எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, முதல்வரின் 51 மாத கால ஆட்சியில் இதுவரை மொத்தம் 1.85 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 44 ஆயிரத்து 777 கோடியே 83 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் வாழும் மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்வதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலன்களைக் காப்பதே திராவிட மாடல் அரசின் உன்னத நோக்கங்களில் ஒன்று என்று விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறார்.
மத்திய அரசு 2025-2026-ம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் விலையை தற்போது நிர்ணயித்து உள்ளது. மத்திய அரசு நிர்ணயிக்கும் நெல் கொள்முதல் விலையைவிட விவசாயிகளுக்கு கூடுதல் விலை வழங்கும் திட்டத்தை கலைஞர் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தினார்.
கலைஞர் வழியில் தமிழ்நாட்டின் நலம் காத்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு இந்த ஆண்டில் நிர்ணயம் செய்துள்ள சன்னரக நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,389 என்பதை ரூ.2,545 என உயர்த்தி உள்ளார். அதே போல, பொதுரக நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,369 என்பதை ரூ.2,500 என உயர்த்தியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி நிர்ணயித்துள்ள நெல் கொள்முதல் விலையில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் 1.9.2025 முதல் 31.8.2026 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும்.
இதற்கான முதல்வர் பிறப்பித்துள்ள உத்தரவு 29-ந்தேதி அன்று அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, இந்த ஆண்டில் விவசாயிகளிடமிருந்து மொத்தம் 42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். இதில் சன்ன ரக நெல் 30 லட்சம் மெட்ரிக் டன். பொதுரக நெல் 12 லட்சம் மெட்ரிக் டன்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பொற்கால ஆட்சியில் 2024-2025 நெல் கொள்முதல் பருவத்தில் 47.97 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுஉள்ளது.
முதல்வரின் 51 மாத கால ஆட்சியில் இதுவரை மொத்தம் 1.85 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 44 ஆயிரத்து 777 கோடியே 83 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் திராவிட மாடல் அரசு விவசாயிகளுக்கு வழங்கியுள்ள ஊக்கத் தொகை மட்டும் 2 ஆயிரத்து 31 கோடியே 29 லட்சம் ரூபாய் ஆகும்
முதல்வர் மு.க.ஸ்டாலின், அரும்பாடுபட்டு விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற நெல்லில் ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது என்ற உன்னத லட்சியத்துடன் கொள்முதல் செய்யப்படும் நெல்லை திறந்தவெளியில் வைத்திடக் கூடாது என்பதற்காக 827 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் 7 லட்சத்து 33 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகங்களைக் கட்டிஉள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி நெல் கொள்முதல் விலையை தற்போது உயர்த்தியுள்ளது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி இருவரும் நேற்று (சனிக்கிழமை) நேரில் சந்தித்து நெல் கொள்முதல் விலையை உயர்த்தி தந்து விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமைக்காக நன்றி தெரிவித்தார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 12 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-08-2025
31 Aug 2025 -
சீன அதிபரின் பேச்சு: அமெரிக்காவுக்கு எச்சரிக்கையா?
31 Aug 2025பெய்ஜிங் : டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற சீன அதிபரின் பேச்சு அமெரிக்காவுக்கு எச்சரிக்கையா என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெர்மனியில் உற்சாக வரவேற்பு
31 Aug 2025சென்னை : ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
மதுரையில் 4-ம் தேதி நடக்க இருந்த ஓ.பி.எஸ். மாநாடு ஒத்திவைப்பு
31 Aug 2025சென்னை : மதுரையில் வருகிற 4-ம் தேதி நடக்க இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
விஜய் சுற்றுப்பயணம்: மாவட்ட செயலாளர்களுக்கு த.வெ.க. உத்தரவு
31 Aug 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணம் உறுதியாகியுள்ள நிலையில் மாவட்ட செயலாளர்களுக்கு கட்சியின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
2 நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகிறார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
31 Aug 2025சென்னை : 2 நாள் பயணமாக நாளை ஜனாதிபதி திரெளபதி முர்மு தமிழகம் வருகிறார்.
-
இயற்கை பேரிடர்கள் நாட்டை சோதிக்கின்றன:மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேதனை
31 Aug 2025புதுடெல்லி : பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார்.
-
மதுரை அரசு செவிலியர் கல்லூரியில் 50 பி.எஸ்சி. நர்சிங் கூடுதல் இடங்கள்
31 Aug 2025மதுரை : மதுரை அரசு செவிலியர் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
-
பெருங்குடி குப்பை கிடங்கில் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு 94.29 ஏக்கர் நிலம் மீட்பு : தமிழக அரசு தகவல்
31 Aug 2025சென்னை : பெருங்குடி குப்பை கிடங்கில் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு 94.29 ஏக்கம் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டின் பொறுப்பு டி.ஜி.பி.யாக ஜி.வெங்கட்ராமன் நியமனம்
31 Aug 2025சென்னை : தமிழகத்தின் காவல் துறை தலைமை இயக்குநராக (பொறுப்பு ) ஜி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ட்ரம்ப்பின் இந்திய பயணம் ரத்து?
31 Aug 2025வாஷிங்டன் : குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவிற்கு டிரம்ப் வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிரம்ப்பின் இந
-
தெருநாய் வழக்கு என்னை பிரபலமாக்கியது: சுப்ரீம் கோர்ட் நீதிபதி விக்ரம்நாத் பேச்சு
31 Aug 2025டெல்லி : தெருநாய் வழக்கு என்னை பிரபலமாக்கியதாத சுப்ரீம் கோர்ட் நீதிபதி விக்ரம்நாத் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க வரி விதிப்பால் கோவையில் 35 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பு
31 Aug 2025கோவை : அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி தற்போது அமலுக்கு வந்துள்ளது.
-
இந்தியாவில் சிறப்பாக செயல்படும் முதல்வர்: தொடர்ந்து முதலிடத்தில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்
31 Aug 2025புதுடெல்லி : இந்தியாவில் சிறப்பாகச் செயலாற்றும் முதல்வர் யார் என்று இந்தியா டுடே நாளிதழ் இந்த மாதம் [ஆகஸ்ட்] நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உ
-
எம்.எல்.ஏ. ஓய்வூதியத்துக்கு விண்ணப்பம் செய்த தன்கர்
31 Aug 2025ஜெய்ப்பூர் : ராஜினாமா ஏற்படுத்திய பரபரப்புக்கு இடையே எம்.எல்.ஏ. ஓய்வூதியத்துக்கு ஜெகதீப் தன்கர் விண்ணப்பம் செய்துள்ளார்.
-
பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்கள் அனுமதித்தால் ஆதரவு கேட்க தயார்: சுதர்சன் ரெட்டி
31 Aug 2025ராஞ்சி : பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்கள் அனுமதித்தால் அவர்களிடம் ஆதரவு கேட்க தயார் என்று சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது
31 Aug 2025புதுடெல்லி : பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
-
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு விவகாரம்: ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். கடிதம்
31 Aug 2025சென்னை : அமெரிக்காவின் தற்போதைய கூடுதல் வரி விதிப்பால் நம் நாட்டில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளர்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாத வகையில், மற்ற நாடுகளு
-
பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை
31 Aug 2025சென்னை : பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் தேர்தல் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்க
-
டெல்லியில் பறவைக்காய்ச்சல் பரவும் அச்சத்தில் பொதுமக்கள்
31 Aug 2025புதுடெல்லி : 2 நாட்களுக்கு முன்பு 2 வண்ண நாரைகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை டெல்
-
இந்த மாதம் 2-ம் வாரத்தில் மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி?
31 Aug 2025புதுடெல்லி : இந்த மாதம் (செப்டம்பர்) 2-ம் வாரத்தில் பிரதமர் மோடி இம்பால் மற்றும் சூரசந்த்பூர் மாவட்டங்களுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கட்டாய கல்வி உரிமை சட்ட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு மீது இன்று விசாரணை
31 Aug 2025புதுடெல்லி : கட்டாய கல்வி உரிமை சட்ட விவகாரம் தொடர்பான அப்பீல் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
-
இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை - ஜி ஜின்பிங் உடனான சந்திப்பிற்கு பிறகு பிரதமர் மோடி அறிவிப்பு
31 Aug 2025பெய்ஜிங் : சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார்.
-
டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் : பிரதமர் மோடியிடம் சீன அதிபர் வலியுறுத்தல்
31 Aug 2025பெய்ஜிங் : டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் சீன அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நான்கு நாட்களிலேயே பாகிஸ்தான் மண்டியிட்டது: இந்திய விமானப்படை
31 Aug 2025புதுடெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக இந்தியா மே மாதம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் கு