முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கண் எரிச்சல்

கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் கண்ணெரிச்சலை போக்க, வெங்காயம் மற்றும் புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்துக் எடுத்து, பின் தலையில் தேய்த்து சிறிது நேரம் காய விட்டு, குளித்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நல்ல குளிர்ச்சியடையும்.

400 ஆண்டுகளாக செதுக்கப்பட்ட சிலைகள்

பொதுவாகவே ஒரு சிலையை வடிக்கவே பல மாதங்கள் ஏன் வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் மலையின் மீது மிக பிரமாண்டமான சிற்பங்களை வடிப்பது என்றால்... எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்... சீனாவின் ஹெனான் மாகாணத்தில் லுவோயாங்கிற்கு தெற்கே 13 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு புத்த குகை வளாகமான லாங்மென் க்ரோட்டோஸ் பண்டைய சீன சிற்ப கலையின் நேர்த்தியான பிரதிநிதித்துவத்தை எடுத்து சொல்கிறது. இங்கு மிகப் பெரிய புத்தர் சிலை 57 அடி உயரத்தில் உள்ளது. இப்பகுதியில் எழுத்துக்கள், சிற்பங்கள் பொறிக்கப்பட்ட கற்கள் 2,500 (ஸ்டெலாக்கள்), ஸ்தூபி வடிவிலான 60 பகோடாக்களும் உள்ளன.  அவற்றில் பழமையானதும் மிகப்பெரியதும் குயங்டாங் ஆகும்.  இவற்றின் கட்டுமானம் 5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பேரரசர் சியாவோன் ஆட்சியில் தொடங்கியது. ​​வெய் வம்சம் இந்த சிற்பங்களை உருவாக்கியுள்ளது. . பேரரசர் சியாவோன் புத்த மதத்தை தீவிரமாக பின்பற்றியுள்ளார். வெய் வம்சத்திற்குப் பிறகு, டாங் மற்றும் சாங் உள்பட தொடர்ச்சியாக ஆறு வம்சங்கள் மூலம் 400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குகைகளில் சிற்பங்கள் செதுக்குவது தொடர்ந்துள்ளது. கேட்கவே ஆச்சரியமாக உள்ளதல்லவா...  இதை 2000 ஆவது ஆண்டில்  உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது.

மூட்டை பூச்சிகளை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

இரவில் நமது தூக்கத்தை கெடுத்து கடும் எரிச்சலையும் மன உளைச்சலையும் கொடுப்பதுடன் நமது ரத்தத்தையும் பதம் பார்ப்பவை மூட்டை பூச்சிகள். இன்றை கால கட்டத்தில் நகர்ப்புறங்களில் மூட்டை பூச்சிகள் அருகிவிட்டாலும் (அதற்கு பதிலாக கொசுக்கள்) ஊரக பகுதிகளில் ஜாம் ஜாம் என்று வாழ்க்கை நடத்தியே வருகின்றன. இவை பூமி பந்தில் நெடுங்காலமாக உயிர்த்திருக்கும் ஜீவராசி என்றால் ஆச்சரியம் தானே... அதாவது மூட்டை பூச்சிகள் டினோசர்கள் வாழ்ந்த கால கட்டம் முதல் இந்த பூமியில் இருந்து வருகின்றனவாம்... அதாவது 115 மில்லியன் ஆண்டுகளாக வாழ்வதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பார்க்க சாதாரணமாக நமது படுக்கைகளில் காணப்படும் மூட்டை பூச்்சிகளின் வரலாறு மிகவும் சிக்கலானது என்கிறது விலங்கியல் பரிணாமவியல்... என்ன சரிதானே.

டைட்டானிக் கப்பல்

1912 -ம் ஆண்டு மூழ்கிய உலகின் பெரிய கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிகை சுற்றிப்பார்க்க இங்கிலாந்தில் செயல்பட்டுவரும் ப்ளூ மார்பிள் எனும் தனியார் சுற்றுலா நிறுவனம், ஏற்பாடு செய்து வருகிறது. கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை, அருகில் சென்று சுற்றிப்பார்க்கும்  எட்டு நாட்கள் கொண்ட இந்தப் பயணத்துக்கு கட்டணம், இந்திய மதிப்பில் 65 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்.

உப்புநீர் ஏரி

ரஷ்யா, ஈரான், துர்க்மெனிஸ்தான், அசர்பைஜான் மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகளைத் தனது எல்லைகளாகக் கொண்ட காஸ்பியன் ஏரி 3 லட்சத்து 17 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவும், 78,200 கன கி.மீ கொள்ளளவும் கொண்டது. ஏறத்தாழ 120 நதிகள் காஸ்ப்பியனை நோக்கி பாய்கின்றன. இதில் வோல்கா நதிதான் மிகப் பெரியது.

சிறுநீரகத்தை பாதுகாக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினசரி மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.  வாழைத்தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பார்லி, வெள்ளரி போன்ற காய்கறிகளைத் தவறாது வாரம் மூன்று, நான்கு நாட்களாவது சாப்பிடுவது அவசியம்.  காய்கறி, கீரைகளை நிறைய நீர்விட்டு நன்கு வேகவைத்து, நீரை வடித்துவிட்டு சாப்பிட வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago