முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிபோதையில் மனைவி மீது தாக்குதல்: கிரிக்கெட் வீரர் காம்ப்ளிக்கு நேரில் ஆஜராக பாந்த்ரா போலீஸ் நோட்டீஸ்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      விளையாட்டு
compli 2023 02 05

Source: provided

மும்பை : குடிபோதையில் மனைவியை தாக்கிய புகாரில் கிரிக்கெட் வீரர் காம்ப்ளி நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி பாந்த்ரா போலீஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பாந்த்ரா, மராட்டியத்தின் பாந்த்ரா (மேற்கு) பகுதியில் உள்ள பிளாட் ஒன்றில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், காம்ப்ளி மீது அவரது மனைவி ஆண்ட்ரியா போலீசில் புகார் அளித்து உள்ளார். அதில், காம்ப்ளி வீட்டில் நன்றாக குடித்து விட்டு, போதையில் இருந்து உள்ளார். அப்போது, மனைவியை பார்த்து, தகாத வார்த்தைகளால் திட்டியபடி இருந்து உள்ளார். 

இதனை அவரது 12 வயது மகன் உடன் இருந்து பார்த்த சாட்சியாக உள்ளார். இதன்பின், காம்ப்ளி சமையலறைக்கு உள்ளே சென்று சமையல் செய்ய உபயோகப்படும் பாத்திரம் ஒன்றின் கைப்பிடியை எடுத்து வந்து மனைவி மீது வீசி இருக்கிறார். இதில், மனைவியின் தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, ஆபத்து விளைவிக்கும் ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், அவமதிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாந்த்ரா போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து