எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, - மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பாவை நீக்கி டி.டி.வி.தினகரன் வெளியிட்ட அறிவிப்பு செல்லாது என்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக வி.வி.ராஜன்செல்லப்பா மறைந்த முதல்வரும், அ.தி.மு.க.பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். தற்போது மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வி.வி.ராஜன்செல்லப்பா மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக டி.டி.வி.தினகரன் அறிவித்தார். இதற்கு புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பெரியபுள்ளான் என்ற செல்வம், நீதிபதி மற்றும் புறநகர் மாவட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா நீக்கப்பட்டதாக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்ட அறிவிப்பு செல்லாது எனவும் அவர் தொடர்ந்து புறநகர் மாவட்ட செயலாளராக தொடர தங்களது ஒட்டுமொத்த ஆதரவை தெரிவித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டமுடிவிற்கு பின்னர் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அ.தி.மு.க.என்ற மாபெரும் இயக்கமும் தமிழகத்தில் நடைபெற்று வரும் அம்மாவின் அரசுக்கும் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.நிர்வாகிகளும், மதுரை வடக்கு தொகுதி நிர்வாகிகளும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். கட்சியின் தலைமை நிலைய செயலாளர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சிப்பணியையும், ஆட்சிப்பணியையும் சிறப்பாக செயலாற்றி வருகிறோம். அவருக்கு மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் முழுஒத்துழைப்பு வழங்கப்படுகிறது.
தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் ஜாமீனில் வெளிவந்தபோது அவரை சந்தித்த எம்.எல்.ஏ.க்களில் நானும் ஒருவன். ஆனால் தற்போது அவருக்கும் இந்த இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தினகரன் நற்குணமும், ஈகை குணமும் படைத்தவர் தான். அம்மாவிடம் உதவியாளராக இருந்தவர். கட்சியைவிட்டு நீக்குவதிலும், மீண்டும் சேர்பதிலும் எனக்கு பலபடிப்பிணைகள் உண்டு. எம்.ஜி.ஆரும், அம்மாவும் என்னை கட்சியிலிருந்து பலமுறை நீக்கிஉள்ளார்கள். அதே போல் கட்சியில் சேர்த்தும் உள்ளார்கள். இப்படிப்பட்ட ஏற்ற தாழ்வுகளை சந்தித்தவன் நான்.
தற்போது டி.டி.வி.தினகரன் என்னை நீக்குவதில் அவசரப்பட்டுவிட்டார், உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட என்னை போன்றவர்களை நீக்க சசிகலா ஒப்புதல் கொடுக்க எந்த வாய்ப்பும் இல்லை. துணைப்பொதுசெயலாளர் அங்கீகாரத்தை அ.தி.மு.க.பொதுக்குழு தினகரனுக்கு இதுவரை கொடுக்க வில்லை. எனவே அவரது அறிவிப்பை பொறுப்படுத்த தேவையில்லை.
கட்சியும், ஆட்சியும் வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒ.பன்னீர்செல்வம் அணி இணைந்ததை வரவேற்கிறோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எதிரும்,புதிருமாக தேர்தலை சந்தித்தோம். அவற்றையெல்லாம் மறந்து ஆட்சியும், கட்சியும் நிலைக்க வேண்டும் என்பதற்காக அமைதி காத்து வருகிறோம். இந்த நேரத்தில் என்னை கட்சியில் இருந்து நீக்கி இருப்பதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். இதற்கு சசிகலா ஒப்புதல் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். எந்த வகையில் அவர் ஒப்புதல் கொடுத்தார் என்பது தெரியவில்லை.
தற்போது டி.டி.வி.தினகரனை ஆதரிக்கிறோம் எனக்கூறும் எம்.எல்.ஏ.க்களில் 3 பேருக்கு அமைச்சர் பதவி என்று கூறிவிட்டால் ஒட்டுமொத்தமாக உள்ள 19 எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் ஓடி வந்துவிடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் தான் தினகரனின் ஆதரவாளர்களாக உள்ளார்கள். இவர்களால் அ.தி.மு.க.ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. தொடர்ந்து அ.தி.மு.க.ஆட்சி தமிழகத்தில் நீடித்து 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்
12 Sep 2025புதுடெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.
-
பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில்15 - வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு: ஜனாதிபதி முர்மு பதவிப் பிராமணம் செய்து வைத்தார்
12 Sep 2025புதுடெல்லி, துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையடுத்து நேற்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் நாட்
-
ராமர் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன்: நேபாள முன்னாள் பிரதமர்
12 Sep 2025காத்மாண்டு : ராமரின் பிறப்பிடம் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன் என்று நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.
-
ஆசிய கோப்பை 4-வது லீக் போட்டி: ஹாங்காங்கை வீழ்த்திய வங்கதேசம்
12 Sep 2025துபாய் : வங்காளதேச அணி 17.4 ஓவர்களில் இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
8 அணிகள் பங்கேற்பு...
-
திருச்சியில் இன்று முதல் பிரச்சாரத்தை துவங்குகிறார் த.வெ.க. தலைவர் விஜய் மக்களை சந்திக்கிறேன் என்று அறிக்கை
12 Sep 2025சென்னை, திருச்சியில் இன்று மக்களை சந்திக்கிறேன் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தின் உள்ள பல்வேறு கோவில் கும்பாபிஷேகம் விழா
12 Sep 2025வேதாரண்யம், தமிழகத்தின் உள்ள பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 77 வயது மூதாட்டி
12 Sep 2025பாலக்காடு : பிளஸ்-2 தேர்வில் 77 வயது மூதாட்டி தேர்ச்சி பெற்றார்.
-
கவின் படுகொலை இந்தியாவுக்கு அவமானம்: பிருந்தா காரத் கருத்து
12 Sep 2025நெல்லை, கவின் ஆணவ படுகொலை இந்தியாவிற்கே அவமானம் என்று மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.
-
ராணுவத்தில் இந்தியர்களைசேர்க்க வேண்டாம்: ரஷ்யாவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்
12 Sep 2025புதுடெல்லி, ரஷிய ராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பதை நிறுத்துங்கள் என்று வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
வாக்காளர் பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
12 Sep 2025சென்னை, வாக்காளர் பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல்களை ஒப்பிடும் பணியை செப்.26க்கு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-09-2025.
12 Sep 2025 -
பிரதமருக்கு குங்குமம் அனுப்ப போவதாக உத்தவ் சிவசேனா அறிவிப்பு
12 Sep 2025மும்பை, பிரதமருக்கு குங்குமம் அனுப்ப போவதாக உத்தவ் சிவசேனா அறிவித்துள்ளது.
-
கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: அண்ணாமலை அறிவிப்பு
12 Sep 2025சென்னை : கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் 5 பயங்கரவாதிகள் கைது
12 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தீட்டிய சதி திட்டமும் முறியடிக்கப்பட்டது.
-
உழவர்கள் நலன் காக்க ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ துவக்கம்: அமைச்சர் தகவல்
12 Sep 2025சென்னை : தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியினை மேலும் அதிகரித்து, முந்திரி சாகுபடி செய்யும் உழவர்கள், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின
-
செல்போனில் பேசிக்கொண்டே பஸ்சை இயக்கிய டிரைவர்: பயணிகள் அச்சம்
12 Sep 2025நெல்லை : செல்போனில் பேசிக்கொண்டே அரசு பஸ்சை டிரைவர் இயக்கியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
-
தாமதத்தை முற்றிலும் தவிர்க்க பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பெறும் புதிய வசதி : விரைவில் அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம்
12 Sep 2025சென்னை : தாமதத்தை முற்றிலும் தவிர்க்க பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் புதிய வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
-
நேபாளத்தில் கலவரம்: ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய மந்திரியின் குடும்பம்
12 Sep 2025காத்மாண்டு : நேபாளத்தில் நடந்த கலவரத்தின்போது மந்திரியின் குடும்பம் ஹெலிகாப்டரில் கயிறு மூலம் தப்பியது.
-
விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க கூட்டுறவுத்துறைக்கு - நபார்டு வங்கி விடுவிப்பு
12 Sep 2025சென்னை : விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க கூட்டுறவுத்துறைக்கு ரூ.3,700 கோடியை நபார்டு வங்கி விடுவித்துள்ளது.
-
கோயம்பேடு-அசோக்நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தம்
12 Sep 2025சென்னை : கோயம்பேடு-அசோக்நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.
-
தமிழ்நாடு அரசு சார்பில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா - நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோர் பங்கேற்பு
12 Sep 2025சென்னை : தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவ
-
அனல்மின் நிலைய கட்டுமான பணி மின்சார வாரிய தலைவர் ஆய்வு
12 Sep 2025சென்னை, எண்ணூரில் புதிதாக கட்டப்படும் அனல்மின் நிலையத்தை மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
-
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி : வானிலை ஆய்வு மையம் தகவல்
12 Sep 2025சென்னை : வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நிர்மலா சீதாராமன் திருப்பதி வருகை
12 Sep 2025திருமலை : மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
டெல்லி, மும்பை உயர்நீதிமன்றத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
12 Sep 2025புதுடெல்லி : டெல்லி, மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.