முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் எச்சரிக்கை எதிரொலி: இஸ்ரேல் ராணுவம் உஷார் நிலை

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2024      உலகம்
Israel-Army 2024-04-12

Source: provided

ஜெருசலேம் : தாக்குதல் நடத்தப் போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் தனது படைகளை உஷார்படுத்தி உள்ளது.  

இஸ்ரேல் ராணுவம் காசா மீது நடத்தும் தாக்குதல் பிராந்திய அளவிலான பதற்றத்தை தூண்டி உள்ளது. குறிப்பாக, இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஆதரவு அமைப்புகள் களமிறங்கி உள்ளதால் இஸ்ரேல்- ஈரான் இடையே மோதல் உருவாகி உள்ளது. 

இதற்கிடையே சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரக வளாகம் கடந்த 1-ம் தேதி குண்டு வீசி தாக்கப்பட்டது. இதில் தூதரகத்தில் இருந்த ஈரான் ராணுவத்தை சேர்ந்த 2 முக்கிய தளபதிகள் உள்பட 7 பேர், சிரியாவை சேர்ந்த 4 பேர், ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் என 12 பேர் கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது குற்றம்சாட்டி உள்ள ஈரான், பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தது. ஆனால் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அத்துடன் ஈரான் நாட்டில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டால் ஈரானை நேரடியாக தாக்குவோம் என  இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். 

அத்துடன் ஈரான் தாக்குதலை முறியடிக்கும் வகையில் இஸ்ரேல் தனது வான் பாதுகாப்பை பலப்படுத்தியது. போர் முன்களப் பகுதிகளில் பணியாற்றும் வீரர்களுக்கான விடுமுறையை நிறுத்தி வைத்துள்ளது. 

இந்த நிலையில் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தப் போவதாக ஈரான் அச்சுறுத்துகிறது என அமெரிக்க அதிபர் ஜோபைடன் கடந்த 10-ம் தேதி தெரிவித்து இருந்தார். காசாவில் இஸ்ரேலின் ராணுவ செயல்பாடுகள் மீதான அதிருப்தி இருந்தபோதிலும், தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார். 

ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு இரும்பு கவசம் போன்று ஆதரவை அளிப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பைடன் கூறியிருக்கிறார். 

இதையடுத்து இஸ்ரேல் தனது படைகளை உஷார்படுத்தி உள்ளது. மத்திய இஸ்ரேலில் உள்ள விமான தளத்திற்கு சென்ற நெதன்யாகு, பல முனைகளில் இருந்து வரும் சவால்கள் மற்றும் அவற்றை சமாளிக்கும் விதம் குறித்து அதிகாரிகளிடம் பேசினார். 

காசாவில் முழு வீச்சில் நீடிக்கும் போரின் நடுவில், மற்ற பகுதிகளில் இருந்து வரும் சவால்களை எதிர்கொள்ளவும் தயாராகி வருகிறோம் என நெதன்யாகு கூறியிருக்கிறார். இந்நிலையில், மோதலை தவிர்க்கும்படி பிற நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஈரானும் இஸ்ரேலும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என ரஷ்யா கேட்டுக் கொண்டுள்ளது. 

பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும்படி ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னாலெனா பேர்பாக் வலியுறுத்தினார். இதே போல் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கூறியுள்ளனர். 

அப்போது, தூதரக அதிகாரிகள் மற்றும் தூதரகங்களின் பாதுகாப்பை இஸ்ரேல் மீறும் போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதை கண்டிக்க தவறினால், எங்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு அவசியம் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.  இவ்வாறு இரு தரப்பிலும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் போர் பதற்றம் உருவாகி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து