எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை,ஏப்.17 - சித்திரை திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வான மதுரை மீனாட்சிக்கு நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கல்யாண காட்சியை தரிசித்தனர். உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் தினந்தோறும் வந்து தரிசனம் செய்கிறார்கள். தற்போது இந்த கோவிலுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. கோவிலின் திருவிழாக்களில் சித்திரை திருவிழாவும்,திருக்கல்யாணமும் உலக பிரசித்தி பெற்றதாகும். மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 7 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த வியாழக்கிழமை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. நேற்று முன்தினம் திக் விஜயம் நடைபெற்றது. தினமும் பல்வேறு வாகனங்களில் சாமியும் அம்மனும் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருவிழாவின் 10 ம் நாளான நேற்று மாணிக்க மூக்குத்தி மீனாட்சிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. காலை 10.30 மணியில் இருந்து 10.59க்குள் மிதுன லக்னத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருக்கல்யாணத்திற்காக சுந்தரேசுவரரும், ப்ரியாவிடையும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு நான்கு சித்திரை வீதிகளில் உலா வந்தனர். முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடினர். அதிகாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் முருகனும், பவளக்கனிவாய் பெருமாளும் எழுந்தருளினர். மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட வடக்காடி வீதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு காலை 10.30 மணிக்கு சுவாமி, ப்ரியாவிடை, மீனாட்சி அம்மன் வந்தனர். இதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் இருந்து வந்த முருகப்பெருமானும், பவளக்கனிவாய் பெருமாளும் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.
குலசேகரபட்டர் வழி சிவச்சாரியார் சுந்தரேசுவரராகவும், உக்கிரபாண்டி பட்டர் வழிச்சிவாச்சாரியார் மீனாட்சியாகவும் வேடம் அணிந்து கல்யாணத்தை நடத்தினர். மீனாட்சி அம்மன் சார்பாக உள்ள சிவாச்சாரியார் சுவாமிக்கு பாதபூஜை செய்தார். பின்னர் காப்புகட்டிய கணேஷ்பட்டர் விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், பஞ்சகவ்யம், கலசபூஜைகள் செய்தார். பாலிய பூஜை, ஹோமம், மாங்கல்யபூஜை போன்றவை நடைபெற்றது. சுவாமி,ப்ரியாவிடை, மீனாட்சிக்கு காப்பு கட்டும் வைபவம் நடைபெற்றது. இதன்பிறகு சுவாமியும், அம்பாளும் மூன்று முறை மணவறையை சுற்றி வந்து மாலை மாற்றிக்கொண்டனர். சுவாமி, ப்ரியாவிடைக்கும், மீனாட்சிக்கும் பட்டு வஸ்திரமும், பட்டு சேலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எப்போது மாங்கல்ய நாண் பூட்டு நிகழ்ச்சி நடைபெறும், அந்த கண்கொள்ளா காட்சியை காண்போம் என்ற பேராவலில் இருந்த பக்தர்களின் கண்களுக்கு இனிய நிகழ்வாக, மேளம் தாளங்கள் முழங்க, வேதமந்திரங்கள் விண்ணை பிளக்க 10.55 மணிக்கு மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சியின் கழுத்தில் சுந்தரேசுவர கடவுள் மங்கள நாணை பூட்டினார். அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாயே, மீனாட்சியே காப்பாற்ம்மா என்று உள்ளம் உருக வேண்டிக்கொண்டனர்.
இதை தொடர்ந்து திருக்கல்யாணத்தை காணவந்த பெண்கள் தங்கல் அணிந்திருந்த திருமாங்கல்யத்தை எடுத்து புதிய மஞ்சள் கயிற்றில் கோர்த்து கழுத்தில் அணிவிந்து கொண்டனர். சில தம்பதியினர் தனது கணவனின் கையில் புதிய திருமாங்கல்யத்தை கொடுத்து அணிவிக்கச்செய்தனர். திருக்கல்யாணம் முடிவடைந்ததும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதன் பிறகு மீனாட்சியும், சுந்தரேசுவரரும் தம்பதியர் சகிதமாக ஊர்வலமாக புறப்பட்டு கோவிலுக்குள் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். இங்கும் மாலை வரை ஏராளமான பக்தர்கள் வந்து கல்யாண கோலத்தில் இருந்த அன்னையையும், அப்பனையும் தரிசித்து சென்றனர். திருக்கல்யாணத்தையொட்டி கோவிலுக்குள் சுமார் 5 ஆயிரம் பேருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மேலும் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் சுமார் 20 ஆயிரம் பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்பட்டது.
மீனாட்சி திருக்கல்யாணத்தை காண சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்குள் திரண்டனர். ஆடிவீதி முழுவதிலும் பெரிய டிவிக்கள்வைக்கப்பட்டு திருக்கல்யாண காட்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருக்கல்யாணம் முடிந்து நேற்று மாலை அம்மனும், சாமியும் பூப்பல்லக்கில் எழுந்தருளினர். இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. சிறிய தேரில் மீனாட்சியும், பெரிய தேரில் சுந்தரேசுவரும், ப்ரியாவிடையும் எழுந்தருளுகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-08-2025.
23 Aug 2025 -
கொலம்பியாவில் லாரி வெடிகுண்டு, ஹெலிகாப்டர் வெடித்து 17 பேர் உயிரிழந்தனர்
23 Aug 2025காலி : கொலம்பியாவில் லாரி வெடிகுண்டு, ஹெலிகாப்டர் வெடித்து 17 பேர் பலி
-
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: ரணில் கைதுக்கு ராஜபக்ச கண்டனம்
23 Aug 2025இலங்கை : இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
-
தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் விவகாரம்: நயினார் நாகேந்திரன்
23 Aug 2025சென்னை : தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
-
அனில் அம்பானி இடங்களில் சோதனை
23 Aug 2025புதுடெல்லி, பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.2,000 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்
-
சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரெயில் டெல்லிக்கு புறப்பட்டது
23 Aug 2025சென்னை : சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரெயில் டெல்லிக்கு புறப்பட்டது.
-
வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்
23 Aug 2025சென்னை : வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
-
எடப்பாடி பழனிசாமியின் 4-ம் கட்ட பிரசார சுற்றுப்பயணம்: வரும் செப். 1 முதல் தொடக்கம்
23 Aug 2025சென்னை : அ.தி.மு.க.
-
ஆஸ்திரேலியா பந்துவீச்சை பார்த்து கற்றுக்கொண்டேன்: லுங்கி இங்கிடி
23 Aug 2025டெல்லி : ஆஸ்திரேலியா பந்துவீச்சை பார்த்து கற்றுக்கொண்டேன் என்று லுங்கி இங்கிடி கூறினார்.
-
வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் : கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்
23 Aug 2025ராமேசுவரம் : வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் எதிரொலியாக 12 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்.
-
அமெரிக்காவில் விபத்து: 5 இந்தியர்கள் காயம்
23 Aug 2025நியூயார்க் : அமெரிக்காவில் சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கியதில் 5 இந்தியர்கள் உள்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
வருடாந்திர உச்சி மாநாடு: பிரதமர் மோடி 29- தேதி ஜப்பான்-சீனா பயணம்
23 Aug 2025புதுடெல்லி, பிரதமர் மோடி ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் இந்த பயணத்தை வருகிற 29-ந்தேதி தொடங்குகிறார்.
-
எஸ்.சுதாகர் ரெட்டி மறைவு: செல்வப்பெருந்தகை இரங்கல்
23 Aug 2025சென்னை : எஸ்.சுதாகர் ரெட்டி மறைவுக்கு தமிழ காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்,
-
விநாயகர் சிலை ரூ.474 கோடிக்கு காப்பீடு
23 Aug 2025மும்பை : மும்பையில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை ரூ.474 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
-
காசாவில் பஞ்சம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஐ.நா.
23 Aug 2025பாலஸ்தீனம் : காசாவில் கொடும் பஞ்சம் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஐ.நா.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
23 Aug 2025சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.
-
நிபந்தனைகளை ஏற்காவிட்டால் காசா நகரம் அழிக்கப்படும் : ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
23 Aug 2025டெல் அவிவ் : காசா நகரை முற்றுகையிட இஸ்ரேல் ராணுவத்துக்கு அனுமதி வழங்கவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று முன்தினம் அறிவித்ததை தொடர்ந்து பாதுகாப்பு அ
-
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேரள பயணம் உறுதி
23 Aug 2025சென்னை : எதிர்வரும் நவம்பர் மாதம் கேரளா மாநிலத்தில் நட்பு ரீதியிலான போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி விளையாடுவது உறுதி ஆகியுள்ளது.
-
ஆன்மிக பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
23 Aug 2025சென்னை : வைணவத் கோவில்களுக்கு புரட்டாசு மாதத்தில் கட்டணமில்லா ஆன்மிக பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
-
உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம-தேடும் பணி தீவிரம்
23 Aug 2025உத்தரகாண்ட் : உத்தரகண்டில் சமோலி மாவட்டத்தின் தாராலியில், மேகவெடிப்பால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க இந்திய ராணுவப் படைகள் களமிறங்கியு
-
விராட், ரோகித்தை பி.சி.சி.ஐ. ஓய்வு பெற வைக்கிறதா? சுக்லா விளக்கம்
23 Aug 2025டெல்லி : விராட், ரோகித்தை பி.சி.சி.ஐ. ஓய்வு பெற வைக்கிறதா என்று சுக்லா விளக்கம் அளித்துள்ளார்.
-
தூய்மை பணியாளர் பலி: 2 குழந்தைகளின் கல்விச் செலவை தி.மு.க. ஏற்கும்: அமைச்சர் தகவல்
23 Aug 2025சென்னை, உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்களின் கல்விச்செலவை அரசே ஏற்க்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
-
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ நியமனம்
23 Aug 2025நியூயார்க் : இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பதவி வகித்தவர் எரிக் கார்செட்டி.
-
ரூ.54.40 லட்சம் மதிப்பில் அரசு பள்ளியில் வகுப்பறை கட்ட பூமி பூஜை : விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
23 Aug 2025கன்னியாகுமரி : அரசு பள்ளியில் வகுப்பறை கட்ட ரூ.54.40 லட்சம் மதிப்பில் பூமி பூஜையை விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.
-
அனைத்து மக்களுக்குமான சமூக நீதி அரசாக தி.மு.க. மாடல் அரசு உள்ளது: சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Aug 2025சென்னை, மாநில உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.