முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

விண்வெளியில் இன்னொரு பூமி

இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட்ஷைர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சூரிய குடும்பத்துக்கு வெளியே 816 நட்சத்திரங்களைக் கொண்ட சூரியகுடும்பத்தைப் போன்றதொரு நட்சத்திர குடும்பத்தினைக் கண்டறிந்துள்ளனர். இந்த நட்சத்திரங்களில் பாதியளவுக்கு புதிய நட்சத்திரங்கள். அவற்றில் பெரும்பாலானவை உயிர்வாழ உகந்ததாக உள்ளதாம்.கடந்த 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக அகச்சிவப்பு கதிர்கள் கேமிரா மூலம் ஆய்வு செய்து வந்த ஆய்வாளர்கள் குழு, பூமி போன்றே உயிர்வாழ உகந்த சூழல் நிலவும் நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் அந்த நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

முதன் முதலில் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்

சிறைச்சாலைகள் பலவிதம் உண்டு, அதில் ஒரு விதம் தான் வீட்டுச்சிறை. முதன்முதலில் 'வீட்டுச்சிறை' வைக்கப்பட்டவர் ஈராக்கை சேர்ந்த விஞ்ஞானி அல்-ஹாத்திம். கி.பி.1011-ம் ஆண்டு எகிப்தில் வாழ்ந்த போது, மன்னரை குறித்து அவமதித்து பேசியதற்காக கிபி 1021 வரை வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வீட்டுச்சிறையில் அகப்பட்டுக் கொண்ட இன்னொரு விஞ்ஞானி கலிலியோ. பூமி தான் சூரியனை சுற்றி வருகிறது என்கிற அறிவியல் உண்மையை சொன்னதற்காக தண்டிக்கப்பட்டார்.தற்போது வீட்டுச் சிறை முறையை அதிகம் பயன்படுத்தும் நாடு இத்தாலி. அந்நாட்டில் கைதிகள் தண்டனை முடியும் நிலையில் இருந்தாலோ, உடல்நலக்குறைவாக இருந்தாலோ கைதிகளை வீட்டுச்சிறைக்கு மாற்றி விடுவார்கள். நியூசிலாந்தில் 2 வருடங்களுக்கு குறைவான தண்டனை பெற்ற கைதிகளை வீட்டிலேயே சிறை வைக்கிறார்கள்.வீட்டுச்சிறையில் அடைபட்டு உலகப்புகழ் பெற்றவர் மியான்மர் நாட்டை சேர்ந்த ஆங்சான் சூகி. காஷ்மீர் பிரிவினையை தூண்டியதற்காக வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்  ஷேக் அப்துல்லா. அவர் அடைக்கப்பட்ட இடம் கொடைக்கானல். பாகிஸ்தானில் பூட்டோ, நவாஸ் ஷெரீப், இம்ரான் கான் உள்ளிட்டோரும் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்காலத்தில் இந்த பட்டியல் இன்னும் நீளமானது.

சிவப்பு செவ்வாய்

சூரியனில் இருந்து 4-வதாக இருக்கும் செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் புயலால் மேற்பரப்பில் இருக்கும் சிவப்பு மாசை வளிமண்டலத்தில் நிரப்பிவிடும்.அங்கு, ஈர்ப்பு விசை குறைவு காரணமாக, இந்த மாசுத் துகள்கள் நீண்ட நாட்களுக்கு அப்படியே பரவியிருக்கும். இதனாலேயே செவ்வாய் கோள் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

உலகிலேயே வெள்ளி காசை விட மிகச்சிறிய உருவம் கொண்ட வவ்வால்

உலகிலேயே மிக சிறிய வவ்வால் இனங்கள் காணப்படுகின்றன. இவை சாதாரண வெள்ளி காசுகளை காட்டிலும் உருவத்தில் சிறியவை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கிட்டிஸ் ஹாக் நோஸ் வவ்வால் அல்லது பம்பிள்பீ வவ்வால் என இவை அழைக்கப்படுகின்றன. இவற்றின் எடை 2 கிராமுக்கும் சற்று குறைவுதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அழிந்து வரும் அரிய வகை இனமான இந்த வவ்வால்கள் பொதுவாக தாய்லாந்து, மியான்மர் நாடுகளில் காணப்படுகின்றன. ஆற்றங்கரையோாரம் உள்ள பாறைகளின் குகைகளே இவைகளின் வசிப்பிடங்களாகும். இவை கூட்டம் கூட்டமாக வசிக்கக் கூடியவை. ஒரு கூட்டத்தில் சுமார் 100 வவ்வால்கள் வரை காணப்படும்.

பிரபலமான பீட்டில்ஸ் இசை குழுவினருக்கு இசை தெரியாது

உலக அளவில் புகழ் பெற்ற இசைக்குழுவினர்களில் பீட்டில்ஸ் குழுவினருக்கு முதலிடம் உண்டு. ராக் இசை குழுவினரான இவரது பாடல்கள் ஒரு காலத்தில் இசை ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்து கொண்டிருந்தது. உலகம் முழுவதும் தங்களது இசைக்கு மகுடிக்கு மயங்கிய பாம்பு போல மயங்க வைத்தனர். ஆனால் இந்த குழுவில் உள்ள யாரும் முறைப்படி இசை கற்றுக் கொண்டது கிடையாது. இசையை எழுதவோ, படிக்கவோ அவர்களுக்கு தெரியாது.  இதை அக்குழுவில் உள்ள முக்கிய இசைஞர் பால் மெக்கார்டினி கடந்த 2018இல் ஒரு பேட்டியின் போது வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். எங்கள் கற்பனையில் தோன்றியதை மட்டுமே நாங்கள் பாடி வந்தோம். இதை கேட்டு இசை ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

அன்னை தெரசா அணிந்திருந்த சேலைக்கு அறிவுசார் சொத்துரிமை உள்ளது தெரியுமா?

அல்பேனியாவில் பிறந்து கிறிஸ்துவத்தை பின்பற்றிய அன்னை தெரசா கொல்கத்தாவில் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியை தொடங்கி ஏழைகளுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து வந்தார். அவர் அணிந்திருந்த வெள்ளை நிறமும், ஓரத்தில் 3 நீல நிற கரையும் கொண்ட சேலை அவரது அடையாளமாகவே மாறின. பின்னர் அவரை பின்பற்றி அந்த சாரிட்டியில் உலகம் முழுவதும் பணியாற்றி வரும் கன்னியாஸ்திரிகளும் அந்த புடவையையே சீருடையாக ஏற்று அணிந்து வருகின்றனர். இந்த தனித்தன்மை வாய்ந்த  புடவையின் டிசைனை அன்னை தெரசா தான் உருவாக்கினார். தற்போது அதற்கு அறிவுசார் சொத்துரிமை அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதை யாரும் வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது என அந்த அறக்கட்டளை கேட்டுக் கொண்டுள்ளது. லாப நோக்கம் அற்ற பொது சேவைகளுக்கு மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்