எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி, ஜூலை 8 - பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. சுமார் ஒரு மாதம் இந்த கூட்டத் தொடர் நடைபெறும். இன்று ரயில்வே பட்ஜெட்டும், 10ம் தேதி மத்திய பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. ரயில்வே பட்ஜெட்டுக்கான தயாரிப்பு பணிகள் அனைத்தையும் ரயில்வே மந்திரி முடித்து விட்டார். பயணிகள் ரயில் கட்டணம், சரக்கு ரயில் கட்டணம், புறநகர் ரயில் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. எனவே இன்றைய ரயில்வே பட்ஜெட்டில் கட்டணங்களை உயர்த்த வாய்ப்பு இல்லை.
ரயில்வே பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் புதிய திட்டங்களை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக பயணிகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து அறிவிப்புகள் வெளியாகும். பெரும்பாலான ரயில் விபத்துக்களுக்கு ரயில் தண்டவாள விரிசல் காரணமாக கூறப்படுகிறது. எனவே ரயில் தண்டவாளங்கள் விரிசலை தடுக்க நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தும் திட்டம் இன்று வெளியாகலாம்.
பயணிகள் பாதுகாப்புக்கான ரயில்வே குழு பல்வேறு வகை ஆய்வுகளை நடத்தி ஒரு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில் புதிய தண்டவாளங்கள் அமைக்கவும், ஆள் இல்லாத ரயில்வே கேட்டுகளை அகற்றுவது உள்பட பல்வேறு பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளன. மொத்தத்தில் ரூ. 50 ஆயிரம் கோடிக்கு பயணிகள் பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்த அந்த நிபுணர் குழு ஆலோசனை கூறியுள்ளது. இன்று தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட்டில் இது பற்றிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.
சில வழித்தடங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அத்தகைய வழித்தடங்களை கண்டுபிடித்து அவற்றில் விரிசல்களை உடனுக்குடன் கண்டுபிடிக்கும் எக்ஸ்ரே கருவிகள் பொருத்துவது பற்றிய புதிய திட்டமும் இன்று அறிவிக்கப்படுகிறது. மழை, வெயில் காலங்களில் ரயில் தண்டவாளங்களில் ஏற்படும் மாற்றத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் விசேஷ கருவிகள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் திட்டமும் வரவுள்ளது. இவை தவிர பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகள் அளிக்கும் அறிவிப்புகளும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ரயில்களை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. முதல் கட்டமாக முக்கிய ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்படவுள்ளது. விமான நிலையங்களுக்கு இணையாக ரயில் நிலையங்களில் புதுமைகள் கொண்டு வர ஆய்வு நடந்து வருகிறது. பிளாட்பாரங்களில் எல்லா நவீன வசதிகளும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 163 ரயில் நிலையங்களை நவீனமயமாக்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.
ரயில்வே வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையிலான அறிவிப்புகளும் இன்று வரவுள்ளது. பெரும்பாலான ரயில் நிலையங்கள் அருகில் உள்ள இடங்கள் காலியாக சும்மா கிடக்கின்றன. அந்த காலி இடங்களை தனியார்களுக்கு வாடகைக்கு விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது போல பிளாட்பார காலி இடங்களில் கூடுதல் கடைகளை கொண்டு வரும் திட்டமும் உள்ளது. இவை தவிர ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளிலும் தனியார் முதலீட்டை அதிகரிக்க செய்யும் திட்டங்களும் இன்று அறிவிக்கப்படவுள்ளன.
ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல்கள் தெரிவிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. டிக்கெட் பயண நிலை பற்றி எஸ்.எம்.எஸ். மூலம் பயணிகளுக்கு தகவல் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. சரக்கு கட்டண வருமானம் உயர்த்தும் திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ளது. சரக்குகளை எடுத்து செல்ல இனி பெரிய ரயில் பெட்டிகள் பயன்படுத்தும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. சரக்கு போக்குவரத்தில் மேலும் 17 வகை பொருட்கள் கொண்டு செல்லும் அனுமதியும் இந்த பட்ஜெட்டில் வரவுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
வைஷாலிக்கு முதல்வர் வாழ்த்து
16 Sep 2025ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.
-
காசா மீதான ராணுவ விரிவாக்கம்: பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் உத்தரவு
16 Sep 2025காசா : காசா மீதான ராணுவ விரிவாக்கம் தொடர்பாக பாலஸ்தீனர்கள் வெளியேற இஸ்ரேல் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
-
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்: தமிழக பா.ஜ.க. முக்கிய ஆலோசனை
16 Sep 2025சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா, ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா : ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது : சென்னை பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். ஆவேசம்
16 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.