எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
லீட்ஸ் : தங்களுக்கான வாய்ப்புகளை இங்கிலாந்து அணியினர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர் என்று தெரிவித்துள்ள கேப்டன் சுப்மன் கில் எங்களுக்கான வாய்ப்புகள் கிடைத்தும் தவற விட்டோம் என்று தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
364 ரன்கள் குவிப்பு...
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட் சதத்தால் 364 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 4-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது.
82 ஓவர்களில்...
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று முன்தினம் நடந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 82 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 373 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து விரட்டிப்பிடித்த 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஜோ ரூட் 53 ரன்னுடனும், ஜாமி சுமித் 44 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் ஷர்துல் தாக்குர், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். பும்ராவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை.
தவற விட்டோம்....
இந்நிலையில் தோல்வி குறித்து பதில் அளித்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், "இந்த டெஸ்ட் போட்டி மிகவும் சிறப்பானதாக எங்களுக்கு அமைந்தது. எங்களுக்கான வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் நாங்கள் பல கேட்ச்களை தவற விட்டோம். அதுமட்டுமல்லாமல் எங்கள் அணியின் கீழ் வரிசை வீரர்கள் பெரிய அளவு ரன்கள் சேர்க்கவில்லை. இந்த இரண்டு விஷயங்களால் நாங்கள் இந்த போட்டியை இழந்து விட்டோம்.
430 ரன்கள் இலக்கு...
நாங்கள் 430 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று நினைத்தோம். துரதிர்ஷ்டவசமாக எங்கள் கடைசி 6 விக்கெட்டுகள் வெறும் 25 ரன்களில் நாங்கள் இழந்து விட்டோம். எங்களுக்கு பல வாய்ப்புகள் அமைந்தது. ஆனால் அதை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. நாங்கள் ஏற்கனவே முதல் இன்னிங்சில் கடைசி கட்டத்தில் கொத்தாக விக்கெடுகள் இழந்ததை பற்றி பேசினோம். வரவிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் இந்த பிரச்சனையை நாங்கள் சரி செய்ய வேண்டும். இது போன்ற ஆடுகளங்களில் விக்கெட் எடுக்கும் வாய்ப்பு மிகவும் எளிதாக இருக்காது. எனினும் எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனுபவம் இல்லாதவர்கள். இளம் வீரர்களால் நிறைந்தது எங்கள் அணி. எனவே அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
மிகவும் கடினமாக...
முதல் செஷனில் நாங்கள் நன்றாகவே பந்து வீசினோம். பெரிய அளவு ரன்களை கொடுக்கவில்லை. ஆனால் பந்து பழையதாக மாறியவுடன் ரன்களை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. பந்து பழையதாக மாறிய பிறகும் விக்கெட்டை எடுக்கும் யுக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். பந்து பழையதாகிவிட்ட பிறகு அவர்கள் நன்றாக பேட் செய்தனர். அவர்கள் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டனர். ஜடேஜா நன்றாக பந்து வீசி வாய்ப்புகளை ஏற்படுத்தினார். இதேபோன்று பும்ரா எந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. ஒவ்வொரு போட்டிக்கு முன்பு தான் நாங்கள் அதற்கான முடிவை எடுப்போம். என்று கில் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-06-2025.
25 Jun 2025 -
சீனா அச்சுறுத்தல் எதிரொலி: சொந்த மண்ணில் ஜப்பான் முதல் ஏவுகணை சோதனை
25 Jun 2025ஜப்பான் : ஜப்பான் தனது முதல் ஏவுகணை சோதனையை அதன் மண்ணில் நடத்தியுள்ளதாக ஜப்பானிய இராணுவம் தெரிவித்துள்ளது.
-
ராமதாஸ் சொல்வதுதான் முடிவு: அருள் எம்.எல்.ஏ. திட்டவட்டம்
25 Jun 2025திண்டிவனம் : டாக்டர்.ராமதாஸ் சொல்வது தான் முடிவு. அவர் சொல்வதை செய்யப் போகிறோம் என்று சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாக். பிரதமர் மீண்டும் அழைப்பு
25 Jun 2025பாகிஸ்தான் : இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
2026 தேர்தல்: தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் முதல் விஜய் சுற்றுப்பயணம்
25 Jun 2025சென்னை, 2026 தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் முதல் சுற்றுப்பயணத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்க இருக்கிறார்.
-
1-ம் வகுப்பு முதல் இந்தி மொழி: மகாராஷ்டிரா துணை முதல்வர் எதிர்ப்பு
25 Jun 2025மும்பை : மகாராஷ்டிராவில் 1-ம் வகுப்பில் இருந்து இந்தி கற்றுக்கொள்ளப்படும் என மும்மொழிக் கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் எதிர
-
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக புகார்: ஈரானில் 3 பேருக்கு தூக்கு
25 Jun 2025துபாய், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு ஈரானில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
நாங்கள் பல கேட்ச்களை தவற விட்டதால் தோல்வி : கேப்டன் சுப்மன் கில் கருத்து
25 Jun 2025லீட்ஸ் : தங்களுக்கான வாய்ப்புகளை இங்கிலாந்து அணியினர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர் என்று தெரிவித்துள்ள கேப்டன் சுப்மன் கில் எங்களுக்கான வாய்ப்புகள் கிடைத்தும் தவற வி
-
ஐ.சி.சி. பேட்டர்கள் தரவரிசை: இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் கில், ரிஷப் பண்ட் முன்னேற்றம்
25 Jun 2025துபாய் : ஐ.சி.சி. பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் ரிஷப் பண்ட், கில் ஏற்றம் கண்டுள்ளனர்.
முதல் இடத்தில் ரூட்...
-
சமூகநீதி வெளிச்சத்தை பாய்ச்சியவர் வி.பி.சிங்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
25 Jun 2025சென்னை, சமூகநீதி வெளிச்சத்தை பாய்ச்சியவர் என்று வி.பி.சிங்கிற்கு துணை முதல்வர் உதயநிதி புகழாரம் சூட்டியுள்ளார்.
-
ஈரானின் அணு நிலையங்கள் அழிப்பு: ட்ரம்ப் திட்டவட்டம்
25 Jun 2025அமெரிக்கா : ஈரானில் உள்ள அணு நிலையங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை
25 Jun 2025சென்னை, போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஷ்ரகாந்தை அடுத்து போலீசிடம் சிக்கியுள்ள நடிகர் கிருஷ்ணாவிடம் தற்போது
-
இந்திய அணிக்கு எதிராக 2 முறை 350-க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்து இங்கிலாந்து அணி சாதனை
25 Jun 2025லண்டன் : இந்திய அணிக்கு எதிராக 350க்கும் அதிகமான ரன்களை சேஸிங் செய்த ஒரே அணி என்ற சாதனையை இங்கிலாந்து இருமுறை படைத்துள்ளது.
-
கோரிக்கை வைத்த உடனே அரசு பணி: முதல்வர் ஸ்டாலினுக்கு கூலி தொழிலாளி நன்றி
25 Jun 2025வேலூர் : கோரிக்கை வைத்த சில மணி நேரங்களிலேயே கூலி தொழிலாளிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு பணி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
-
வரும் 2026-ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கு இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு
25 Jun 2025புதுடெல்லி, வரும் 2026ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கு இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சுங்கச்சாவடியில் வீண் தாமதத்தை தடுக்க வேறு ஏதும் வழியில்லையா? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
25 Jun 2025மதுரை, ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் அரை மணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று ஆதங்கம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை, சுங்கச்சாவடியில் வீண் தாமதத்
-
ஆக்சியம் 4 குழு பயணம் தொடக்கம்: விண்வெளிக்கு செல்லும் 2-வது இந்தியராகும் சுபான்ஷூசுக்லா
25 Jun 2025புளோரிடா, இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபான்ஷூ சுக்லா உட்பட 4 பேரை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் வெற்றிகரமாக தொடங்கியது.
-
ரயில் கட்டண உயர்வை கைவிட எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
25 Jun 2025சென்னை : ரயில் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது: திருச்செந்தூர் திருக்கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
25 Jun 2025திருச்செந்தூர், 15 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ள திருச்செந்தூர் திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: ராமதாஸ் திட்டவட்டம்
25 Jun 2025திண்டிவனம், நான் நடத்திய கூட்டங்களில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், பொறுப்பாளர்கள்தான் தேர்தலில் நிற்கப்போகிறவர்கள்.
-
காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின் நிலை என்ன? - உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
25 Jun 2025சென்னை : டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப
-
சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
25 Jun 2025சென்னை, சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம் என்று அவரது பிறந்த நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
ஈரான் அணுசக்தி மையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன: அதிபர் ட்ரம்ப் மீண்டும் திட்டவட்டம்
25 Jun 2025வாஷிங்டன், ஈரானின் அணுசக்தி மையங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்ற செய்திகள் வெளியான நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதனை முழுமையாக மறுத்துள்ளார்.
-
வருங்கால வைப்பு நிதி: பணம் எடுக்கும் வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்வு
25 Jun 2025புதுடெல்லி, வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து முன்பணம் எடுக்கும் போது இனி ஆட்டோ கிளைமில் (தானியங்கி) 5 லட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அவசர நிலை பிரகடனத்தின்போது பறிக்கப்பட்ட பத்திரிகை சுதந்திரம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
25 Jun 2025புதுடெல்லி, அவசர நிலை பிரகடனத்தின்போது காங்கிரஸ் அரசு ஜனநாயகத்தை கைது செய்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.