எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : 2026 சட்டமன்ற தேர்தலில் தோல்வி என்ற பரிசை மு.க.ஸ்டாலினுக்கு வழங்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்று அ.தி.மு.க.மாநில மருத்துவரணி இணை செயலாளர் டாக்டர் பா.சரவணன் தெரிவித்தார்.
இது குறித்து அ.தி.மு.க. மாநில மருத்துவரணி இணை செயலாளர் டாக்டர் பா சரவணன் கூறியதாவது;
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தி.மு.க. அரசு என்றைக்கு பொறுப்பு ஏற்றதோ அன்று முதல் இன்று வரை மக்கள் மக்கள் எண்ணற்ற துயரம் அடைந்து வருகிறார்கள்.குறிப்பாக சொத்து வரி உயர்வு, மின் கட்டண வரி உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு இது போன்ற விலைவாசி உயர்வால் மக்களை கசக்கி வருகிறது ஸ்டாலின் அரசு. இதனால் மக்கள் படும் அவதிகளை பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்டாலின் அரசுக்கு மக்களின் மனசாட்சியாக திகழும் எடப்பாடியார் பாடம் புகட்டி வருகிறார்.
மேலும் தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அதேபோல் கள்ளச்சாராயம் அதிகரித்து வருகிறது என்று நாள்தோறும் சுட்டிக்காட்டி வருகிறார். அதே போல் இந்தியாவிலே அதிக கடன் சுமை மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. அதேபோல் சுகாதாரத்துறை எடுத்துக் கொண்டால் 11,000 மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர் பற்றாக்குறை மருந்துகள் பற்றாக்குறை இந்த நிலையில் தான் பார்க்க முடிகிறது.அரசு மருத்துவமனையை எடுத்துக் கொண்டால் மருத்துவமனைகள் காட்சி பொருளாக இருக்கிறது மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 4,000 கோடியில் பணிகளை செய்துள்ளோம் ஒரு சொட்டு தண்ணீர் இருக்காது என்று கூறினார்கள். ஆனால் சென்னை மழை நீரால் ஆறு போல காட்சி அளித்தது அந்த 4,000 கோடி என்ன ஆனது என்று தெரியவில்லை?.தற்போது கூட புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடப்பாடியார் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டு மக்களுக்கு நிவாரண வழங்கி ஆறுதல் கூறி வருகிறார். தொடர்ந்து அந்த மக்களின் பிரச்சினைகளை அறிக்கை வாயலாகவும், ஊடகத்தின் வாயிலாகவும் பேட்டி அளித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அரசுக்கு வலியுறுத்தி தனத் கடமையாற்றி வருகிறார்.
ஒரு அரசின் கடமை என்றால் எதிர்க்கட்சிகள் கூறிய கருத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும் ஆனால் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலினுக்கு பக்குவமில்லாமல் பேசுகிறார்.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு தான் கருத்துக்களை கூறுகிறார். குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.ஆனால் அதை நாங்கள் மதிப்பதில்லை என்பது ஸ்டாலின் கூறுவது முதலமைச்சர் பதவி அழகு அல்ல,முதலமைச்சர் பதவி பதவிக்கு இலக்கணம் அல்ல.
ரோம் நகர் பற்றி பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல, இன்றைக்கு தமிழக மக்கள் படும் துயரங்களைப் பற்றி கவலைப்படாமல், தனது மகன் உதயநிதியை துணை முதலமைச்சர் ஆகிவிட்டோம், எப்படியாவது முதலமைச்சராக்கிவிட வேண்டும் என்ற கனவில் தான் மிதந்து கொண்டிருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் என்ன கூறினாலும், நாங்கள் மதிப்பதில்லை என்று ஆணவத்துடன் பேசி வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட மக்கள் வழங்க மாட்டார்கள். மக்களுக்காக உழைக்கும், மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து வரும் எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவார்கள் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-07-2025.
11 Jul 2025 -
தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது: டெல்லியை அச்சுறுத்தும் தமிழ்நாட்டின் வளர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
11 Jul 2025சென்னை, தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வி போன்றவற்றில் தமிழ்நாட்டின் வளர்ச்சி டெல்லியை
-
அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்: விஜய்
11 Jul 2025சென்னை : மாவீரர் அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.
-
கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. பலமாக இருக்கும்: இ.பி.எஸ்.
11 Jul 2025விழுப்புரம் : கூட்டணி இல்லை என்றால் தி.மு.க. இல்லை. கூட்டணி இருந்தாலும், இல்லையென்றாலும் பலமாக இருக்கும் கட்சி அ.தி.மு.க. என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
தங்கம் விலை ரூ.440 உயர்வு
11 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 11) பவுனுக்கு ரூ.440 உயர்ந்து விற்பனையானது.
-
தமிழ்நாட்டு பயங்கரவாத செயல்கள் இல்லாத மாநிலம் : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உறுதி
11 Jul 2025சென்னை : வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவ
-
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கனடா நாட்டு பொருட்களுக்கு 35 சதவீத வரி: டிரம்ப் அறிவிப்பு
11 Jul 2025வாஷிங்டன் : ''ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியா பயணம்
11 Jul 2025மாஸ்கோ : ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
-
பிரதமரின் வெளிநாட்டு பயணம்: பஞ்சாப் முதல்வர் விமர்சனம்
11 Jul 2025புதுடெல்லி : “பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தானுக்கும் செல்லலாம். ஆனால், அவரைப் போல நம்மால் செல்ல முடியாது” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார்.
-
பாக்.கில் கிளர்ச்சியாளர்களால் பயணிகள் 9 பேர் சுட்டுக்கொலை
11 Jul 2025கராச்சி : பாகிஸ்தானில் பஸ்சில் சென்ற 9 பேரை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்றனர்.
-
தமிழகத்தில் 6,990 நடுநிலைப் பள்ளிகளில் ‘ஹைடெக்’ ஆய்வகங்கள் வரும் 15-ம் தேதி திறப்பு
11 Jul 2025சென்னை, தமிழகத்தில் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் ‘ஹைடெக்’ ஆய்வகங்களை, காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளன்று முதல்வர் மு.க.ஸ்
-
ஆடு, மாடுகள் முன் சீமான்: அமைச்சர் சிவசங்கர் வருத்தம்
11 Jul 2025அரியலூர் : ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு சீமான் தள்ளபட்டுள்ளார் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
-
தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு
11 Jul 2025சென்னை : தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
குன்றக்குடி அடிகளாரின் தொண்டு தொடரட்டும்: முதல்வர் புகழாரம்
11 Jul 2025சென்னை : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி தனது பெயரை மாற்றிக்கொள்ளலாம்: அமைச்சர் சேகர்பாபு
11 Jul 2025சென்னை : எடப்பாடி பழனிசாமி தனது பெயரை 'பல்டி' பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
கீழடி விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
11 Jul 2025சென்னை : கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார்.
-
ஜி-மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்
11 Jul 2025வாஷிங்டன் : ஜி மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.
-
வரும் 27,28-ம தேதிகளில் 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
11 Jul 2025சென்னை, வரும் 27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.
-
குரூப்-4 வினாத்தாள் கசிவா? - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மறுப்பு
11 Jul 2025சென்னை : குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் விளக்கமளித்துள்ளார்.
-
தமிழகத்தில் நிபா வைரஸ் இல்லை: பொதுசுகாதாரத்துறை
11 Jul 2025சென்னை : தமிழகத்தில் 'நிபா' வைரஸ் இல்லை. மக்கள் பீதி அடைய தேவையில்லை என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
வெள்ளம், நிலச்சரிவு பாதித்த 6 மாநிலங்களுக்கு ரூ.1,067 கோடி நிதி
11 Jul 2025புதுடெல்லி : வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,066 கோடியே 80 லட்சத்தை விடுவிக்க
-
பீகார் தேர்தலை 'திருட' பா.ஜ.க. முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
11 Jul 2025புவனேஸ்வர் : மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, பீகார் தேர்தலையும் திருட பா.ஜ.க. முயல்கிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: அமெரிக்காவுக்கு இந்திய குழு விரைவில் பயணம்
11 Jul 2025புதுடெல்லி : வர்த்தக ஒப்பந்த பேசசுவார்த்தைககு அமெரிக்காவுககு இந்திய குழுவினர் பயணம் செய்ய உள்ளனர்.
-
வழக்கின் சாட்சிகளை அழிக்க முயற்சி: தென்கொரியா முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு
11 Jul 2025சியோல் : தென் கொரியா அதிபராக இருந்தவர் யூன் சுக் இயோல். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
-
கடமை தவறுவது போல் தெரிகிறது: அ.தி.மு.க. தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும்? தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் கேள்வி
11 Jul 2025சென்னை, அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கடமை தவறுவது போல் தெரிவதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.