Idhayam Matrimony

55.3 சதவீத மதிப்பெண்களுடன் தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் புதிய உச்சம் தொட்டது

திங்கட்கிழமை, 1 டிசம்பர் 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, 55.3 சதவீத மதிப்பெண்களுடன் எரிசக்தி திறனில் இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக மாநில எரிசக்தி திறன் குறியீடு அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இந்தியாவில் தமிழ்நாடு நம்பர் 1 மாநிலம் எனும் இலக்கை அடைந்திடும் நோக்கில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். அதன் பயனாக தமிழ்நாடு ஒவ்வொரு துறையிலும் அபரிமிதமான வளர்ச்சி கண்டு, இந்தியாவில் முன்னணி மாநிலமாக சிறந்து விளங்குகிறது. இதனை மத்திய அரசினுடைய ஆய்வறிக்கைகள் அவ்வப்பொழுது வெளியிட்டு வருகின்றன. செய்தி ஊடகங்களும், செய்தி ஏடுகளும் கூட இந்த உண்மையை வெளிப்படுத்தி தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டின் தன்னிகரில்லா முதல்வர் .மு.க.ஸ்டாலினையும் பாராட்டி வருகின்றன.

அந்த வகையில், தொழில்துறை எரிசக்தித் திறனில் தமிழ்நாடு இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் எனத் திகழ்வதாக மாநில எரிசக்தி திறன் குறியீடு அமைப்பு தெரிவித்துள்ளது. தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழ்நாடு தேசிய அளவில் உச்சம் பெற்று மாநில ஆற்றல் திறன் குறியீடு  2024 இன் குழு 1 இல் 55.3 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது

ஆந்திரப் பிரதேசம் அளவீட்டுக் குறியீடுகளின்படி, நாட்டின் மிக உயர்ந்த முன்னேற்றத்தைப் பதிவு செய்து, 27.5சதவீத முன்னேற்றத்தைப் பதிவு செய்து, இரண்டாம் குழுவில் முன்னிலை வகிக்கிறது. 23.1சதவீதம் வளர்ச்சி பெற்று ஒடிசா , 28.8சதவீதம் வளர்ச்சி பெற்று சத்தீஸ்கர், 16.5சதவீதம் வளர்ச்சி பெற்று மத்தியப் பிரதேசம் 10.9 சதவீதம் வளர்ச்சி பெற்று திரிபுரா உள்ளிட்ட பல மாநிலங்களும் வலுவான முன்னேற்றத்தைப் படைத்துள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனித்தன்மையுடன் கூடிய முயற்சிகளின் பயனாக குழு 1 இல் உள்ள தமிழ்நாடு, கட்டுமானத் துறையில் ஆற்றல் திறன் முயற்சிகளை ஊக்குவிப்பதிலும், செயல்படுத்துவதிலும் முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளது. மேலும், அதிக எண்ணிக்கையிலான சான்றளிக்கப்பட்ட பசுமை கட்டடங்களைக் கொண்ட முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. தமிழ்நாட்டின் திட்டம் வாயிலாக 2023-24-ம் ஆண்டில் விழிப்புணர்வு, பயிற்சி, எரிசக்தி தணிக்கை மானியங்கள் ஆகியவற்றுடன் செயல்படுத்தல் முயற்சிகளுக்காக குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான ஆற்றல் திறன்களுக்காக மொத்தம் 2.6 கோடி ரூபாய் முதலீடு செய்து ஊக்கப்படுத்தியுள்ளது.

எரிசக்தி பாதுகாப்பு முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக, 25 மாநிலங்கள் எரிசக்தி பாதுகாப்பு விருதுகளைப் பெற்றுள்ளன. விருதுகளின் எண்ணிக்கையில் மராட்டியம், தமிழ்நாடு, ஒடிசா ஆகியவை முன்னணியில் உள்ளன. அடுத்த நிலையில் குஜராத் இடம்பெற்றுள்ளது. தொழில்துறை எரிசக்தி செயல்திறனில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ள மாநிலங்கள் வரிசைப்படி:- 1 தமிழ்நாடு 55.3 சதவீதம், 2 சத்தீஸ்கர் 29 சதவீதம், 3 ஆந்திரப் பிரதேசம் 26 சதவீதம், 4 ஒடிசா 23 சதவீதம், 5 மத்தியப் பிரதேசம் 17 சதவீதம், 6 திரிபுரா 11 சதவீதம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து