எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தி.மு.க ஆட்சியில் தான் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டது என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
பல்வேறு அமைப்பினர் ...
தமிழக சட்டசபையில் நேற்று பொதுத்துறை, மாநிலச் சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, பணியாளர் மற்றும் நிருவாக சீரதிருத்தத்துறை, திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிக்கள் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வூக்கால நன்மைகளும் ஆகிய துறைகளின் மீதான மானியக்கோரிக்கையில் பங்கேற்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, போராட்டங்கள் நடத்துவது தவறு என்று நான் சொல்லவில்லை. தங்களது உரிமையை கேட்க பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால், அப்படி போராட்டம் நடைபெறுகிற போது பொறுப்பில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் அவர்களை அழைத்து பேசி அதற்குரிய பரிகாரத்தை கண்டு, அந்தப் போராட்டங்களுக்கு முடிவு காணக்கூடிய வகையில் உங்களுடைய பணி அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நெடுவாசல் போராட்டம்
அப்போது குறுக்கிட்ட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, போராட்டங்கள் வல்லரசு நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு அனுமதி அளித்து அதனைத் தொடர்ந்து கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நெடுவாசல் போராட்டம் இன்றோடு (நேற்று) நூறாவது நாள், அதனால்தான் அதை சொல்கிறேன் என்று கூறினார்.
தி.மு.க ஆட்சியில்தான் ...
அப்போது குறுக்கிட்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, போராட்டகாரர்கள் சந்திக்க அனுமதிக்கேட்டால் நிச்சயம் அனுமதி கொடுக்கிறோம். நெடுவாசலில் மத்திய அரசிற்கு எதிராகத்தான் போராட்டம் நடத்துகிறார்கள். மாநில அரசுக்கு எதிராக அல்ல. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தாது. 1989-ம் ஆண்டு ஹைட்ரோ கார்பன் திட்டம் தி.மு.க ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. அப்போதே இவ்வளவு பாதிப்பு வரும் என்பதை தெரிந்து அனுமதிக்காமல் இருந்திருந்தால், இதுபோன்ற பிரச்சனையே வந்திருக்காது.
உண்மைதான் ...
அதனைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மீத்தேன் திட்டம் கொண்டுவர ஓப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என்பதுதான் உண்மை. அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்துப் போடப்படுகின்ற நேரத்தில், அதை ஆய்வு செய்து, மக்களுடைய கருத்துகளை அறிந்து, அதற்கு பிறகு அந்த திட்டம் வரும் என்று தான் அந்த ஒப்பந்தம் போடப்பட்டதே தவிர திட்டம் வருவதற்காக கையெழுத்துப் போடப்படவில்லை. ஆனால், அதற்கு பிறகு ஆட்சி மாற்றம் வந்தப் பிறகு, உங்களுடைய ஆட்சிக்காலத்தில்தான் அந்த மீத்தேன் திட்டம் வந்து சேர்ந்திருக்கிறது.
உற்பத்தி பகிர்வு ஒப்பந்தம்
அப்போது குறுகிட்ட மின்துறை அமைச்சர் தங்கமணி, மீத்தேன் திட்டத்திற்கு 4.1.2011 அன்று ஒப்பந்தம் போட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு போட்டுள்ளீர்கள். அதனைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆய்வுப்பணிக்குரிய நடவடிக்கைகளை எடுக்கத்தான் உத்தரவு போட்டிருக்கிறதே தவிர, அந்த பணியை தொடங்குவதற்கு எந்த உத்தரவு அல்ல. அப்போது குறுக்கிட்ட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சரகம் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம், திருபனந்தாள் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய தாலுக்காகளிலும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, குடவாசல், நீடாமங்கலம் மற்றும் வலங்கைமான் ஆகிய தாலுக்காகளிலும் பூமிக்கு அடியிலிருந்து மீத்தேன் வாயுவை கிணறுகள் மூலம் பிரித்தெடுக்க கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்திற்கு 29.7.2010 அன்று ஏலத்தின் மூலம் ஒதுக்கீடு செய்து, மத்திய அரசு உற்பத்தி பகிர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் ...
இதனைத் தொடர்ந்து, மேற்படி நிறுவனம் நிலக்கரி படுகை மீத்தேன் வாயு ஆய்வு மற்றும் உற்பத்தியைத் துவக்க பெட்ரோலியம் ஆய்வு உரிமம் கோரி தமிழ்நாடு அரசுக்கு 28.10.2010 அன்று விண்ணப்பித்தது. அதன் அடிப்படையில் முந்தைய தி.மு.க அரசு, மேற்படி ஜிஇஇசிஎல் நிறுவனம் அத்திட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள 1.1.2011 அன்று அரசாணை மூலம் தஞ்சாவூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் கடிதம், மற்றும் திருவாரூர் மாவட்ட சுரங்கத் துறையின் கடித்தின்படி அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்தது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 4.1.2011 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் அப்போதைய தொழில் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தைச் சார்ந்த யோகேந்திர குமார் மோடி ஆகியோருக்கிடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. என்று முதல்வர் பதிலளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 326 ரன்கள் குவிப்பு
17 Dec 2025அடிலெய்டு, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டியில் உஸ்மான் குவாஜா, அலெக்ஸ் கேரியின பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் குவித்துள்ளது.
-
சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு பரிசளித்தார் ஆனந்த் அம்பானி
17 Dec 2025புதுடெல்லி, சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்தார்.
14 ஆண்டுக்கு பிறகு...
-
சென்னை நங்கநல்லூரில் 2-வது ஹஜ் இல்லம் கட்டப்படுகிறதா? தமிழ்நாடு அரசு விளக்கம்
17 Dec 2025சென்னை, சென்னை சூளையில் ஹஜ் இல்லம் 2-வது இல்லம் எதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
டி-20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் புதிய சாதனை: அதிக புள்ளிகள் பெற்ற முதல் இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி
17 Dec 2025துபாய், ஆடவருக்கான தரவரிசை பட்டியலை சிறிய மாற்றத்துடன் ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
-
45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்: மம்தா தொகுதியில் வீடு வீடாக ஆய்வு செய்ய தி.காங்., திட்டம்
17 Dec 2025கொல்கத்தா, 45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்ப்பட்டதை அடுத்து மம்தா பானர்ஜி தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-
10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகான தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம்
17 Dec 2025சென்னை, 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-12-2025.
18 Dec 2025 -
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
18 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வில் கடந்த 5 நாட்கள் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்புக்காக த
-
தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
18 Dec 2025தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
-
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது: வெள்ளி விலை புதிய உச்சம்
18 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்து விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,440-க்கும், சவரன் ரூ.99,520-க்கும் விற்பனையானது.
-
காந்தியின் பெயர் நீக்கத்திற்கு எதிர்ப்பு: பார்லி. வளாகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
18 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள
-
காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
18 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலையே என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை குளிர்விக்க ஏழைகள்
-
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே விபி-ஜி ராம்ஜி மசோதா பார்லி., மக்களவையில் நிறைவேற்றம்
18 Dec 2025புதுடெல்லி, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான விபி-ஜி ராம்ஜி மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 
-
அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
18 Dec 2025நியூயார்க், அமெரிக்காவின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தலா ரூ. 1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
ஈக்வடார் நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான கொலை சம்பவங்கள்..!
18 Dec 2025பார்சிலோனா, ஈக்வடாரில் இந்தாண்டு மட்டும் 9,000க்கும் அதிகமான கொலைகள் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
-
பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள்: ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பரபரப்பு பேச்சு
18 Dec 2025ஈரோடு, பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள் என ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பேசினார். மேலும், களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே
-
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது: பெயர் இல்லாதவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
18 Dec 2025சென்னை, தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
-
ஈரோட்டில் பிரச்சாரத்தின் போது கம்பத்தில் ஏறிய ரசிகரை கண்டித்த விஜய்
18 Dec 2025ஈரோடு, த.வெ.க. தலைவர் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது கம்பத்தில் ஏறிய தொண்டரை, பேச்சை நிறுத்திவிட்டு அவர் கண்டித்தார்.
-
நேரு கடிதங்களை திருப்பி அளிக்க வேண்டும்: சோனியா காந்திக்கு மத்திய அரசு கடிதம்
18 Dec 2025புதுடெல்லி, கடந்த 2008-ம் ஆண்டு பெற்ற முன்னாள் பிரதமர் நேருவின் கடிதங்களை சோனியா காந்தி திருப்பி அளிக்க வேண்டும் என மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள
-
மத்திய அரசு சார்பில் அனைவருக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளதா...? தமிழ்நாடு அரசு விளக்கம்
18 Dec 2025சென்னை, 'மத்திய அரசின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கும் திட்டம்' என்ற பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள
-
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 26 இந்தியர்கள் பலி: மத்திய அரசு
18 Dec 2025புதுடெல்லி, உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷ்ய ராணுவத்தில், 202 இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி பாதிப்பு: இரு தரப்பு ஒப்பந்தங்கள் மூலம் விரைவில் தீர்வு காண வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Dec 2025சென்னை, அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள என்றும், இதனால் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது என்றும் பிரதமர் மோடிக்கு எழுத
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் திருமணமாளிகை திறப்பு: என் வெற்றிக்குப்பின் என் மனைவி உள்ளார்: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
18 Dec 2025சென்னை, கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் அண்ணா திருமணமாளிகையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், என் வெற்றிக்குப்பின்
-
புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு இலவச லேப்டாப் வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி தகவல்
18 Dec 2025சென்னை, புத்தாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் கல்லூரிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.
-
ஜனவரி 5-ம் அ.ம.மு.க. பொதுக்குழுக்கூட்டம்: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
18 Dec 2025சென்னை, அ.ம.மு.க.வின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற உள்ளதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.


