எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, எஸ்.ஐ.ஆர். பணியால் தமிழகத்தில் 11 ஆண்டுகள் மீண்டும் வாக்காளர்கள் எண்ணிக்கை பின்நோக்கி சென்றுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் (நவம்பர்) 4-ம் தேதி முதல் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 19) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் மாத நிலவரப்படி, 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், இந்த பட்டியலில் 5 கோடியே 45 லட்சத்து 76 ஆயிரத்து 756 வாக்காளர்கள் தான் இடம்பெற்றுள்ளனர்.
இதை வைத்து பார்க்கும்போது, 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதாவது, 15.18 சதவீத வாக்காளர்கள் குறைந்து போய் உள்ளனர். இதில், இறந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 94 ஆயிரத்து 672. இரட்டை பதிவுகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 98 ஆயிரத்து 278. இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 66 லட்சத்து 44 ஆயிரத்து 881. வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை மாவட்ட வாரியாக பார்த்தால் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 14 லட்சத்து 25 ஆயிரத்து 18 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 368 பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்களும், 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது 6 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து 512 வாக்காளர்களும் இருந்துள்ளனர். 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 வாக்காளர்களும், 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது 5 கோடியே 82 லட்சத்து 62 ஆயிரத்து 973 வாக்காளர்களும் இருந்துள்ளனர்.
2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, 5 கோடியே 37 லட்சத்து 52 ஆயிரத்து 682 வாக்காளர்களும், 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது 4 கோடியே 71 லட்சத்து 16 ஆயிரத்து 687 வாக்காளர்களும் இருந்துள்ளனர். இந்த புள்ளி விவரங்களை தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது, 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது இருந்த வாக்காளர்களே தற்போது உள்ளனர். அதாவது, வாக்காளர்களின் எண்ணிக்கை 11 ஆண்டுகள் பின்நோக்கி சென்றுவிட்டது.
தற்போதைய வரைவு வாக்காளர்கள் கணக்குப்படி, இறந்துபோன 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேரும், இரட்டை பதிவுகளில் சிக்கி நீக்கப்பட்ட 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேரும் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியாது. அதாவது, 30 லட்சத்து 92 ஆயிரத்து 950 பேருக்கு இனி வாக்காளர் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில், முகவரி மாறி இடம்பெயர்ந்த 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், முறையான ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பித்தால், வாக்காளர் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு அதிகம் உள்ளது. இதிலும், சுமார் 50 லட்சம் பேர் வரை வாக்காளர் பட்டியலில் மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறது.
அப்படி பார்த்தால், 47 லட்சத்து 38 ஆயிரம் வாக்காளர்கள் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால், சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு என்ன நஷ்டம் என்று பார்த்தால், இனி கள்ள ஓட்டு போடுவது குறையும். அதே நேரத்தில், தேர்தலின்போது பதிவாகும் வாக்கு சதவீதம் அதிகரிக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர்: த.வெ.க. நிர்வாகி அருண் ராஜ் பேட்டி
21 Dec 2025கோவை, விஜய் இப்போது நடிகர் அல்ல என்றும் நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும் த.வெ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-12-2025.
21 Dec 2025 -
தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 Dec 2025நெல்லை, தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
செவிலியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
21 Dec 2025சென்னை, செவிலியர்களின் சில கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
உக்ரைன் போர் முடிவுக்கு வருமா...? அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை
21 Dec 2025வாஷிங்டன், உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 396வது நாளாக போர் நீடித்த நிலையில், போரை நிறுத்த அமெரிக்கா - ரஷ்யா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்
21 Dec 2025புதுச்சேரி, தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போதுவரை தொடர்கிறோம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
பூமியின் சுழற்சியிலிருந்து மின்சாரம் தயாரித்த அமெரிக்க விஞ்ஞானிகள்..!
21 Dec 2025நியூயார்க், பூமியின் சுழற்சி, காந்தப்புலத்தைப் பயன்படுத்தி எரிபொருள் இன்றி மின்சாரம் தயாரிக்கும் சிறிய கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
-
தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி
21 Dec 2025கேப் டவுன், தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியான நிலையில், 10 பேர் படுகாயமடைந்தனர்.
-
அரியானாவில் நிலநடுக்கம்
21 Dec 2025சண்டிகர், அரியானாவில் உள்ள ரோஹ்தக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
கிழக்கு சீன கடல் பகுதியில் உலகின் மிகப்பெரிய தங்கப்படிமம் கண்டுபிடிப்பு
21 Dec 2025பெய்ஜிங், கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கடியிலான தங்க படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது.
-
நெல்லைக்கு 3 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
21 Dec 2025நெல்லை, ரூ.16 கோடி செலவில், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய மகளிர் தங்கும் விடுதி உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு 3 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளி
-
தி.மு.க. கூட்டணியில் தொடர காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்
21 Dec 2025மதுரை, பதவி ஆசை இல்லாததே தி.மு.க. கூட்டணியில் தொடரக் காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் விளக்கமளித்தாா்.
-
நெல்லை மாவட்டத்தில் 15 புதிய பேருந்துகளின் சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டத்திற்கு 15 புதிய பேருந்து போக்குவரத்து சேவையை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகத்திற்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
21 Dec 2025நெல்லை, தமிழக நாகரிகத்தின் தொன்மை குறித்து கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
வரலாற்றை படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
21 Dec 2025நெல்லை, வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
த.வெ.க. சார்பில் இன்று விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி
21 Dec 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் இன்று (திங்கள்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறத
-
மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு காந்தியின் பெயர் சூட்டினார் மம்தா
21 Dec 2025கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் அம்மாநில முதல்வர் மம்தா பானார்ஜி சூட்டியுள்ளார்.
-
ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் விரைவில் அறிவிப்பார்: செந்தில்பாலாஜி தகவல்
21 Dec 2025கோவை, பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: போராட்டத்துக்கு இம்ரான்கான் அழைப்பு
21 Dec 2025லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
-
நீலகிரி மாவட்டத்தில் இன்று உறைபனி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னனை வானிலை ஆய்வு மையம், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று உறைபனி ஏற
-
இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பு: நாடு முழுவதும் டிச. 26 முதல் ரயில் கட்டணம் உயருகிறது
21 Dec 2025புதுடெல்லி, நாடு முழுவதும் வரும் டிசம்பர் 26ம் தேதி முதல் ரயில் கட்டணத்தை மாற்றி அமைத்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை: அரசியல் தலைவர் வீட்டுக்கு தீவைப்பு
21 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில் அவரது 7 வயது மகள் உயிரிழந்து உள்ளார்.
-
உலகின் முதல் பெரும் பணக்காரர்: 700 பி. டாலர் மதிப்புடன் எலான் மஸ்க் முதலிடம்
21 Dec 2025நியூயார்க், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 700 பில்லியன் டாலரைத் தாண்டியது.



