முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மை, India Ink

சீன தத்துவவாதியான டியன் சியு (Tien Lcheu) என்பவர் கி.மு. 2697-ஆம் ஆண்டில் கார்பன் நிறமி (Carbon Black) புகைக்கரி (பைன் மர துண்டுகளை) எரித்து கிடைக்கப்பெற்றது), இறைச்சி கொழுப்பு (விலங்குகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட Gelatin Bone Clue), ஆகியவற்றுடன் விளக்கு எண்ணெய்யையும்  சேர்த்து ஆட்டு உரலில் இட்டு அரைத்து அடர் கருப்பு நிறத்தை உடைய எழுதுவதற்கான திரவத்தை தயாரித்தார். இது தான் உலகில் முதன் முதலில் எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட மை ஆகும். உலகிலேயே முதன் முதலாக எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட இந்த மை-க்கு அதை தயாரித்த டியன் சூட்டிய பெயர் என்னவென்று தெரியுமா 'இந்தியா இங்க்" (India Ink). சீனாவில் கண்டறியப்பட்ட மைக்கு ஏன் இந்தியா இங்க் என்று பெயரிட்டார் என்று கேட்கிறீர்களா... மை தயாரிக்க தேவைப்பட்ட முக்கிய மூலப்பொருளான கார்பன் நிறமி (Carbon Black) இந்தியாவில் இருந்துதான் சீனாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில்தான் டியன், தான் தயாரித்த உலகின் முதல் மைக்கு இந்தியா இங்க் என்று பெயரிட்டார்.

பாறைகளை விழுங்கும் டைனோசர்கள்

டைனோசர் என்ற பிரம்மாண்டமான அரிய வகை விலங்கு ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்து வந்தனர் கால ஓட்டத்தில் அவை அழிந்து விட்டன அவற்றில் சில விசேஷ குணங்களை கொண்ட டைனோசர்களும் காணப்பட்டன அதில் குறிப்பாக சில வகை டைனோசர்கள் பெரிய பாறைகளைக் கூட அப்படியே விழுங்கி விடுமாம் ஏன் தெரியுமா?  அவற்றின் வயிற்றில் உள்ள இரைப்பையில் காணப்படும் கடினமான உணவுகளை செரிமானம் செய்வதற்கு உதவியாக அவை இவ்வாறு பாறைகளை விட்டுவிடுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

2 டம்ளர் போதும்

ரத்த அழுத்தம் சீராக, அதிக உடல் எடையை விரைவில் குறைக்க, வாயுத் தொல்லையிலிருந்து விடுபட, உடலில் இன்சுலின் அளவு சீராக, மலச்சிக்கல் பிரச்சினை இவை அனைத்தும் நீங்க, நாம் தினமும் எழுந்ததும் வெறும் 2 டம்ளர் தண்ணீர் குடித்தாலே போதும்.

குட்டித் தூக்கம்

பரபரப்பான வேலைக்கு நடுவே மூளைக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுத்தால் அதாவது குட்டித்தூக்கம் போட்டால் புத்துணர்ச்சியை பெறலாம். தொடர்ந்து வேலை செய்யாமல் நடுவில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதால் நினைவுத் திறன் அதிகரிக்கும். குட்டித்தூக்கம் மூலமாக மன அழுத்தம் குறையும். மேலும், ஸ்ட்ரெஸை எளிதாக நம்மால் கையாள முடியும்.

ஈஸ்டர் தீவில் அணிவகுத்து நிற்கும் மோவாய் சிற்பங்கள்

உலகம் முழுவதும் வரலாற்றில் கண்டறிய முடியாத ஆச்சரியங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் ஈஸ்டர் தீவில் உள்ள மோவாய் சிற்பங்கள். இவை கிபி 1250 முதல் 1500 கால கட்டமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ராபா நூய் மக்களால் உருவாக்கப்பட்ட இந்த கல் சிற்பங்கள் சுமார் 10 மீ உயரம் கொண்டவை. சுமார் 900 சிலைகள் அணிவகுப்பாக அங்கு நிறுவப்பட்டுள்ளன. இவை எதற்காக நிறுவப்பட்டன என்பது மர்மமாகவே உள்ளது. அதே போல, இத்தனை பெரிய சிலைகளை அக்காலத்தில் எவ்வாறு அந்த மக்கள் கொண்டு வந்து நிறுவினர் என்பதும் இன்று வரை பிடிபடாத ஆச்சரியங்களில் ஒன்றாகவே உள்ளது.

வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் தங்கும், வெள்ளை மாளிகை சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் ஆறு தளங்களில், 132 அறைகள், 35 குளியலறைகள், 412 கதவுகள், 147 ஜன்னல்கள், 8 மாடிப் படிகள், 3 மின் தூக்கிகள் உள்ளன. அதிபருக்கு சமைப்பதற்காகவே 5 சமையல் கலைஞர்கள் எப்போதும் பணியில் இருப்பார்களாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago