எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் கணினி பயன்பாடு தொடர்பான போட்டிகள் செவ்வாய்கிழமை நடைபெற்றது. ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் பி.இ கணினிஅறிவியல் துறை சார்பில் கணினி பயன்பாடு வளர்ச்சி தொடர்பான போட்டிகள் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் கல்லூரி செயலாளர் ஏ.சி.ரவி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வி.திருநாவுக்கரசு, தனிஅலுவலர் டி.பிரபு, துணை முதல்வர் ஆர்.வெங்கடரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணினித்துறை தலைவர் டி.கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். மேலும் இதில் குடியாத்தம் கே.எம்.ஜி கலைக்கல்லூரி கணினித்துறை பேராசிரியர் எல்.சங்கர்கணேஷ் கலந்துகொண்டு மாணவர்களிடையே ஊக்கப்படுத்தி பேசியது, இன்றைய கணினி மையமான உலகில் கணினி சார்ந்த அறிவு மற்றும் பயன்பாட்டின் தேவை பன்மடங்கு வளர்ந்துள்ளது. கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு கணினி பயன்பாட்டிற்கு தேவை 80 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அதன் பயன்பாடு மற்றும் நுண்ணறிவு என்ற தலைப்பில் நடைபெறும் இந்த போட்டிகள் மாணவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாகவும் இதுபோன்ற போட்டிகளை மற்ற கல்லூரிகளும் நடத்த வேண்டும். மேலும் வரும் ஆண்டில் கணினித்துறை சார்ந்த 10லட்சம் பொறியாளர்கள் நாடு முழுவதும் தேவைப்படுவர் என்று பேசினார். இதில் திறம் வளர்ப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் துறைப்பேராசிரியர்கள் மற்றும் துறை மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் துறை பேராசிரியர் என்.கார்த்திக் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026


