முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.ஐ.ஆர். பணி எதிரொலி: தமிழகத்தில் 11 ஆண்டுகள் பின்நோக்கி சென்ற வாக்காளர்களின் எண்ணிக்கை

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2025      தமிழகம்
election 2025-01-06

சென்னை, எஸ்.ஐ.ஆர். பணியால் தமிழகத்தில் 11 ஆண்டுகள் மீண்டும் வாக்காளர்கள் எண்ணிக்கை பின்நோக்கி சென்றுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் (நவம்பர்) 4-ம் தேதி முதல் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 19) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் மாத நிலவரப்படி, 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், இந்த பட்டியலில் 5 கோடியே 45 லட்சத்து 76 ஆயிரத்து 756 வாக்காளர்கள் தான் இடம்பெற்றுள்ளனர்.

இதை வைத்து பார்க்கும்போது, 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதாவது, 15.18 சதவீத வாக்காளர்கள் குறைந்து போய் உள்ளனர். இதில், இறந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 94 ஆயிரத்து 672. இரட்டை பதிவுகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 98 ஆயிரத்து 278. இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 66 லட்சத்து 44 ஆயிரத்து 881. வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை மாவட்ட வாரியாக பார்த்தால் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 14 லட்சத்து 25 ஆயிரத்து 18 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 368 பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்களும், 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது 6 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து 512 வாக்காளர்களும் இருந்துள்ளனர். 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 வாக்காளர்களும், 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது 5 கோடியே 82 லட்சத்து 62 ஆயிரத்து 973 வாக்காளர்களும் இருந்துள்ளனர்.

2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, 5 கோடியே 37 லட்சத்து 52 ஆயிரத்து 682 வாக்காளர்களும், 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது 4 கோடியே 71 லட்சத்து 16 ஆயிரத்து 687 வாக்காளர்களும் இருந்துள்ளனர். இந்த புள்ளி விவரங்களை தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது, 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது இருந்த வாக்காளர்களே தற்போது உள்ளனர். அதாவது, வாக்காளர்களின் எண்ணிக்கை 11 ஆண்டுகள் பின்நோக்கி சென்றுவிட்டது.

தற்போதைய வரைவு வாக்காளர்கள் கணக்குப்படி, இறந்துபோன 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேரும், இரட்டை பதிவுகளில் சிக்கி நீக்கப்பட்ட 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேரும் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியாது. அதாவது, 30 லட்சத்து 92 ஆயிரத்து 950 பேருக்கு இனி வாக்காளர் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில், முகவரி மாறி இடம்பெயர்ந்த 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், முறையான ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பித்தால், வாக்காளர் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு அதிகம் உள்ளது. இதிலும், சுமார் 50 லட்சம் பேர் வரை வாக்காளர் பட்டியலில் மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறது.

அப்படி பார்த்தால், 47 லட்சத்து 38 ஆயிரம் வாக்காளர்கள் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால், சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு என்ன நஷ்டம் என்று பார்த்தால், இனி கள்ள ஓட்டு போடுவது குறையும். அதே நேரத்தில், தேர்தலின்போது பதிவாகும் வாக்கு சதவீதம் அதிகரிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து