எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஆக.- 18 - சாயப்பட்டறை தீர்வு மூலம் கொங்கு மண்டலத்தை காத்த கருணை தெய்வம் முதல்வர் ஜெயலலிதா என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம் சூட்டினார். சட்டப்பேரவையில் நேற்று தொழில்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு தொழில்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது: ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னால் வாராது போல் வந்த மாமணி, காய்ந்து சிவந்த கதிரவனின் நிறத்தை ஈந்து சிவந்த கரத்தாலே வென்ற எங்கள் வாய்மை மிக்க தூய்மை தலைவி,உலக தமிழ்மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வணங்குகிறேன். புண்ணிய பூமியில் பிறந்த பொன்னும்,வைரமும், தண்ணீரிலே தோன்றிய முத்தும் பவளமும், தடாகத்தில் மலர்கின்ற அல்லியும் தாமரையும், சோலையில் கிடைக்கின்ற மாவும் பலாவும், காடுஅள்ளித்தரும் அகிலும் சந்தனமும் , நல்லமான் தருகின்ற கஸ்தூரியும், தமிழின் இனிமையும், வளமையும் பெருமையும் போல் கோடான கோடிமக்களின் மனக்கோவிலில் கொலுவிருக்கும் வாடாத பாரிஜாதமே, மாணிக்க மணி தீபமே, தேடாது கிடைத்த செல்வமே, எங்கள் இதயங்களில் வாழும் குல தெய்வமே, சிலம்புண்டு, மணிமேகலையுண்டு,வளையாபதி- சீவகசிந்தாமணி, பாரதி -பாரதிதாசன் எனும் குங்குமத் திலகமுண்டு,இவையனைத்தும் தமிழ் அன்னைக்கு காப்பாகும். தஞ்சைத் தரணியில் உலகத்மிழ்மாநாடு நடத்தி முத்தமிழுக்குப்பின் ,அறிவியல் தமிழை இந்த உலகுக்கு அறிவித்த தமிழாய்ந்த தமிழ்மகளே, ஏழரைக்கோடி தமிழ் சமுதாயத்தின் ஆராதனைக்குரியவரே, அடிமட்டத்தொண்டனையும், எம்.பி. எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர்களாகவும் ஆளாக்கி அழகுபார்க்கும் எங்களின் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க. வின் கடைக்கோடி உண்மைத் தொண்டனாயிருந்த என்னை மாணவரணி பொறுப்பாளராக நியமித்து பல்வேறு கட்சி பொறுப்புக்களில் அமரவைத்து அழகு பார்த்து பின்னர் இரண்டுமுறை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக்கி பின்னர் அமைச்சராக்கிய இந்தியாவின் இரும்புப்பெண்மணி, தங்கத்தாரகை, எங்கள் குடும்ப விளக்கு,தமிழகத்தின் குலவிளக்காகிய தங்களுக்கு என் கோடானகோடி வணக்கங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
என்னுடைய வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவது மட்டுமல்லாமல்,என் குடும்பத்தினர், என் வழிவரும் சந்ததியர்கள் அத்தனை பேரும் நன்றியோடு இருந்தாலும் நன்றிக் கடன் தீராது. ஏழைகளின் நில அபகரிப்பில் கொள்ளையடித்து அகப்பட்டுக்கொண்டவர்கள் நோட்டுக்கு ஓட்டு என்ற திருமங்கலம் பாணி திருடர்களின் கொட்டத்தை அடக்கிய எங்கள் பட்டத்து அரசியே, தமிழ் ஈழத்தை இழவாக்கிவிட்டு கோவையில் கொண்டாட்டம் போட்ட குள்ளநரி கூட்டங்கள்,கொள்ளையடித்த பணத்தில் கூட்டம் சேர்த்து கலையிலும், இலக்கியத்திலும் நச்சுக்கலந்து சந்தை பொருளாக்கி செந்தமிழை விற்றுப்பிழைக்கும் தீயசக்திகளின் ஆறாவது முறையாத தமிழக முதல்வர் என்று கொக்கரித்த துரோகிகளை , 14 வது சட்டமன்ற தேர்தலில் வீழ்த்திக்காட்டி மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்று அ.தி.மு.க. வை கோட்டையில் அமரவைத்த எங்கள் குலவிளக்கே, எதிரிகள் ஏசிடும் சுடுமொழிகளை வீசிடும் குளிர் தென்றலாய் ஏற்று புன்னகை க்கும் புதுநிலவே, மைனாரிட்டி தி.மு.க.அரசின் கொடுங்கோல் குடும்ப ஆட்சியிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மக்களுக்காக போராடி வெற்றி கண்ட எங்கள் வணக்கத்துகுரிய அன்னையே.
அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பவன் அரசியல் வாதி, ஆனால் அடுத்த தலைமுறைப்பற்றி சிந்திப்பவன் ஜனநாயகவாதி என்ற வரிகளுக்கேற்ப மக்களாட்சித் தத்துவத்தை புரியவைத்த புனிதவதியே, பகைமை அன்பு வெல்லும், துரோகத்தை தியாகம் வெல்லும், அச்சத்தை துணிவு வெல்லும், அநியாயத்தை நியாயம் வெல்லும், அதர்மத்தை தர்மம் வெல்லும், அட்டூழியத்தை அறம் வெல்லும் இவற்றின்ஒட்டுமொத்த உருவாமாக திகழும் எங்கள் அன்னையே!
கருணாநிதியின் சவால்களையும் , பொய் வழக்குகளையும் சந்தித்து,நீதிமன்றங்களின் நெடியபடிக்கட்டுகளில் ஏறியிறங்கி வழக்குகளை சந்தித்தபோது அன்றைய காங்கிரஸ் கட்சியை சார்ந்த எதிர்கட்சி தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் ஜெயலலிதா மீதான பொய்வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று பல்வேறு நிகழ்வுகளை மேற்கோள்காட்டி வழக்குகளை திரும்பப்பெற கோரியதில், அதற்கு பதிலுரையாக முதல்வர் ஜெயலலிதா துணிச்சலோடு,அத்தனை வழக்குகளையும் நீதிமன்றத்தில் சந்தித்து நிரபராதி என நிரூப்பிப்பேன் என்று சூளுரைத்து, நான் வண்ணத்துப் பூச்சி அல்ல. நான் ஒரு இரும்புப்பெண்மணி என்றுரைத்த இந்தியாவின் வீரப்பெண் நேதாஜியே.
தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொன்னார் ஏசுபிரான், ஆனால் தட்டாமலேயே அள்ளித்தரும் அட்சயபாத்திரம் எங்கள் முதல்வர், பொறுப்பேற்ற இரண்டே மாதங்களில் கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலுள்ள சாயப்பட்டறை உரிமையாளர்களின் குறையறிந்து, சாயப்பட்டறைகளில் புதிய தொழில்நுட்பத்தை கடைப்பிடிக்க ரூபாய் 200 கோடியை வட்டியில்லா கடனாகவும் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயிகளின் குடும்ப நலனுக்காக ரூபாய் 18.38 கோடியை அள்ளி வழங்கி கொங்கு மண்டலத்தைக் காப்பாற்றிய கருணை தெய்வமே, வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாகத் திகழும் உங்கள் வரலாறு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.இனி என்றைக்கும் தமிழக நிரந்தர முதல்வர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 14-ல் கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
23 Sep 2025சென்னை, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 14ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தினேஷ் கார்த்திக் நியமனம்
23 Sep 2025ஹாங் காங் சிக்ஸ் தொடரில் இந்திய அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரிஷப் விளையாடுவது சந்தேகம்
23 Sep 2025மும்பை : இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த், சொந்த மண்ணில் நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டா
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.