எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 100 கோடி ரூபாய் செலவில் 63 கோவில்களில் பழமை மாறாமல் புனரமைக்கும் வகையிலான பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (11.07.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 கோவில்களை அதன் பழமை மாறாமல் புனரமைக்கும் வகையிலான பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்ட செயலாக்கம், 3,297 கோவில்களில் குடமுழுக்கு, தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புனரமைத்தல், புதிய தேர்கள் உருவாக்கம் மற்றும் தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா,குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், அன்னதானத் திட்டம் விரிவாக்கம், மலைத் கோவில்கள் மற்றும் முக்கிய கோவில்களில் மருத்துவ மையங்கள் அமைத்தல், புதிய கல்வி நிறுவனங்கள் தொடக்கம், ஒருகால பூஜை திட்டம் விரிவாக்கம், துறையின் செயல்பாடுகளை கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றத்திலிருந்து இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், மன்னர்களாலும், நமது முன்னோர்களாலும் கட்டப்பட்டு திராவிட கட்டடக் கலையின் பொக்கிஷங்களாக திகழும் தேவாரம் பாடல் பெற்ற மற்றும் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்கள், இதர கோவில்களின் கட்டடக் கலை மற்றும் கல்வெட்டுகளின் அடிப்படையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோவில்களாக 714 கோவில்கள் கண்டறியப்பட்டு, அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் தமிழ்நாடு முதல்வர் 2022-2023 ஆம் நிதியாண்டு முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டிற்கு ரூ.100 கோடி வீதம் ரூ.300 கோடியும், நடப்பாண்டிற்கு ரூ.125 கோடியும், என மொத்தம் ரூ.425 கோடியினை அரசு நிதியாக வழங்கியுள்ளார்.
அரசு நிதி, உபயதாரர் நிதி, கோவில் நிதி என மொத்தம் ரூ.571.55 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 கோவில்கள் பணிக்கு எடுத்து கொள்ளப்பட்டு, இதுவரை 60 கோவில்களுக்கு குடமுழுக்கு நிறைவுபெற்றுள்ளன. இவற்றில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், துக்காச்சி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாத்தமைக்காக 2024-ஆம் ஆண்டிற்கான யுனஸ்கோ விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை, மதுசூதனப்பெருமாள் கோவில், தூத்துக்குடி மாவட்டம், அப்பன்கோவில், வேங்கடத்தப்பன் கோவில், திருநெல்வேலி மாவட்டம், பிரம்மதேசம், கைலாசநாதசுவாமி கோவில், திருப்புடைமருதூர், நாறும்பூநாதசுவாமி கோவில், மானுார், அம்பலவாணசுவாமி கோவிலின் உபகோவிலான ராஜகோபாலசுவாமி கோவில், வடக்கு அரியநாயகிபுரம், கைலாசநாதசுவாமி கோவில், மேலச்செவல், ஆதித்தவர்னேஸ்வரர் கோவில், சேரன்மகாதேவி, அம்மநாதசுவாமி கோவில், சேரன்மகாதேவி, வைத்தியநாதசுவாமி கோவில், வள்ளியூர், சுப்பிரமணியசுவாமி கோவிலின் உபகோவிலான மீனாட்சி சொக்கநாதர் கோவில், கோவில்குளம், கிருஷ்ணசுவாமி வகையறா கோவிலின் உபக்கோவிலான தென்னழகர் கோவில், கடம்போடுவாழ்வு, கைலாசநாதசுவாமி மற்றும் வெங்கடாசலபதி கோவில்.
திருச்சி மாவட்டம், அல்லூர், பஞ்சநதீஸ்வரர் கோவில், அளுந்தூர், காசிவிஸ்வநாதசுவாமி கோவில், ஆலத்துடையான்பட்டி, சோமநாதசுவாமி கோவில், தஞ்சாவூர் மாவட்டம், பரிதியப்பர் கோவில், பாஸ்கரேஸ்வரர் கோவில், திருவாய்பாடி, பாலுகந்தநாதசுவாமி கோவில், உடையாளூர், கைலாசநாதர் மற்றும் லெட்சுமிநாராயணப் பெருமாள் கோவில், திருநரையூர், சித்தநாதசுவாமி கோவில், முழையூர், பரசுநாதசுவாமி கோவில், திருவாரூர் மாவட்டம், அரித்துவாரமங்கலம், பாதாளேஸ்வரர் கோவில், கோட்டூர், கொழுந்தீஸ்வரசுவாமி கோவில், கோவில்திருமாளம், மகாகாளநாத சுவாமி கோவில், திருக்கொள்ளம்புதூர், வில்வாரண்யேஸ்வரர் கோவில்.
நாகப்பட்டினம் மாவட்டம், அம்பல், பிரம்மபுரீஸ்வரசுவாமி கோவில், கோடியக்காடு, அமிர்தகடேஸ்வரசுவாமி கோவில், மயிலாடுதுறை மாவட்டம், சாயாவனம், சாயாவனேஸ்வரர் கோவில், பல்லாவனம், பல்லாவனேஸ்வரர் கோவில், மேலப்பெரும்பள்ளம், வலம்புரநாதசுவாமி கோவில், கீழையூர், கடைமுடீஸ்வரசுவாமி கோவில், பெருந்தோட்டம், ஐராதீஸ்வதீஸ்வரர் கோவில், தலைச்சங்காடு, சங்கரணேஸ்வரர் கோவில், மூவலூர், மார்கசயேஸ்வரர் சுவாமி கோவில், மகேந்திரப்பள்ளி, திருமேனியழகர் கோவில்.
கடலூர் மாவட்டம், திருமூலஸ்தாணம், கைலாசநாதர் கோவில், ராஜேந்திரசோழகன், தோளீஸ்வரர் கோவில், திருவட்டத்துறை, தீர்த்தபுரீஸ்வரர் கோவில், திருவேட்களம், பாசுபதீஸ்வரர் கோவில், திருச்சோபுரம், திருச்சோபுரநாதர் கோவில், திருவதிகை, வீரட்டானேசுவரர் கோவில், திருமாணிக்குழி, வாமனபுரீஸ்வரர் கோவில், திருவாமூர், பசுபதீஸ்வரர் கோவில், விழுப்புரம் மாவட்டம், வி.நெற்குணம், ஆளுடையநாயனார் கோவில், கப்பூர், செய்தருளீஸ்வரர் கோவில், டி.முடையனூர், அருணாசலேஸ்வரர் கோவில், கூகையூர், காரீயாம்புரீஸ்வரர் கோவில், கச்சிராப்பாளையம், வரதராஜப்பெருமாள் கோவில்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கூகையூர், சொர்ணபுரீஸ்வரர் கோவில், எலவனாசூர்கோட்டை, அர்த்த நாரீஸ்வரர் கோவில், வரஞ்சரம், பசுபதீஸ்வரர் கோவில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், ரிஷபேஷ்வரர் கோவில், காஞ்சி, கரைகண்டீஸ்வரர் கோவில், பிரம்மதேசம் புதூர், ருத்ரகோட்டீஸ்வரர் கோவில், தாமரைப்பாக்கம், அக்னீஸ்வரர் கோவில்.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், பச்சைவண்ணர் மற்றும் பவள வண்ணர் கோவில், காஞ்சிபுரம், அழகிய சிங்கபெருமாள் கோவில், திருவள்ளூர் மாவட்டம், செஞ்சி பானம்பாக்கம், ஜெனமேஜெயீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு மாவட்டம், மண்ணிவாக்கம், மண்ணீஸ்வரர் கோவில், வேலூர் மாவட்டம், அன்பூண்டி, திருத்தாளீஸ்வரர் கோவில், திருவலம், வில்வநாதீஸ்வரர் கோவில், ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர், திருக்குகேஸ்வரர் கோவில், பெருங்காஞ்சி, அகத்தீஸ்வரர் கோவில், காவேரிப்பாக்கம், அபயவரதராஜப் பெருமாள் கோவில்; ஆகிய 63 கோவில்களை தமிழ்நாடு முதல்வர் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அதன் பழமை மாறாமல் புனரமைக்கும் வகையிலான பணிகளை நேற்று தொடங்கி வைத்தார்.
இதன்மூலம் நமது கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் காலப் பெட்டகங்களாக திகழும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்களின் தொன்மை மற்றும் கட்டடக் கலை போன்றவற்றை வருங்கால தலைமுறையினரும் அறிந்து கொள்ள பேருதவியாக அமையும்.
இந்நிகழ்ச்சியில், நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக காஞ்சிபுரத்திலிருந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.எம்.பி. எழிலரசன், க. சுந்தர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு
20 Jul 2025மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
20 Jul 2025திருச்செந்தூர் : ஆடி கிருத்திகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
பார்லி., கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு ஆலோசனை
20 Jul 2025புதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நேற்று மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவ
-
பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிப்பு
20 Jul 2025புதுடில்லி : பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
நீலகிரி, தென்காசி, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Jul 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி,தென்காசி, தேனி கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம்: உதயநிதி ஸ்டாலின்
20 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
2 நாட்கள் பயணமாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்
20 Jul 2025சென்னை : பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 22, 23-ம் தேதிகளில் 2 நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முக்கிய முடிவை எடுத்த முகமது ஷமி
20 Jul 2025மும்பை : இந்திய அணியில் வாய்ப்பை இழந்த முகமது ஷமி மீண்டும் கம்பேக் கொடுக்க, உள்ளூர் போட்டிகளில் விளையாடி இழந்த பார்மை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளார்.
-
ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமன்: 2-வது போட்டியில் இங்கி., வெற்றி
20 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது.
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
20 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்
20 Jul 2025ரோம் : ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
-
சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்
20 Jul 2025மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
பிரக்ஞானந்தாவிடம் கார்ல்சன் தோல்வி
20 Jul 2025உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார்.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
20 Jul 2025சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி
20 Jul 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
-
விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
20 Jul 2025புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவ