எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நமது நாட்டில் கடந்த இருபது வருடங்களில் உணவு தானிய உற்பத்தி பல மடங்காக பெருகியுள்ளது. இதற்கு முக்கிய காரணங்களாக உயர் விளைச்சல் இரகங்களை பயிரிடுவது. உலகில் இன்றைய சூழலில் மகசூலை அதிகரிப்பதற்காக நாம் பெருமளவில் இரசாயன உரங்களையே பயன்படுத்துகிறோம். நாளடைவில் இரசாயன உரங்கள் மண்ணின் தன்மையை கெடுப்பதோடு மட்டுமல்லாமல் அந்த உரங்களின் விலையும் அதிகமாக இருப்பதால் விவசாய பெருமக்கள் உரங்களை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படியெனில் அதற்கு மாற்றாக விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இருப்பது தான் பசுந்தாள் உரப்பயிரான தக்கப்பூண்டு. தக்கப்பூண்டு என்பது தண்டு பகுதியில் முடிச்சுள்ள பசுந்தாள் உரப்பயிராகும். இப்பயிரின் மூலம் வளிமண்டல நைட்ரஜன் மண்ணில் நிலை நிறுத்தபடுகிறது. இதன் மூலம் இரசாயன நைட்ரஜன் உரமிடும் அளவை குறைக்கலாம்.
தக்கப்பூண்டின் குணாதிசயங்கள் :
1. குறுகிய காலப்பயிர், அதிவேக வளர்ச்சி மற்றும் உயிர் ஊட்டத்திறன்.
2. நிழல், நீர்தேக்கம், வறட்சி, மற்றும் பல்வேறு தட்பவெப்ப நிலைகளை தாங்கி வளரும் தன்மை கொண்டது.
3. விரைவான தழைச்சத்து நிலைபடுத்தும் திறன்.
4. அதிக தழைச்சத்து கிரகிப்பு மற்றும் தேக்கதிறன் கொண்டது.
5. தக்க நேரத்தில் ஊட்டசத்து வெளியிடும் பயிர்.
6. அதிக விதை முளைப்புத் திறன்.
7. அதிக விதை உற்பத்தி திறன் கொண்டது.
8. பூச்சி மற்றும் பயிர் நோய்கள் எதிர்ப்பு தன்மை கொண்டது.
பயன்கள் :
1. மண்ணில் இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களை சாதகமாக்குகிறது.
2. மண்ணின் அங்கக பொருட்களின் தன்மையை நிலைப்படுத்துகிறது.
3. கடினமான மண்ணில் துளைகளை ஏற்படுத்தி காற்று பரிமாற்றம் மற்றும் வடிகாலுக்கு உதவுகிறது.
4. நிலத்தை உழும்போது அடிமட்ட அடுக்குகளிலுள்ள ஊட்டசத்துகளை உறிஞ்சி மேல்மட்டத்திற்கு கொண்டு வர உதவுகிறது.
5. மண்ணின் அடிமட்ட அடுக்குகளில் உள்ள ஊட்டசத்துக்கள் கரைவதை தடுக்கிறது.
6. தழைச்சத்து அளவை மண்ணில் அதிகரிக்கிறது.
7. நீர் பிடிப்பு கொள்ளளவை அதிகபடுத்தும்.
தக்கப்பூண்டின் பசும்பொருள் உற்பத்தியும் தழைச்சத்து நிலை நிறுத்தும் திறனும்
பசும்பொருள் உற்பத்தி
(டன்/ஹெக்டேர்) தழைச்சத்து நிலை நிறுத்தும்
(கிலோ/ஹெக்டர்) – 60 நாட்களில்
8.5 – 10.0
150 - 225
தக்கப்பூண்டு பசுந்தாள் உரப்பயிர் உற்பத்தியை பற்றி காண்போம்
பருவம்: அனைத்து பருவத்திற்கும் ஏற்றது. மேலும் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் விதைப்பது விதை உற்பத்திக்கு நல்லது.
மண்: வண்டல் மண் ஏற்றது.
விதையளவு: பசுந்தாள் உரத்திற்கு – 25-35 கிலோ/ ஹெக்டர்
விதை – 20 கிலோ/ ஹெக்டர்.
விதைநேர்த்தி: ஹெக்டருக்கு 5 பாக்கெட் ரைசோபியம் பயிர் வளர்ப்பு கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
இடைவெளி: விதைகளை தூவ வேண்டும்.
பசுந்தாள் உரப்பயிருக்கு 30 x 10 செ.மீ
விதை உற்பத்தி – 45 x 20 செ.மீ
30 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
அறுவடை: விதைத்த 45 -60 நாட்களில் பசுந்தாளை உழுது விட வேண்டும்.
விதை உற்பத்தி: விதைத்த 150வது நாட்களில் விதைகளை சேகரிக்க வேண்டும்.
மகசூல்:
பசுந்தாள் உரம் – 13-15 டன் / ஹெக்டர்
விதை - 400 கிலோ/ ஹெக்டர்
எனவே விவசாய பெருமக்கள் தங்கள் நிலத்தில் வருடம் ஒரு முறையாவது தக்கப்பூண்டை பயிர் செய்து மண் வளத்தை பாதுகாப்புடன் மண்ணில் உள்ள ஊட்டசத்துக்கள் கரைவதை தடுப்போம்.
மேலும் தக்கப்பூண்டு விதையை வேளாண்மை அறிவியல் நிலையம் சந்தியூர், சேலம் அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 0427 – 2422550-ணை அணுகவும்.
அ.காயத்திரி,முனைவர் பா.கீதா, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது: வெள்ளி விலை புதிய உச்சம்
18 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்து விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,440-க்கும், சவரன் ரூ.99,520-க்கும் விற்பனையானது.
-
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது: பெயர் இல்லாதவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
18 Dec 2025சென்னை, தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
-
மத்திய அரசு சார்பில் அனைவருக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளதா...? தமிழ்நாடு அரசு விளக்கம்
18 Dec 2025சென்னை, 'மத்திய அரசின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கும் திட்டம்' என்ற பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-12-2025.
18 Dec 2025 -
தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை ஜன.1 முதல் அமல்
18 Dec 2025சென்னை, தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
18 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வில் கடந்த 5 நாட்கள் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்புக்காக த
-
பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள்: ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பரபரப்பு பேச்சு
18 Dec 2025ஈரோடு, பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள் என ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பேசினார். மேலும், களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே
-
கலைஞர் பல்கலைக்கழக மசோதா: ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Dec 2025சென்னை, கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
-
நடுவானில் திடீர் பழுது: ஏர் இந்தியா விமானம் கொச்சியில் அவசர தரையிறக்கம்
18 Dec 2025கொச்சி, நடுவானில் திடீர் பழுது காரணமாக ஏர் இந்தியா விமானம் கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
18 Dec 2025தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
-
காந்தியின் பெயர் நீக்கத்திற்கு எதிர்ப்பு: பார்லி. வளாகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
18 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள
-
ஈரோட்டில் பிரச்சாரத்தின் போது கம்பத்தில் ஏறிய ரசிகரை கண்டித்த விஜய்
18 Dec 2025ஈரோடு, த.வெ.க. தலைவர் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது கம்பத்தில் ஏறிய தொண்டரை, பேச்சை நிறுத்திவிட்டு அவர் கண்டித்தார்.
-
அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி பாதிப்பு: இரு தரப்பு ஒப்பந்தங்கள் மூலம் விரைவில் தீர்வு காண வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Dec 2025சென்னை, அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள என்றும், இதனால் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது என்றும் பிரதமர் மோடிக்கு எழுத
-
ஈரோடு பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை வெளியிட்ட விஜய்..!
18 Dec 2025ஈரோடு, ஈரோடு பிரச்சாரத்தில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "நன்றி ஈரோடு" என்று பதிவிட்டுள்ளார்.
-
காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
18 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலையே என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை குளிர்விக்க ஏழைகள்
-
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே விபி-ஜி ராம்ஜி மசோதா பார்லி., மக்களவையில் நிறைவேற்றம்
18 Dec 2025புதுடெல்லி, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான விபி-ஜி ராம்ஜி மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 
-
ஈக்வடார் நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான கொலை சம்பவங்கள்..!
18 Dec 2025பார்சிலோனா, ஈக்வடாரில் இந்தாண்டு மட்டும் 9,000க்கும் அதிகமான கொலைகள் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
-
ஜனவரி 5-ம் அ.ம.மு.க. பொதுக்குழுக்கூட்டம்: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
18 Dec 2025சென்னை, அ.ம.மு.க.வின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற உள்ளதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் திருமணமாளிகை திறப்பு: என் வெற்றிக்குப்பின் என் மனைவி உள்ளார்: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
18 Dec 2025சென்னை, கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் அண்ணா திருமணமாளிகையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், என் வெற்றிக்குப்பின்
-
பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 மின்சார பேருந்துகள் இயக்கம்: துணை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
18 Dec 2025சென்னை, 3-வது கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து ரூ.214.50 கோடி மதிப்பிலான 125 மின்சார பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.
-
அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
18 Dec 2025நியூயார்க், அமெரிக்காவின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தலா ரூ. 1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
ஈரோடு பிரச்சாரத்தில் சீமானை மறைமுகமாக விமர்சித்த விஜய்
18 Dec 2025ஈரோடு, ஈரோடு பிரச்சாரத்தில் சீமானை மறைமுகமாக விஜய் விமர்சித்ததாக இணையத்தில் பலர் தெரிவித்து வருகின்றனர்.
-
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 26 இந்தியர்கள் பலி: மத்திய அரசு
18 Dec 2025புதுடெல்லி, உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷ்ய ராணுவத்தில், 202 இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
நேரு கடிதங்களை திருப்பி அளிக்க வேண்டும்: சோனியா காந்திக்கு மத்திய அரசு கடிதம்
18 Dec 2025புதுடெல்லி, கடந்த 2008-ம் ஆண்டு பெற்ற முன்னாள் பிரதமர் நேருவின் கடிதங்களை சோனியா காந்தி திருப்பி அளிக்க வேண்டும் என மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள
-
புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு இலவச லேப்டாப் வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி தகவல்
18 Dec 2025சென்னை, புத்தாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் கல்லூரிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.


