எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் இந்து சமய அறநிலைத் துறை சார்பாக மாவட்டத்திலுள்ள சிறு சிறு திருக்கோயில்களுக்கு பூஜை பொருட்களை சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் 420 திருக்கோயில் குருக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி தலைமையில் வழங்கி சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழா பேருரையாற்றினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா 2015-2016-ம் ஆண்டு சட்டமன்ற பேரவையில் விதி எண்.110-ன்கீழ் தமிழ்நாட்டில் கிராம புறங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வர்ழும் பகுதியில் அமைந்துள்ள பத்தாயிரம் சிறிய திருக்கோயில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்கள்.இத்திட்டத்தின் கீழ 2015-2016-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 400 திருக்கோயில்களுக்கு வழங்கப்பட்டது. இவ்நிதியாண்டில் தற்பொழுது 420 திருக்கோயில்களுக்கு பூஜை உபகரணங்களான தாம்பளம், கைமணி, தூபக்கால், கார்த்திகை விளக்கு, தொங்கு விளக்கு வழங்கப்பட்டுள்ளது.
பூஜை பொருட்கள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா இந்து சமய அறநிலைத்துறையின் மூலமாக கோயில்களில் அன்னதானம் திட்டத்தை கொண்டுவந்தார்கள். இத்திட்டத்தின் மூலமாக விழப்புரம் மாவட்டத்தில் 22 கோயில்களில் அன்னதானம் திட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது 2017-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி வட்டம், சித்தலூர் கிராமம் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் புதியதாக சேர்க்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 1250 பக்தர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 6 திருக்கோயில்களுக்கு 13-வது நிதி உதவியின் மூலம் ரூ.2.91 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும், 2012 முதல் 2017 வரை விழுப்புரம் மாவட்ட கிராம புறங்களில் உள்ள 135 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட ரூ.82 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 2012 முதல் 2017 வரை கிராமப்புற திருக்கோயில் திருப்பணிக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது 2016-2017-ம் நிதியாண்டில் இத்திருப்பணி நிதி உயர்த்தப்பட்டு தலா ரூ.1 இலட்சம் வழங்கப்பட உள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 29 திருக்கோயில்களுக்கு தலா ரூ.1 இலட்சம் வீதம் ரூ.29 இலட்சம் வழங்கப்பட உள்ளது.2011 முதல் 2017 வரை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் உள்ள திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட 158 திருக்கோயில்களுக்கு ரூ.89 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள 18 திருத்தேர்களுக்கு தலா ரூ.10 இலட்சம் வீதம் அரசு நிதியுதவி வழங்கப்பட்டு உபயதாரர்கள் பங்களிப்புடன் திருத்தேர் பழுது மற்றும் புதுப்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஒரு கால பூஜை திட்டத்தை கொண்டு வந்தார்கள். இதனால் தினசரி ஒரு கால பூஜை சிறப்பாக இன்று வரை நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கால பூஜை நிதியுதவித் திட்டத்தின் கீழ் இத்துறை ஆளுகையின் கீழ் உள்ள நிதி வசதி இல்லாத 588 திருக்கோயில்களுக்கு தலா ரூ.1 இலட்சம் வீதம் நிதியுதவி முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து வரப்பெறும் வட்டித் தொகை திருக்கோயில்களுக்கு தினசரி ஒரு கால பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முதலீடு தொகை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.1 இலட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் அம்மா இந்து அறநிலை சமயத்துறையின் மூலமாக திருக்கோயில் பூசாரிகள் ஓய்வூதிய திட்டம், துறை நிலையான ஓய்வூதிய திட்டம், திருக்கோயில்களுக்கு அரசு நிதி மற்றும் பொது மக்கள் பங்களிப்புடன் திருக்குடமுழுக்கு பணி போன்ற எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார்கள். இத்திட்டங்கள் அனைத்தையும் இவ்வரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சிசேவல் வெ.ஏழுமலை, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் க.காமராஜ், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, வானூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.சக்ரபாணி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு, விழுப்புரம் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஜீனத்பானு அவர்களும் மற்றும் அனைத்து துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –12-01-2026
12 Jan 2026 -
மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்பு
12 Jan 2026சென்னை, தமிழகத்தில் பெண்களுக்காக வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஜனநாயகன் சென்சார் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் படக்குழு அப்பீல்
12 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் படக்குழு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
-
தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா...? டாக்டர் ராமதாஸ் பதில்
12 Jan 2026சென்னை, சென்னையில் பா.ம.க.
-
கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், ராகுல் முடிவு செய்வார்கள்: செல்வப்பெருந்தகை
12 Jan 2026சென்னை, ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை ஆட்சியில் பங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் க
-
பாதையைவிட்டு விலகியது பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இஸ்ரோ தலைவர் தகவல்
12 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணன் அறிவித்துள்ளார்.
-
போராட்டத்தின் போது கைதான ஆசிரியர்களை உடனே விடுவிக்க அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Jan 2026சென்னை, போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
12 Jan 2026மதுரை, பாலமேட்டில் வருகிற 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளது.
-
அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மர்மநபர்களால் ஒருவர் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Jan 2026சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில் ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொ
-
மத்திய அரசை கண்டித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டம்
12 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தினார்.
-
கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை
12 Jan 2026சென்னை, நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
45 சவரன் நகையைக் கண்டெடுத்து ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு ரூ. 1 லட்சம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
12 Jan 2026சென்னை, தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.


