எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடில்லி, 2025-ஆம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது.
தெற்கு காஷ்மீரில் உள்ள 3,880 மீட்டர் உயரமுள்ள குகைக் கோயிலுக்கு 52 நாள் புனித யாத்திரை ஜூலை 3 அன்று தொடங்கி ரக்ஷா பந்தன் பண்டிகையான ஆகஸ்ட் 9-ஆம் தேதி நிறைவடையும் என்று அமர்நாத் ஆலய வாரியம் அறிவித்துள்ளது.
அமர்நாத் யாத்திரை தொடங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யும் நடவடிக்கையாகத் தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மலை மீட்புக் குழுக்கள் சிறப்புப் பயிற்சி பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமர்நாத் குகையை அடைய இரண்டு மலையேற்றப் பாதைகள் உள்ளன. பால்டால் வழியாக குறுகிய பாதை, ஸ்ரீநகர் வழியாகச் செல்லும் பாரம்பரிய வழிகள் என இரண்டு வழியாக பக்தர்கள் செல்கிறனர். இந்த இரண்டு வழிகளிலும் முக்கியமாக இடங்களில் பக்தர்களுக்கு உதவுவதற்காக வீரர்கள் நிறுத்தப்பட்டு வருகிறார்கள்.
யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், நேற்று காலை முதல் ரெஹாரி கிளையில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கியில் திரளானோர் பதிவு செய்து வருகின்றனர். யாத்திரை மேற்கொள்ள விரும்புபவர்கள் அனைவரும் பதிவு செய்வது அவசியமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


