று தி.மு.க. பொதுக்குழு: பங்கேற்பவர்களுக்கு தடபுடல் விருந்து
31 May 2025மதுரை, மதுரையில் நடைபெற உள்ள தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வழங்கப்படவுள்ள மதிய விருந்து பட்டியல் வெளியாகியுள்ளது.
-
பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
31 May 2025போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் மாறிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
இதுவரை 38 பேருக்கு கொரோனா பாதிப்பு: தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
31 May 2025சென்னை, “தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தான் விரோதத்தை மட்டுமே கொடுக்கிறது: தலைமை தளபதி
31 May 2025புதுடெல்லி, “இந்தியா ராஜதந்திர தொடர்புகளை கொண்டிருந்தபோதிலும் பாகிஸ்தானிடமிருந்து விரோதத்தைத் தவிர வேறு எதையும் திரும்பப் பெறவில்லை.” என முப்படை தலைமை தளபதி அனில் சவுகா
-
திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்..!
31 May 2025திருச்செந்தூர், திருச்செந்தூரில் கடல் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
மாவோயிஸ்டுகள் 8 பேர் சரண்
31 May 2025ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் 8 பேர் போலீசில் சரண் அடைந்துள்ளனர்.
-
பெருவெற்றியைப் பெற்றிடப் பொதுக்குழு கூடிடும் மாமதுரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
31 May 2025மதுரை, மதுரை பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தந்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
-
இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதா? - முப்படை தலைமை தளபதி விளக்கம்
31 May 2025புதுடில்லி : பாகிஸ்தான் மீதான போரில் இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு முப்படை தலைமை தளபதி விளக்கமளித்துள்ளார்.
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம்: நோபல் பரிசை வாங்கவே டிரம்ப் தம்பட்டம் அடிப்பதாக விமர்சனம்
31 May 2025வாஷிங்டன், அமைதிக்கான நோபல் பரிசு வாங்கி விட வேண்டும் என்பதற்காக, இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்வதாக விமர்சன
-
வட கிழக்கு மாநிலங்களில் கனமழை: அசாமில் நிலச்சரிவுக்கு 5 பேர் பலி
31 May 2025இட்டாநகர், அசாமின் காம்ரூப் மெட்ரோ மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
-
இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: ஹிஸ்புல்லா தளபதி பலி
31 May 2025பெரூட் : இஸ்ரேல் டிரோன் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி உயிரிழந்தார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம் செய்தார் அர்ச்சனா
31 May 2025சென்னை : தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
-
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
31 May 2025ஜப்பான் : ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 20 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
-
தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை அமைத்து வருகிறோம்: பா.ம.க. தலைவர் அன்புமணி பேச்சு
31 May 2025சோழிங்கநல்லூர், சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அதற்கான வியூகங்களை அமைத்து வருகிறோம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
-
வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க 7-வது நாளாக தொடரும் தடை
31 May 2025நெல்லை : குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
மதுரையில் இன்று தி.மு.க பொதுக்குழு கூட்டம் : 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
31 May 2025மதுரை : 47 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் இன்று தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. உத்தங்குடி, கலைஞர் திடலில் இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-05-2025.
31 May 2025 -
பச்சிளம் குழந்தை விரல் துண்டிப்பு: செவிலியர் மீது வழக்குப்பதிவு
31 May 2025வேலூர் : வேலூரில் செவிலியரின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
-
வந்தே பாரத் ரயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்? பயணிகள் புகார்
31 May 2025சென்னை : வந்தே பாரத் ரயிலில் காலை உணவிற்கான மெனுவில் அசைவ உணவிற்கான ஆப்சனை முன் அறிவிப்பின்றி ரயில்வே நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,710 ஆக அதிகரிப்பு
31 May 2025புதுடெல்லி, இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது.