எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் மஞ்சக்குப்பம் செயின் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 86 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் வே.ப.தண்டபாணி, முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது.
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா நல்லாசியோடு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 43,200 நபர்களுக்கு 1,03,000 வேலைவாய்ப்பினை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2017-2018 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 4,312 படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் 72 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்குபெற்று பல்வேறு பணியிடங்களுக்கு 798 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 2017-2018 ஆம் ஆண்டில் ப்ல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதில் கூடுதலாக 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அளிப்பதற்கு தம்pழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 92 நிறுவனங்கள் பங்கு பெற்றுள்ளனர். இந்நிறுவனங்கள் மூலம் 9 ஆயிரம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி தருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை சார்ந்த ஐந்தாம் வகுப்பு முதல் பொறியியல் பட்டப்படிப்பு வரையிலான கல்வித்தகுதி உடைய வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர். சென்னையில் உள்ள பிரபல தனியார் முன்னணி நிறுவவனங்களான அசோக் லேலாண்ட், யமஹா மோட்டர்ஸ், பிரேக்ஸ் இந்தியா லிமிட்டெட், சாம்சங், விப்ரோ, அப்பல்லோ. யுரேகா ஃபோர்ப்ஸ், ஆம்வே இந்தியா போன்ற நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஐடிஐ, டிப்ளமா மற்றும் பி.இ படித்த இளைஞர்கள் தேர்வு செய்துள்ளார்கள்.கடலூர் சிப்காட்டில் உள்ள நிறுவனங்களும், இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று, பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்துள்ளார்கள். டைலரிங் முடித்தவர்கள், கெமிக்கல் இன்ஜினியரிங் (டிப்ளமாஃபி.இ) மற்றும் வேதியியல் பாடப் பிரிவில் பி.எஸ்ஸி மற்றும் எம்.எஸ்ஸி முடித்துள்ளோருக்கு முகாமில் பணி கிடைத்துள்ளன.மேலும், கடலூரில் உள்ள டிவிசி எலக்ட்ரானிக்ஸ், ஏபிடி மாருதி, விஸ்டி மோட்டார்ஸ், ஜே.கே.ஆர் டெக்ஸ்டைல்ஸ் போன்ற நிறுவனங்கள் விற்பனையாளர், கணக்கர், மற்றும் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு முதல் பட்டதாரி கல்வித் தகுதிகளை உடைய மனுதாரர்கள், இம்முகாமில் தேர்வு செய்துள்ளனர்.கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள இளங்கலை, முதுகலை ஆசிரியர் மற்றும் குழந்தை காப்பாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் இம்முகாமில் தேர்வு செய்துள்ளார்கள். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் நடத்தப்படும் பல்வேறு இலவச பயிற்சிகளுக்கான பதிவும் இம்முகாமில் நடைபெறுகிறது.கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2இ78இ346 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்துள்ளார்கள். 2017-ம் ஆண்டில் 32இ316 மனுதாரர்கள் தங்கள் பதிவினை புதுப்பித்துள்ளார்கள். மேலும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு புதுப்பித்தல் சலுகையின் கீழ், 1153 மனுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு பணிகளை பெறுவதற்கு ஏதுவாக, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்காக இலவச பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக நடத்தப்படுகின்றன. கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் 2017-18-ம் நிதியாண்டில், இத்திட்டத்தின்கீழ் 2077 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் 849 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,89,19,800ஃ- உதவித் தொகையாகப் பெற்று வழங்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால், இம்மாவட்டத்தை சார்ந்த இளைஞர்களின் வேலைபெறும் திறனை அதிகரிக்கும் விதமாக பல்வேறு திறன் பயிற்சிகள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சி பெறும் மனுதாரர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.100ஃ- போக்குவரத்து படியாக பெற்று வழங்கப்படுகிறது என தெரிவித்தார். மேலும் இன்றைய தினம் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஆண்கள் 1490 நபர்களும், பெண்கள் 1361 நபர்களும் ஆக மொத்தம் 2,831 நபர்கள் பங்குபெற்று இவர்களில் ஆண்கள் 427 நபர்களுக்கும், பெண்கள் 304 நபர்களுக்கும் ஆக மொத்தம் 731 நபர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்த அனைவரையும் உதவி இயக்குநர் (வேலைவாய்பு) எம்.கருணாகரன் வரவேற்று பேசினார்.இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சரவணன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் ம.தனலட்சுமி, கே.லாவண்யா, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.ஜவஹர்லால், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் லட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஜி.பீட்டர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மு.முரளிதரன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
குடியுரிமையை பறிக்க பா.ஜ.க.வினர் முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு
20 Dec 2025கோவை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குரிமையை பறித்து பின்னர் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
-
தமிழ்நாட்டில் வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்: மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.43 கோடி: 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதிரடி நீக்கம்
19 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டார், இதை தொடர்ந்து அந்தந்த மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் வரைவு வாக்க
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை பயணம்: 2 நாட்களில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்
19 Dec 2025நெல்லை, நெல்லையில் இன்றும், நாளையும் (டிச.20, 21ல்) முதல்வர் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
-
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு இன்று முதல் தடை மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்
19 Dec 2025சென்னை, சென்னை மாநகராட்சியில் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்
-
மேலும் ஒரு வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 17 ஆண்டுகள் சிறை - ரூ.1.64 கோடி அபராதம்
20 Dec 2025இஸ்லமபாத், தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகிய இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வ
-
ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்: உலக சாதனை படைத்த கான்வே - லதாம் ஜோடி
19 Dec 2025ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ரன் குவித்த தொடக்க ஜோடி என்ற உலக சாதனையை கான்வே - லதாம் இணை படைத்துள்ளது.
-
இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: பிரதமர் மோடி குறித்து அமெரிக்கா பெருமிதம்
19 Dec 2025சென்னை, இந்தியாவில் ஒரு நண்பர் இருப்பதாக பிரதமர் மோடியின் படத்தை அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.
-
டிராவிஸ் ஹெட் அபார சதம்: 356 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் ஆஸி.,
19 Dec 2025அடிலெய்டு, டிராவிஸ் ஹெட்டின் அபார சதத்தால் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் 356 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.
-
யாருடன் விருந்துக்கு செல்ல வேண்டும்: காம்பீருக்கு கபில்தேவ் அறிவுரை
19 Dec 2025புதுடெல்லி, பயிற்சியாளர் என்பவர் ஒரு வீரர் சதம் அடித்து விட்டால், அவரை அழைத்து விருந்து கொடுக்க தேவையில்லை.
-
சாந்தி மசோதா நிறைவேற்றம்: தொழில்நுட்பத்துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்தும்: பிரதமர் மோடி
19 Dec 2025டெல்லி, இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களைத் தொடங்க அனுமதிக்கும் சாந்தி மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி ப
-
பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது
19 Dec 2025ஓமன், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
-
டி-20 உலகக் கோப்பை தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு
19 Dec 2025மும்பை, டி-20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வுக் குழு தலைவர் அகர்கர் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்ற பிறகு இன்று இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.
-
எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் வரும் 24-ம் தேதி கடலுக்கு செல்ல தடை
20 Dec 2025திருவள்ளூர், ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் 24-ந்தேதி கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-12-2025.
20 Dec 2025 -
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
20 Dec 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார்?
20 Dec 2025புதுச்சேரி, த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
-
தங்கள் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி: சிரியாவில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படைகள் திடீர் தாக்குல்
20 Dec 2025டிரிபோலி, இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.
-
2026 சட்டசபை தேர்தல்: த.வெ.க. தலைமையில் கூட்டணியை அமைக்கும் பணியில் விஜய் தீவிரம்
20 Dec 2025சென்னை, த.வெ.க. தரப்பில் கூட்டணிக்கு கட்சிகளை அழைத்து வரவும், அவர்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவும் குழு அமைக்கப்பட உள்ளது.
-
பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை
20 Dec 2025பாரீஸ், பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஆஸ்திரேலியா கதாநாயகனின் சிகிச்சைக்கு குவிந்த நன்கொடை
20 Dec 2025கான்பெரா, ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிக பிரபலமானது.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை; வெள்ளி விலை புதிய உச்சம்
20 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது. அதன்படி ஒரு சவரன் ரூ.99,200-க்கு விற்பனையானது.
-
தைவான் நடந்த கத்திக்குத்து சம்பவம்: 3 பேர் உயிரிழப்பு
20 Dec 2025தைபேய், ஆசிய நாடான தாய்வானின் தலைநகர் தைபேயில் நேற்று மாலை நடந்த கத்திக் குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
-
அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழப்பு
20 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பொங்கல் பண்டிகைக்கு பிறகு த.வெ.க.வை பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன்
20 Dec 2025கோவை, பொங்கலுக்குப் பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை: அமைச்சர் சேகர்பாபு
20 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


