எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, பிப்.17 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க ரூ.130 கோடி மதிப்பிலான வக்ஃப் வாரிய சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முகமது ஜான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எ.முகம்மது ஜான் தலைமையில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆய்வுக்கூட்டம் நேற்று முன்தினம் அன்று வக்ஃப் வாரிய அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தபட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் கோ.சந்தானம் முன்னிலை வகித்தார். முன்னதாக வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலர் ப.அப்துல் ராசிக் அனைவரையும் வரவேற்றார். ஆய்வின் போது அமைச்சர் உரையில் கடந்த ஜனவரி மாத ஆய்வுக் கூட்டத்தில் களப்பணியாளர்களுக்கு வழங்கிய அறிவுரைகளின்படி செயல்பட்டு ஜனவரி மாதம் பெறப்பட்ட வக்ஃப் வாரிய சகாயத் தொகை இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.40 இலட்சமாக உயர்ந்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த நிதியாண்டில் ஜனவரி 2011 வரை பெறப்பட்ட சகாயத் தொகை ரூ.2.67 கோடியாகும். நடப்பாண்டில் ஜனவரி 2012 வரை பெறப்பட்ட சகாயத் தொகை ரூ.267 கோடியாகும்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.30 இலட்சம் அதிகமாக சகாயத் தொகை பெறப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. இனி வரும் காலங்களிலும் இப்பணி தொய்வில்லாது தொடர்ந்து இலக்கினை அடைய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். முதல்வர் உத்தரவின்படி வக்ஃபுச் சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக கோவையில் யாகூப் திவான் ஹைருத் இன்ஷாவலி அவுலியா தர்கா வக்ஃபுக்குச் சொந்தமான ரூ.5 கோடி பெறுமானமுள்ள 48 சென்ட் பரப்புள்ள சொத்து ஆக்கிரப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சென்னையில் திருவல்லிக்கேணி நவாப் கைருன்னிசா பேகம் சாஹிபா மற்றும் பப்பு மஸ்தான் தர்கா வக்ஃபிற்குச் சொந்தமான சுமார் ரூ.105 கோடி மதிப்பிலான 35 கிரவுண்டு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மிட்கப்பட்டுள்ளது, மேலும் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம்,சிறுவாடி பள்ளிவாசல் வக்ஃபுக்குச் சொந்தமான, முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள 10.85 ஏக்கர் பரப்புள்ள சொத்துகள் நீதிமன்ற நடவடிக்கைக்குப் பின் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறாக சுமார் 130 கோடி ரூபாய் பெறுமான வக்ஃப் சொத்துக்கள் ஆக்கிரமி ப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது . இந்த சொத்துகள் அனைத்தும் முதலமைச்சரின் உத்தரவின் பேரிலேயே மீட்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் வக்ஃப் சொத்துக்களை மீட்க உறுதுணையாக இருந்த முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு இதற்காக நடவடிக்கை மேற்கொண்ட அலுவலர்களையும் பாரட்டுகிறேன் தொடர்ந்து இப்பணியில் தனி கவனம் செலுத்தி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃப் சொத்துகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவும் கேட்டுகொள்கிறேன்.மேலும் வக்ஃப் வாரியத்தில் இது நாள் வரை பதிவு செய்யப்படாத வக்ஃபுகளை பதிவு செய்ய உடன் நடவடிக்கைகள் மேற்க்கொள்ளவும் புதியதாக துவங்கப்பட்டிருக்கும் பள்ளிவாசல்களையும் வாரியத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவும், வாரியத்தால் அங்கீகரப்படாத வக்ஃபின் நிர்வாக குழுக்களின் பட்டியல் எடுத்து வாரியத்தின் பார்வைக்குச் சமர்பிக்கவும் நிர்வாகக்குழு வாரியத்தின் அங்கீகாரம் பெறும் வகையிலும் செயல்பட வேண்டும் முறைகேடாக விற்கப்பட்ட வக்ஃப் சொத்தினை மீட்க உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் வக்ஃப் சொத்துக்கள் - அவை வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டாலும் பதிவு செய்யப்படவில்லா என்றாலும் அவை வக்ஃப் சோத்துக்களே. எனவே வக்ஃப்ச் சொத்துக்கள் எந்த காலத்தில் முறைகேடாக விற்கப்பட்டிருந்தாலும் அவை மீட்கப்படும். வக்ஃப் வாரியத்தின் அனுமதியின்றி பரிவர்த்தனை செய்யப்படும் வக்ஃப் சொத்துக்களை சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்கள் பத்திரப்பதிவு மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, யாராவது வக்ஃப் சொத்துக்களை விற்கவோ, பரிபவர்த்தனை செய்ய முற்பட்டால் அந்த ஆவணங்களைச் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்கள் வக்ஃப் வாரியத்தினுடைய தடையின்மைச் சான்று இல்லாமல் பதிவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதை மீண்டும் சார்பதிவாளர்களுக்கு வலியுறுத்தி தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி உலமாக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 11,171 சைக்கிள்களில் இதுவரை 9,236 சைக்கிள்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.மீதமுள்ள 1, 935 சைக்கிள்களை இம்மாத இறுதிக்குள் வினியோகம் செய்ய வேண்டும். மேலும், வக்ஃப் சொத்தினை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் இருப்பின் அதனை பெற்று வாரியத்தில் சமர்பிக்க வேண்டும். வக்ஃப்க் சொத்துக்களுக்கு புதிய வாடகையின் நிர்ணயம் செய்து வக்ஃப்க் வருமானத்தை பெருக்க வேண்டும். வக்ஃபின் கணக்குகளை ஆய்வு செய்து, வாரியத்திற்கு முறையான கணக்குகளை சமர்பிக்க அறிவுறுத்த வேண்டும். கடலூர் மாவட்டத்தில்` தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு வக்ஃப் வாரிய ஊழியர்கள் சார்பாக ஒரு நாள் ஊதியத்தை அளித்தமைக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சரின் சீரிய தலைமையில் அமைந்துள்ள இந்த அரசு சிறுபான்மையினர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு, வக்ஃப் சொத்துக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கி வருகிறது. எனவே சிறுபான்மையினரின் பாதுகாவலராக விளங்கும் இந்த அரசின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் நீங்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி வக்ஃப் வாரியத்தின் சிறப்பான செயல்பாட்டினை உறுதி செய்வதோடு இந்த அரசுக்கு நற்பெயரை ஈட்டித்தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் முகமது ஜான் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்
12 Sep 2025புதுடெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.
-
பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில்15 - வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு: ஜனாதிபதி முர்மு பதவிப் பிராமணம் செய்து வைத்தார்
12 Sep 2025புதுடெல்லி, துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையடுத்து நேற்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் நாட்
-
ராமர் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன்: நேபாள முன்னாள் பிரதமர்
12 Sep 2025காத்மாண்டு : ராமரின் பிறப்பிடம் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன் என்று நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.
-
திருச்சியில் இன்று முதல் பிரச்சாரத்தை துவங்குகிறார் த.வெ.க. தலைவர் விஜய் மக்களை சந்திக்கிறேன் என்று அறிக்கை
12 Sep 2025சென்னை, திருச்சியில் இன்று மக்களை சந்திக்கிறேன் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
பிரதமருக்கு குங்குமம் அனுப்ப போவதாக உத்தவ் சிவசேனா அறிவிப்பு
12 Sep 2025மும்பை, பிரதமருக்கு குங்குமம் அனுப்ப போவதாக உத்தவ் சிவசேனா அறிவித்துள்ளது.
-
தமிழகத்தின் உள்ள பல்வேறு கோவில் கும்பாபிஷேகம் விழா
12 Sep 2025வேதாரண்யம், தமிழகத்தின் உள்ள பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
-
டெல்லியில் 5 பயங்கரவாதிகள் கைது
12 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தீட்டிய சதி திட்டமும் முறியடிக்கப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-09-2025.
12 Sep 2025 -
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 77 வயது மூதாட்டி
12 Sep 2025பாலக்காடு : பிளஸ்-2 தேர்வில் 77 வயது மூதாட்டி தேர்ச்சி பெற்றார்.
-
வாக்காளர் பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
12 Sep 2025சென்னை, வாக்காளர் பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல்களை ஒப்பிடும் பணியை செப்.26க்கு
-
கவின் படுகொலை இந்தியாவுக்கு அவமானம்: பிருந்தா காரத் கருத்து
12 Sep 2025நெல்லை, கவின் ஆணவ படுகொலை இந்தியாவிற்கே அவமானம் என்று மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.
-
ராணுவத்தில் இந்தியர்களைசேர்க்க வேண்டாம்: ரஷ்யாவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்
12 Sep 2025புதுடெல்லி, ரஷிய ராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பதை நிறுத்துங்கள் என்று வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
ஆசிய கோப்பை 4-வது லீக் போட்டி: ஹாங்காங்கை வீழ்த்திய வங்கதேசம்
12 Sep 2025துபாய் : வங்காளதேச அணி 17.4 ஓவர்களில் இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
8 அணிகள் பங்கேற்பு...
-
கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: அண்ணாமலை அறிவிப்பு
12 Sep 2025சென்னை : கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
கோயம்பேடு-அசோக்நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தம்
12 Sep 2025சென்னை : கோயம்பேடு-அசோக்நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.
-
உழவர்கள் நலன் காக்க ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ துவக்கம்: அமைச்சர் தகவல்
12 Sep 2025சென்னை : தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியினை மேலும் அதிகரித்து, முந்திரி சாகுபடி செய்யும் உழவர்கள், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின
-
விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க கூட்டுறவுத்துறைக்கு - நபார்டு வங்கி விடுவிப்பு
12 Sep 2025சென்னை : விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க கூட்டுறவுத்துறைக்கு ரூ.3,700 கோடியை நபார்டு வங்கி விடுவித்துள்ளது.
-
நேபாளத்தில் கலவரம்: ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய மந்திரியின் குடும்பம்
12 Sep 2025காத்மாண்டு : நேபாளத்தில் நடந்த கலவரத்தின்போது மந்திரியின் குடும்பம் ஹெலிகாப்டரில் கயிறு மூலம் தப்பியது.
-
தாமதத்தை முற்றிலும் தவிர்க்க பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பெறும் புதிய வசதி : விரைவில் அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம்
12 Sep 2025சென்னை : தாமதத்தை முற்றிலும் தவிர்க்க பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் புதிய வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
-
செல்போனில் பேசிக்கொண்டே பஸ்சை இயக்கிய டிரைவர்: பயணிகள் அச்சம்
12 Sep 2025நெல்லை : செல்போனில் பேசிக்கொண்டே அரசு பஸ்சை டிரைவர் இயக்கியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
-
2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
12 Sep 2025சண்டிகர், சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.
-
டெல்லி, மும்பை உயர்நீதிமன்றத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
12 Sep 2025புதுடெல்லி : டெல்லி, மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
-
தமிழ்நாடு அரசு சார்பில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா - நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோர் பங்கேற்பு
12 Sep 2025சென்னை : தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவ
-
நடிகை பாலியல் புகார்: சீமான் மன்னிப்பு கேட்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
12 Sep 2025டெல்லி, நடிகை பாலியல் புகார் தொடர்பாக சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அனல்மின் நிலைய கட்டுமான பணி மின்சார வாரிய தலைவர் ஆய்வு
12 Sep 2025சென்னை, எண்ணூரில் புதிதாக கட்டப்படும் அனல்மின் நிலையத்தை மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.