முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024 நீட் தேர்வில் முறைகேடு: 14 மாணவர்களின் சேர்க்கை ரத்து 26 பேர் சஸ்பெண்ட்

சனிக்கிழமை, 3 மே 2025      இந்தியா
NEET 2024-05-04

புதுடெல்லி, நீட் தேர்வில் முறைகேடு தொடர்பாக  14 மாணவர்களின்  சேர்க்கை ரத்து செய்யப்பட்டு 26 பேரை சஸ்பெண்ட் செய்து தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

2024-ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடு, ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்டவை நடைபெற்றது. சி.பி.ஐ., தேசிய தேர்வு முகமை இணைந்து நடத்திய விசாரணையில் இது தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2024-25 கல்வியாண்டுக்கான 14 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்து தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி.) நேற்று அதிரடியாக உத்தரவிட்டது. விதிமீறல்களுக்கு உடந்தையாக இருந்த 26 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் முறைகேடுகளில் ஈடுபட்ட 42 பேர் மறுதேர்வு எழுத 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு நீட் தேர்வு எழுதிய 215 தேர்வர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. 2025-26 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து