முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்பாடு முதன்முதலில் எப்போது வந்தன

கேரளத்தின் வடக்கு பறவூர் சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த 1982-ல் நடைபெற்ற இடைத்தேர்தலின்போதுதான் மின்னணு வாக்கு இயந்திரங்கள் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதிலும், மிகக்குறைந்த எண்ணிக்கையிலான வாக்குச்சாவடிகளில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டில்லி ஆகிய இடங்களில் ஒரு சில தொகுதிகளில் பரிசோதிக்கப்பட்டன. முதன் முதலில் கோவா பேரவைக்கு 2003-ல் நடைபெற்ற தேர்தலில்தான் மின்னணு வாக்கு இயந்திரங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டன. அதையடுத்து, 2004-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

ஆனியும், ஆவணியும் சொன்ன சேதி

பாமா விஜயம் என்ற படம், இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கிய படம். அதில் பாடல் ஒன்றில், ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே என்று கண்ணதாசன் பாடல் எழுதியிருப்பார். அந்த பாடல் சொல்லும் சுவராஸ்யமான சேதி ஒன்று உண்டு. கண்ணதாசன் காரைக்குடி அருகே உள்ள சிறு கூடல் பட்டியில் பிறந்தவர். அந்த ஊருக்கு அருகிலேதான் நமது கோவில் நகரம் மதுரை உள்ளது. அந்த நகரில் தெற்கு ஆவணி மூல வீதி உள்ளது. அந்த வீதியில்தான் நகரின் பெரும்பாலான நகைக்கடைகள் உள்ளன. அதை குறிக்கும் வகையிலேயே கண்ணதாசன்  ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே என குறிப்பிட்டு இருப்பார். இது போன்ற எண்ணற்ற  வாழ்வியல் சுவராசியங்களை திரை மறைவு ரகசியமாக கண்ணதாசன் குறிப்பிட்டு இருப்பார்.

ஒலியை விட இருமடங்கு வேகம் கொண்ட வர்த்தக விமானங்கள்

அமெரிக்காவில் கடந்த 1976 முதல் 2003 வரை பயன்பாட்டில் இருந்த வர்த்தக விமானங்கள் ஒலியை விட இருமடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவை. உதாரணமாக நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு வெறும் 2 மணி 52 நிமிடத்தில் பறந்து செல்லும் திறன் மிக்கவையாக இருந்தன. ஆனால் இவை அதிக  விபத்துகளை சந்தித்ததுடன், விபத்தில் பயணிகள் அனைவரும் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்த விமானங்களை பயன்படுத்திக் கொள்வது நிறுத்திக் கொள்ளப்பட்டன.

அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை பாடும் நாய்கள்

பறவைகள் மட்டும்தான் பாடுமா, நாய்களில் சில இனங்களும் பாடுகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிய வகை நாய்கள் நியூ கினியாவில் உள்ள காட்டு நாய்கள் இனமாகும். இவை அழிந்து விட்டதாக கருதிய வேளையில் தற்போது அவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை பாதுகாப்பதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வீட்டு வைத்தியம்

கடுக்காய், மாசிக்காய், சுக்கு, பூண்டு போன்றவை பல் வலி, ஈறுவீக்கம் பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. கடுக்காய் அற்புதமான மருந்தாக விளங்குகிறது. துவர்ப்பு சுவை நிறைந்த இது பற்களில் ஏற்படும் பிரச்னையை குணப்படுத்துகிறது. நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை போக்கும் தன்மை உடையது. சுக்கு பற்களில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்கிறது. மாசிக்காய் பொடி மிகுந்த துவர்ப்பு சுவை உடையது. பல் வலியை சரிசெய்ய கூடியது. பூண்டு, இந்துப்பு ஆகியவையும் பல் நோய்களுக்கு மருந்தாகிறது.

செவ்வாயில் வீடு

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் ஒரு நாள் கண்டிப்பாக இக்ளூஸ் வீடுகளில் தான் வாழ்வார்கள். விண்வெளியின் உள்ள கதிர்வீச்சில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக, செவ்வாய் கிரகத்தின் அடியில் இருந்து எடுக்கப்படும் ஐஸ்-சை வைத்து மேற்பரப்பில் இந்த வீட்டை உருவாக்க உள்ளனர். இதனால் எதிர்காலத்தில் மக்கள் விண்வெளியில் வாழ்வதற்கு பூமியில் இருந்து பொருட்களை எடுத்து செல்லாமல், செவ்வாய் கிரகத்தின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி வீடுகளை அமைத்துக்கொள்ளலாம். மேலும், இந்த வீடுகள் வேலை பார்ப்பதற்கும், பொழுதுபோக்குவதற்கும், மற்றும் உணவு தயாரிப்பதற்கும் உட்பட பலவற்றிற்கும் இது உபயோகப்படும். ஒவ்வொரு வீடுகளும் 4 பேர் தங்குவதற்கு ஏற்றதாக வடிவமைக்கப்படவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago