முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அதிசய மனிதன்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரை சேர்ந்த நரேஷ்குமாரை மின்சார மனிதன் என அழைக்கிறார்கள். பசி எடுத்தால் பல்புகளை எரிய விட்டு அதன் ஒயர்களை தனது வாயில் வைத்து கொள்கிறார். இப்படி நரேஷ்குமார் 30 நிமிடங்கள் செய்தால் அவரின் பசி அடங்கி விடுகிறதாம். மேலும், தனக்கு அபூர்வ சக்தி உள்ளது என நரேஷ் நம்ப தொடங்கியுள்ளார்.

நவபாஷாண சிலைகள்

தமிழ்நாட்டில் பல கடவுள் சிலைகள் நவபாஷாணத்தால் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானவை 18 சித்தர்களுள் ஒருவராகிய போகர். போகர் கற்று வைத்திருந்த ஆயகலைகள் 64ஐயும் அவர் வேறு எவருக்காவது கற்று தந்தாரா என்றால் இல்லை என்றே தெரிகிறது. அதுகுறித்து அவர் ஓலைச் சுவடிகளில் எழுதியுள்ளதாகவும். அதை படித்து சாகாவரம் தரும் மூலிகைகளைக் கூட கண்டுபிடிக்கலாம் என்று பல முனிவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி சக்தி வாய்ந்த போகர், 64 கலைகளையும் கற்றுகொண்டு, பல்வேறு வகையான மருந்துகளையும், சகாவாரம் தரும் மூலிகைகளையும் கண்டறிந்துள்ளார். அவருக்கு கூடுவிட்டு கூடு பாயும் கலை தெரிந்திருந்ததாகவும் பல்வேறு முனிவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ட்ராபெர்ரி என்பது ஒரு தனிப்பட்ட பழம் அல்ல என்பது தெரியுமா?

ஸ்ட்ராபெர்ரி என்று நாம் சாப்பிடும் பழம், பெர்ரி வகையைச் சேர்ந்தது அல்ல. ஆனால் வாழைப்பழம் பெர்ரி வகையைச் சேர்ந்தது. சீதாப்பழம் என்பது ஒரே பழம் அல்ல. அது ஒரு கூட்டுக்கனி. Compound fruit என்பார்கள். தாவரவியல் பாஷையில் சொன்னால் கூட்டு மஞ்சரி மலர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு கனியைப் போல இவ்வாறு உருவாகியுள்ளது. ஒரே பழத்துக்குள் பல்வேறு பழங்கள் ஒட்டுமொத்தமாக பொதிந்து வைக்கப்பட்டதைப் போல காட்சியளிக்கும். அதற்கு நமது சீதா பழம் தான் மிக சிறந்த உதாரணமாகும். என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்.

பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?

பாலூட்டிகளை போல அல்லாமல், பெரும்பாலான பறவைகளுக்கு சிறுநீர் பைகள் கிடையாது. கழிவுகளை வெளியேற்ற சிறுநீரை வெளியேற்றுவதை காட்டிலும் குழம்பு வடிவிலான எச்சத்தை அவை கழிவாக வெளியேற்றி விடுகின்றன. அதே நேரத்தில் தீக்கோழிகள் மற்ற பறவைகளிடமிருந்து சற்றே மாறுபடுகின்றன. அவைகளுக்கும் சிறு நீர் பைகள் இல்லை என்ற போதிலும், பாலூட்டி விலங்கினங்களைப் போலவே தீக்கோழியும் சிறுநீரையும், எச்சத்தையும் முற்றிலும் தனித்தனியாக பிரித்து வெளியேற்றுகின்றன என்பது ஆச்சரியம் தானே..

மூட நம்பிக்கை

மும்பை, பைகுலாவில் உள்ள மிருக காட்சி சாலையில் மலைப்பாம்புகள் இருக்கின்றன. பாம்புகள் படுத்துக்கிடக்க செயற்கை பாறைகளால் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் காசுகளை பாம்பின் மீது காசுகளை வீசுவது தெரிந்தது. காசை மலைபாம்பு மீது எறிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். வாழ்க்கை சூப்பராக இருக்கும் என்பதால் அப்படி செய்கிறார்களாம்.

ஏ.கே.47 துப்பாக்கி எப்படி கண்டுபிடிக்கப்பட்டது

இன்றைய போர்ப்படை ஆயுதங்களில் ஏ கே 47 வகைத் துப்பாக்கியும் ஒன்றாகும். இந்த ஆயுதம் தற்போது எல்லா நாடுகளிலும் கிடைக்கிறது. இதன் பயன்பாட்டைப் பற்றிச் சிறுவர்கள் உட்பட அனைவரும் அறிந்து வைத்துள்ளனர் எனில் அது மிகையன்று. தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் ஆகியோரிடம் இதன் புழக்கம் மிகவும் அதிகம் எனலாம். சோவியத் நாட்டைச் சார்ந்த போர்ப்படை அதிகாரி மிகைல் கலாஷ் நிகாவ் என்பவர் 1947இல் இதனைக் கண்டுபிடித்தார். ரஷ்யா தன்னைச் சுற்றியுள்ள பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காபாற்றத் தகுதி வாய்ந்த ஆயுதம் ஒன்றைக் கண்டுபிடிக்க முனைந்தது. அப்போது தானியங்கித் துப்பாக்கி ஒன்றைக் கண்டறிவதில் கலாஷ்நிகாவ் ஈடுபட்டார். தேவையான இலக்கை நோக்கிச் சுடுவதில் அப்போதிருந்த கைத்துப்பாக்கி வெற்றிகரமாக அமையவில்லை. இதன் காரணமாக உருவானதுதான் ஏ.கே.47 வகைத் துப்பாக்கி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago