முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மனித முகங்களை வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்ளும் பறவை எது தெரியுமா?

மனிதர்களை அவர்களின் முகங்களை பார்த்தால் வாழ்நாள் முழுவதும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளும் பறவை எது தெரியுமா.. கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.. அது வேறு எதுவும் இல்லை... நாம் அன்றாடம் பார்க்கும் காகம் தான் அது. அது மனிதர்களின் முகத்தை ஒரு முறை பார்த்து விட்டால் தனது வாழ் நாள் முழுவதும் மறக்காமல் அடையாளம் காணும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் நம்மால் ஒரு காகத்தை ஒரு முறை பார்த்து விட்டு மீண்டும் நம் முன்னால் வந்தால் நம்மால் அடையாளம் காண முடியுமா.. நிச்சயம் முடியாது. அதே போல தன்னுடன் நட்பாக பழகும் மனிதர்களுக்காக அவை பரிசு பொருள்களை கொண்டு வந்து கொடுக்கும் பழக்கத்தையும் கொண்டிருக்கின்றனவாம்.  என்ன ஓர் ஆச்சரியம் பாருங்கள்.

நெருங்கும் ஆபத்து ...

தற்போது, வேலைப்பளு, மன உளைச்சல், தூக்கமின்மை, தவறான பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் இரவு 11 மணிக்கு மேல் தூங்கினால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் நம்மை தாக்கும் அபாயம் உள்ளது. முதலில் செரிமானக் கோளாறு, வாயு தொல்லை என தொடங்கி 35 வயதிற்கு பிறகு புற்றுநோயாகவும் மாற வாய்ப்புள்ளதாம்.

ஏலம் போனது

2-ம் உலகப்போரின் போது எத்தனையோ உயிர்களை கொல்ல ஆணையிட்ட சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி 1945-ம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஒரு பாதுகாப்பு கிடங்கு அறையில் கண்டு பிடிக்கப்பட்டது. இது தற்போது ரூ.1 கோடியே 68 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.

ஆண்டு முழுவதும் மழை பெய்யும் இடம் எது தெரியுமா?

நமக்கெல்லாம் ஆண்டில் சில மாதங்கள், வாரங்கள் மழை பெய்தாலே ஐயோ அப்பா என அலறத் தொடங்கி விடுகிறோம். ஆண்டு முழுவதும் மழை பெய்தால்.. அவ்வளவுதான்.. ஆனால் ஒரு காலத்தில் மாதம் மும்மாரி அதாவது மூன்று முறை மழை பெய்த காலங்கள் எல்லாம் இருந்தன. அதெல்லாம் ஓர் கார் காலம். சரி விஷயத்துக்கு வருவோம்... ஹவாய் தீவில் உள்ள Kauai என்ற இடத்தில் Waialeale மலைப்பிரதேசத்தில் ஆண்டு முழுவதும் மழை பெய்கிறது. அதாவது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 350 நாட்களும் மழை பெய்கிறதாம். அம்மாடியோவ்... நினைத்தாலே குளிரக்கிறது அல்லவா.

மாடலிங்கில் கலக்கும் கேரளத்து கூலி தொழிலாளி

கேரள மாநிலம் எல்லாவற்றிலும் சற்று வித்தியாசமானதுதான். தற்போது அதே கேரளாவில் தினக் கூலி தொழிலாளி ஒருவர் மாடலிங்காக மாறி கலக்கி வரும் புகைப்படங்களும், வீடியோக்களும் நெட்டை கலக்கி வருகின்றன. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் மம்மிக்கா. 60 வயதான இவர் அதே ஊரில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். பிரபல புகைப்பட கலைஞர் ஷரிக் வயலில் கண்களில் இவர் பட்டதும், இவரது தோற்றமே மாறி விட்டது. உள்ளூரில் கசங்கிய லுங்கியும், அழுக்கு சட்டையுமாக வலம் வந்த அவரை, மேக் கப் கலைஞர்ள் மூலம் அசத்தலான மாடலிங்காக மாற்றினார். கோட்டும் சூட்டும் கையில் டேப் சகிதமாக இவர் ஸ்டைலாக கேட் வாக் வரும் வீடியோக்கள் தற்போது நெட்டை கலக்கி வருகின்றன. இவரது புகைப்படங்கள் நெட்டில் வைரலாகி வருகின்றன.

இந்தியாவில் வெளியான முதல் செய்தி தாள்

இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் செய்தி தாள் எது தெரியுமா.. பெங்கால் கெசட் என்பதுதான். ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவரால் 1780 இல் தொடங்கப்பட்டது. பெங்கால் கெசட் ஒரு வார பத்திரிக்கையாக கொல்கட்டாவிலிருந்து வெளியிடப்பட்டது. இதன் முகப்பில் பிரிட்டன் ஆங்கிலத்தில் செய்திகள் இடம் பெற்றிருந்தன. இந்தியாவில் பல்வேறு தரப்பினரும் ஆங்கிலத்தில் நேரடியாக தங்களது கருத்துகளை ஆங்கிலத்தில் சுதந்திரமாக எழுதுவதற்கு இடம் அளித்தது. இதன் கடைசி பக்கங்களில் விளம்பரங்களும் இடம் பெற்றிருந்ததை காண முடிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago