எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Dhoni 2023-10-03](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/04/19/Dhoni_2023-10-03.jpg?itok=eVNb3Wj4)
Source: provided
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், லக்னோவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதுகின்றன. இந்த ஆட்டம் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கே வருகை தரும் எம்.எஸ். டோனிக்கு எதிரணி என்று பார்க்காமல் லக்னோ அணி நிர்வாகம் சார்பில் முக்கிய இடங்களில் சாலை ஓரங்களில் பெரிய பேனர்கள் வைத்து வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு பேனரில் "எங்களுக்கு டோனி சிறப்பாக விளையாட வேண்டும். அதே சமயம் போட்டியில் லக்னோ வெற்றி பெற வேண்டும்" என்று எழுதப்பட்டுள்ளது. அதேபோல மற்றொரு பேனரில் "எங்களுக்கு கடைசி பந்தில் டோனி சிக்சர் அடிக்க வேண்டும். ஆனால் அப்போது வெற்றி பெறுவதற்கு கடைசி பந்தில் 12 ரன்கள் தேவையாக இருக்க வேண்டும்" என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் அந்த 2 பேனர்களின் அடியில் "34வது லீக் போட்டி என்பது 3 மற்றும் 4 சேர்ந்த 7வது நம்பரை குறிக்கிறது. அதற்கு காரணம் தல (டோனியின் ஜெர்சி எண்)" என்றும் எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் எதிரணியாக இருந்தாலும் டோனி நன்றாக விளையாட வேண்டும் என்று மிகவும் மதிப்பளித்து லக்னோ நிர்வாகம் கொடுத்துள்ள இந்த வரவேற்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
_____________________________________________________
பஞ்சாப் வீரருக்கு பாராட்டு
ஐபிஎல் போட்டியின் 33-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வியாழக்கிழமை வென்றது. 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. 19.1 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் எடுத்து, 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பஞ்சாப் அணி வீரர் ஆசுதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் அடித்து மும்பைக்கு பயத்தை காட்டினார். இதில் 2 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் பும்ராவின் யார்க்கர் பந்தினை ஸ்வீப் ஷாட் அடித்தார். இந்த சிக்ஸரை குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.
பஞ்சாப் அணிக்கு ரூ.20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவர் விளையாடிய நான்கு போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளார். 4 போட்டிகளில் 156 ரன்கள் 205 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார். சராசரி 52 என்பது குறிப்பிடத்தக்கது. ஆசுதோஷ் சர்மாவின் ஐபிஎல் இன்னிங்ஸ்: குஜராத் அணிக்கு எதிராக 31 (17), சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக 33* (15).ராஜஸ்தான் அணிக்கு எதிராக 31 (16), மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 61 (28)
_____________________________________________________
பும்ராவுக்கு இயன் பாராட்டு
நடப்பு ஐ.பி.எல்.லில் மும்பையின் இந்த 3 வெற்றிக்கும் அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவே காரணம் என்று சொல்லலாம். அந்த அணியின் மற்ற பவுலர்கள் எல்லாம் ரன்களை வாரி வழங்கி வர, அவர் மட்டுமே சிக்கனமாக பந்து வீசுவது மட்டுமின்றி முக்கியமான தருணங்களில் விக்கெட்டும் வீழ்த்தி வருகிறார். குறிப்பாக பெங்களூரு அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா, நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் 3 முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தி அணி வெற்றி பெற உதவினார். இதன் மூலம் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் நடப்பு ஐ.பி.எல். சீசனில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்து வீச்சாளர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
இந்நிலையில் வேகப்பந்து வீச்சில் பிஎச்டி என்னும் பட்டம் இருந்தால் அதை பும்ராவுக்கு கொடுக்கலாம் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இயன் பிஷப் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. "ஒருவேளை ஜஸ்பிரித் பும்ராவை "வேகப்பந்து வீச்சாளர் பிஎச்டி" எனும் பட்டத்தின் வாயிலாக அபிஷேகம் செய்ய முடிந்தால் அதை நான் செய்வேன். அவர் ஒரு அற்புதமான பவுலர். பல்வேறு நாடுகளில் அனைத்து மட்டங்களிலும் ஆர்வத்துடன் இருக்கும் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அவர் பந்து வீச்சு பற்றிய விரிவுரைகளை நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்காக அவர் ஓய்வு பெறும் வரை நான் காத்திருக்க மாட்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.
_____________________________________________________
வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக ஆடிய கேப்டன் ஹேலி மேத்யூஸ் 140 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் சாடியா இக்பால், துபா ஹாசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 270 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 35.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 113 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக துபா ஹாசன் 25 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹேலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.
_____________________________________________________
வருத்தம் அளிக்கிறது: சாம் கர்ரன்
மும்பைக்கு எதிரான தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரன் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஒரு போட்டியை நெருங்கி வந்து தோற்றுள்ளோம். இந்த ஆட்டம் மிக நெருக்கமாக வந்தது. ஆனாலும் வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியை தழுவியது வருத்தம் அளிக்கிறது. அசுதோஷ் சர்மாவின் ஆட்டம் இந்த போட்டியிலும் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பாக இருந்தது. உண்மையிலேயே இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. இது போன்ற நெருக்கமான போட்டிகளில் தோல்வியை சந்தித்தால் அதை ஏற்றுக்கொள்ள நேரம் பிடிக்கும். ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா ஆகியோர் முழு அர்ப்பணிப்புடன் போராடினர். அவர்களது நம்பிக்கை நம்ப முடியாத வகையில் இருந்தது.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கூட அசுதோஷ் சர்மா ஸ்வீப் ஷாட்டுகளின் மூலம் பெரிய பெரிய சிக்ஸர்களை அடிக்கிறார். அவரது ஆட்டத்தை பார்க்க நன்றாக இருக்கிறது. இருந்தாலும் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்ததில் வருத்தமே. எங்களது அணியில் உள்ள சில குறைகளை நீக்கிவிட்டு நாங்கள் தேவையான இடத்தில் எங்களை பலப்படுத்திக் கொண்டால் நிச்சயம் வெற்றி பாதைக்கு திரும்ப முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முக்கோண உருளைக்கிழங்கு நக்கெட்ஸ்![]() 2 days 18 hours ago |
கடாய் பன்னீர்![]() 6 days 21 hours ago |
சூப்பர் ஸ்நாக்ஸ்![]() 1 week 2 days ago |
-
டி-20 தொடர் இன்று ஆரம்பம்: இந்தியா-இலங்கை அணிகள் முதல் போட்டியில் மோதல்
26 Jul 2024பல்லகெலே : டி-20 தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
-
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர்திறப்பு வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக உயர்வு: கிடுகிடுவென அதிகரிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்
26 Jul 2024மேட்டூர், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
குற்றவியல் துறை இயக்குநர் நியமனம்: எடப்பாடி கண்டனம்
26 Jul 2024சென்னை : தமிழக குற்றவியல் துறை இயக்குநராக ஹசன் முகமது ஜின்னா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விஷ சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
26 Jul 2024சென்னை : விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாயை அரசு வழங்கக்கூடாது எனக்கூறி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளத
-
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி
26 Jul 2024சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்று வர மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
-
கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார்: ஒபாமா
26 Jul 2024நியூயார்க் : கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார் என்ற முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
-
கார்கில் வெற்றி தினம்: முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பெருமிதம்
26 Jul 2024சென்னை : கார்கில் வெற்றி தினத்தில் வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் : ஷூப்மன் கில் தகவல்
26 Jul 2024மும்பை : அடுத்து வரும் டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் என்று இந்திய டி-20 அணியின் ஷூப்மன் கில் தெரிவித்துள்ளார்.
-
வங்கக்கடலில் புதிய தாழ்வுப்பகுதி: நீலகிரி, கோவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
26 Jul 2024சென்னை : வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லியில் தமிழ்நாடு இல்ல புதிய கட்டிடங்கள் : முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
26 Jul 2024சென்னை : டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ரூ. 257 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது.
-
பேரனை பள்ளிக்கு அழைத்து சென்ற நடிகர் ரஜினிகாந்த் : இணையத்தில் புகைப்படங்கள் வைரல்
26 Jul 2024சென்னை : பேரனை பள்ளிக்கு அழைத்துச் சென்ற நடிரக் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
-
தமிழக அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயம் ஆகாது : போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி
26 Jul 2024திருப்பத்தூர் : வெளியாகும் செய்தி முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ல போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தமிழக அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயம் ஆகாது என்று உறுதிப
-
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி
26 Jul 2024புதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் விவாதங்களை கேட்க மறுப்பதாக கூறி நேற்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
-
காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், வாக்கெடுப்புக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
26 Jul 2024சென்னை : காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் வாக்கெடுப்புக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
பொருநை அருங்காட்சியக பணி விரைவில் முடிந்து திறக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்பார்ப்பு
26 Jul 2024சென்னை : கீழடி மற்றும் ஒளிரும் திருமலை நாயக்கர் அரண்மனை போல், நெல்லையில் உள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறக்கும் பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக
-
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் : எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிப்பு
26 Jul 2024டெல்லி : பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர்.
-
இன்று ஆடிக்கிருத்திகை: திருத்தணியில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை ரூ.100 ஆக குறைப்பு: அமைச்சர் சேகர்பாபு
26 Jul 2024சென்னை : இன்று ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருத்தணியில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை ரூ.
-
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 628 புலிகள் உயிரிழப்பு: அரசு தகவல்
26 Jul 2024புதுடெல்லி : இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் இயற்கை காரணங்களுக்காகவும், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் கீர்
-
ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் மத்திய பா.ஜ.க. அரசு : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
26 Jul 2024சென்னை : ஓரவஞ்சனையின் மொத்த வடிவம்தான் மத்திய பா.ஜ.க. அரசு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
சவுக்கு சங்கர் ஆட்கொணர்வு வழக்கு: விசாரணையில் இருந்து விலகுவதாக ஐகோர்ட் நீதிபதிகள் அறிவிப்பு
26 Jul 2024சென்னை : யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக ஐகோர்ட் நீதிபதி எம்.எஸ்.
-
பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: தமிழகம் முழுவதும் இன்று காங்கிரசார் போராட்டம்: செல்வப்பெருந்தகை
26 Jul 2024சென்னை : மத்திய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி, தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து இன்று சனிக்கிழமை தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்த
-
இலங்கை அதிபர் தேர்தல் செப். 21- ல் நடைபெறும் : ஆக. 15 முதல் மனு தாக்கல்: ஆணையம் அறிவிப்பு
26 Jul 2024கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ல் நடைபெறும் என்றும் ஆகஸ்ட் 15 முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அற
-
அரசுப்பள்ளிகளில் உள்ள சாதி பெயரை நீக்குங்கள் : சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
26 Jul 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அதை நீக்குங்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
-
காசா விவகாரத்தில் அமைதியாக நான் இருக்கப்போவதில்லை : கமலா ஹாரிஸ் எச்சரிக்கை
26 Jul 2024வாஷிங்டன் : காசா விவகாரத்தில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை என்று அமெரிக்க தேர்தல் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப்
-
4-வது நாளாக குறைந்தது தங்கம் விலை
26 Jul 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320-க்கு விற்பனையானது. 4 நாள்களில் ரூ.3,160 குறைந்துள்ளது.