எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேனி - தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி.பழனிச்சாமி ஆகியோரின் ஆணைக்கினங்க தேனியில் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்க பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேனி நகர் கழக செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். பெரியகுளம் நகர செயலாளர் என்.வி.ராதா, தேனி ஒன்றிய கழக செயலாளர் ஆர்.டி.கணேசன், பெரியகுளம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் செல்லமுத்து, பெரியகுளம் ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், தலைமைகழக பேச்சாளர்கள் நடிகை பபிதா, இசைமுரசு ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் பேசும்போது, நமது கழக அரசு எப்பொழுதும் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும், உறுதிசெய்யும் திட்டங்களையே செயல்படுத்தியுள்ளது. தேனி, மதுரை ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் முல்லைபெரியார் அணையில் 136 அடியாக இருந்த நீர்மட்டத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டபோராட்டம் நடத்தி 142 அடியாக உயர்த்த வழிவகுத்தார். அதே போல் டெல்டா பகுதி மக்களின் துயர்துடைக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் போராடி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவை பெற்றுத்தந்தார். கழகத்தை பொறுத்தவரையில் 11 ஆண்டுகாலம் தமிழகத்தில் பொற்கால ஆட்சியை கொடுத்த கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மறைவுக்கு பின் கழகம் இரண்டாக பிரிந்து இரட்டை இலை முடக்கப்பட்டது. பின்னர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் முயற்சியில் கழகம் ஒன்றுபட்டு இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்டது. அதேபோல் தற்போதும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டுள்ளனர். அவர்களின் வழியில் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புரட்சித்தலைவி அம்மா கூறியதுபோது இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் கழகம் நிலைத்திருக்கும் அதற்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன் பேசும்போது காவிரி நதிநீரின் உரிமையை தமிழகத்திற்கு பெற்று தருவதில் உறுதியாக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் முயற்சியால் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் 22 நாட்கள் கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தை இயங்க விடாமல் போராடினோம் என்றார்.
கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி அவர்கள் பேசும்போது காவிரி நதிநீர் என்பது தமிழர்களின் வாழ்க்கை மேம்பாடு, வளர்ச்சியோடு ஒன்றோடு ஒன்று கலந்ததாகும். காவிரி நதி எப்போது பிறந்ததோ அன்றிலிருந்து திசை மாறாமல் ஒரே சீராக இன்று வரை சுமார் 416 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. காவிரியில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட 5ம் நூற்றாண்டிலேயே கரிகால்சோழன் காவிரியில் கல்லணையை கட்டினார். 12ம் நூற்றாண்டில் மைசூர் மன்னன் காவிரியை தடுத்து அணைகட்ட நினைத்தார். அதை அப்போதைய தமிழக மன்னரால் தடுக்கப்பட்டது. பின்னர் 17ம் நூற்றாண்டில் காவிரியில் அணை கட்ட முற்பட்டபோது சரபோகி மன்னர் மதுரைமைய ஆண்ட ராணிமங்கம்மாள் அவர்களும் இணைந்து தடுத்தனர். 1924ல் மைசூர் சமஸ்தானமும் சென்னை மாகாணமும் காவிரி பாசன பகுதிகள் எந்த வகையிலும் பாதிக்காமல் 50 ஆண்டுகால ஒப்பந்தம் செய்து கொண்டு கர்நாடகத்தில் 41 டிஎம்சி தண்ணீரை தேக்கும் வகையில் கிருஷ்ணசாகராஜ அணையும். 91 டிஎம்சி தண்ணீரை தேக்கும் வகையில் மேட்டூர் அணையும் கட்டப்பட்டது. நாடு சுதந்திரத்திற்கு பின் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபின் 1974ல் 50 ஆண்டு கால ஒப்பந்தத்தை அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி புதுப்பிக்க தவறியதால் கர்நாடகம் காவிரியில் தண்ணீர் தர மறுத்தது. அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காததால் டெல்டா பகுதி விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 1990ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வி.பி.சிங் காவிரி நடுவர் மன்றத்தை உருவாக்கினார். அதனை தொடர்ந்து காவிரி நடுவர் மன்றம் இடைக்கால நிவாரணமாக 566 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு தரவேண்டும் என்று கூறியது. அதனை கர்நாடக அரசு தராததால் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. 1991 டிசம்பம் மாதம் முதல்வராக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தராததை கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். 4 நாட்கள் நீடித்த அந்த உண்ணாவிரதத்தால் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் உடனடியாக காவிரியில் தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டார். அதேபோல் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எதிர்கட்சி தலைவராக இருந்தபோதும் காவிரிக்காக வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இவ்வாறு தமிழகத்தின் நலன் கருதி சட்ட போராட்டம் நடத்திய புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சீரிய முயற்சியின் காரணமாக 2018ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இதன்படி 15 ஆண்டு காலத்திற்கு ஒரு ஆண்டிற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். காவிரி எந்த மாநிலத்திற்கும் சொந்தமில்லை. காவிரியில் அணை கட்டக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் டெல்லியில் இயங்கும். எனவே காவிரியில் தமிழகத்திற்கு கிடைத்த இந்த வெற்றிக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்களை தவிர கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. தமிழக நலனை கருத்தில் கொண்டு தான் மத்திய அரசோடு தமிழக அரசு நட்பு கொண்டுள்ளது. மேலும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ வசதி, சாலை வசதி, கல்வி வசதி, மின்வசதி ஆகியவை சிறப்பாக உள்ளது. 49 சதவிகித மாணவர்கள் உயர்கல்வி பயிலும் மாநிலமாக தமிழகம் உருவாகியுள்ளது. தற்போது கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் சிறப்பாக கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருகின்றனர். அதிமுகவை உடைக்க நினைக்கின்றவர்கள் கட்சிக்கு பின்கதவு வழியாக வந்தவர்கள் தான் என்று சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பெரியகுளம் தொகுதி கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
பறந்து போ திரைவிமர்சனம்
07 Jul 2025தனது மகனின் ஆசை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் தான் செல்லாத உயரத்திற்கு தன் மகன் செல்ல வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெற்றோரின் கதை தான் இந்த பறந்து போ படம்.
-
ஜூலை 18-ல் பீகார் செல்கிறார் பிரதமர் மோடி
07 Jul 2025பாட்னா : பீகாரில் உள்ள மோதிஹரிக்கு ஜூலை 18ல் பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதாக அந்த மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் குமார் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீது 10-ம் தேதி விசாரணை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
07 Jul 2025புது டெல்லி, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு தடை விதிக்க மறுத்து தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு
-
மத்திய பிரதேசத்தில் ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாமல் ரூ.28 லட்சம் ஊதியம் பெற்ற காவலர்
07 Jul 2025போபால் : மத்திய பிரதேச மாநில காவல்துறையில் பணிக்கு சேர்ந்து சுமார் 12 ஆண்டுகளாக ஒரு நாள் கூட வேலைக்குச் செல்லாமல் ரூ.28 லட்சம் வரை ஊதியமாகப் பெற்ற காவலர் பற்றிய தகவல் அ
-
அரசு கலை கல்லூரிகளில் நடப்பாண்டு 20 சதவீதம் கூடுதல் இடங்கள்: அமைச்சர்
07 Jul 2025சென்னை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.
-
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்:விவசாயிகள், மக்களுடன் எப்போதும் அ.தி.மு.க. இருக்கும்: இ.பி.எஸ். பேச்சு
07 Jul 2025கோவை, “அ.தி.மு.க. அரசாங்கம் எப்போதும் விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருக்கும் என கோவையில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அ.தி.மு.க.
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
பிரத்யேக பேருந்தில் ரோடு ஷோ தொடங்கினார் இ.பி.எஸ்.
07 Jul 2025கோவை : பிரச்சார பயணத்திற்கான பிரத்யேக பேருந்தில் எடப்பாடி பழனிசாமி ரோடு- ஷோ தொடங்கினார்.
-
மடப்புரம் கோவில் காவலாளி மரணம்: த.வெ.க. போராட்டத்திற்கு அனுமதி
07 Jul 2025சென்னை, திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக தவெக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
-
3பி.ஹெச்.கே திரை விமர்சனம்
07 Jul 2025மனைவி, மகன், மகள் என்று குறைவான வருமானத்தில் வாழும் சரத்குமார், சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.